A Promised Land

31 டிசம்பர் 2010

விடைபெறும் 2010ம் எதிர்பார்ப்புக்களுடன் 2011ம்


2010ம் ஆண்டின் இறுதி மணித்துளிகளில் இந்த பதிவினை எழுதுகிறேன். இதுவே இந்த ஆண்டின் என் இறுதிப் பதிவாகவும் இருக்கப்போகின்றது.
2010ம் ஆண்டு பலருக்கு நன்மையான ஆண்டாகவும் இன்னும் பலருக்கு கசப்பானதாகவும் இருந்திருக்கும் எல்லாம் நன்மைக்காகவே என்று எடுத்துக்கொண்ள்ளுங்கள் நண்பர்களே...

பதிவர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் நல்லதொரு ஆண்டாக அமைந்திருக்கின்றது. அதாவது 2010ம் ஆண்டின் இறுதிப்பகுதி மிகமகிழ்ச்சியானதாக அமைந்திருக்கும் எனக்கும் அப்படித்தான். பதிவர்கள் சந்திப்பின் மூலம் பல நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள். தொய்ந்திருந்த இலங்கை வலையுலகத்தினை வேகம் எடுக்கவைத்திருக்கின்றது இந்த இலங்கைத் தமிழ்ப்பதிவர் சந்திப்பு. இந்த வேகம் உற்சாகம் 2011ம் ஆண்டிலும் தொடரவேண்டும் என்பதே எனது அவாவாக இருக்கின்றது. அத்துடன் பதிவர்களுக்கு இடையில் மேலும் புரிந்துணர்வுகள் 2011ம் ஆண்டில் வளரவேண்டும்.

இன்னுமொன்றையும் சொல்லவேண்டும் அதாவது இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய மக்களுக்கோ மிகுந்த சோதனைகள் மிகுந்த ஆண்டாக 2010 ஆகிவிட்டது குறிப்பாக 2010 ன் இறுதி பகுதியை சொல்லலாம் கடும் மழையும் அதனால் ஏற்பட்ட வெள்ளஅபாயமும் அவர்களுடைய மனங்களை அவர்களுடைய நாளாந்த வாழ்க்கையினை மேலும் வடக்கு கிழக்கில் மோசமாக பாதித்துவிட்டது என்று கூறலாம் 2011ம் ஆண்டிலாவது அம்மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கவேண்டும் என்பதுதான் என்னுடையதும் இன்னும் பலருடையதுமான எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

முடிவு என்பது இன்னொன்றின் ஆரம்பமே அந்தவகையில் 2010ம் ஆண்டு விடைபெறுவதென்பது 2011ம் ஆண்டின் ஆரம்பத்துக்காகவே. அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு 2011ம் ஆண்டு எல்லோருக்கும் சிறந்த ஒரு ஆண்டாக அமைய எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு 2011 ம் ஆண்டு சந்திப்போமா நண்பர்களே!

29 டிசம்பர் 2010

காவலன் படத்தினை வெற்றிபெறச்செய்வோம்

தலைப்பை பார்த்தவுடன் விஜய் இரசிகர்கள் மிகுந்த சந்தோசமடைவார்கள் என்று நினைக்கின்றேன் சந்தோசப்பட்டால் மட்டும் போதாது சூட்டோடு சூடாக (எவன்டா அவன் அங்க சூடா என்ன வேணும் என்று கேட்கிறது?) எனக்குரிய சன்மானத்தினை வழங்கவேண்டும் என்று விஜயினுடைய இரசிகர்களைஅன்புடன் கேட்டுக்கொண்டு விடயத்திற்கு வருகிறேன்.

அண்மைக்காலமாக விஜய் நடித்த படங்கள் எல்லாம் பலத்த சாதனைகளை தோல்வியில் நிலைநாட்டிக்கொண்டிருப்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும் தொடர் தோல்விகள் தயாரிப்பாளர்களுக்கு தொடர் நட்டங்கள் இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகளை விஜய் தனது படங்களின்மூலம் சந்தித்தும் விஜய் திருந்துவதாக இல்லைப்போல்லாதான் தெரிகின்றது.  இந்தா வருகிறது அந்தா வருகிறது பொங்கலுக்கு வருகிறது என்று தியட்டர் இல்லாமல் காவலன் படத்தினுடைய வெளியீடு தள்ளிப்போய்கொண்டே இருக்கிறது. இந்த லட்சணத்தில மன்மதன் அம்பு படம் தோற்கவேணும் அப்போதுதான் காவலன் படம் வெளியிடுவதற்கு தியட்டர் கிடைக்கும் என்று கேனைத்தனமாக புலம்பிக்கொண்டு இருக்கும் விஜய் இரசிகர்களும் இருக்கிறார்கள் என்று இந்த நேரத்தில் சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. 

நான் உண்மையிலேயே விஜயினுடைய எதிர்பாளன்தான் ஆனால்பாருங்கோ எனக்கே விஜயினுடைய தோல்விப்படங்களை பார்த்து போரடிச்சுப்போச்சு பின்ன மொக்கை படங்களை தொடர்ந்து தந்தால் தோல்விக்குமேல் தோல்வி வராமல் வெற்றியா வரும் என்று விஜய் எதிர்ப்பாளர்கள் கேட்கிறது தெரிகின்றது (இப்போதெல்லாம் விஜய் இரசிகர்களே விஜயை திட்டுகிறஅளவுக்கு நிலமை ஆகியிருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது) அதோட இன்னும் எவ்வளவு நாள்தான் நாங்களும் மொக்கை படங்களையே பார்க்கிறது அதனான இனி வரும் படங்களின் கதைகளையாவது சரியாக தெரிவு செய்யவேண்டும் இதுதான் எனது கோரிக்கை. அதனால மொக்கை படமாக இருந்தாலும் காவலன் படமாவது வெற்றிபெறவேண்டும் என்று என்னுடைய உள்மனம் சொல்லுது ஆகவே மொக்கை படமாக இருந்தாலும் பரவாயில்லை சினிமா இரசிகர்களே காவலன் படத்தை பத்து பதினைந்து தடவையாவது தியட்டருக்கு சென்று பார்த்து படத்தினை வெற்றிபெறச்செய்யவேண்டும் என்று தாழ்மையாக வேட்டுக்கொள்ளுகிறேன். விஜய் காவலனுக்கு பிறகாவது நல்ல கதைகளை தெரிவு செய்து நடிகவேணும் என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட விருப்பம்கூட.

அப்புறம் விஜய் அவருடைய அப்பாவோட சேர்ந்து பல சொங்கித்தனமாக செய்யக்கூடாத விடயங்களை செய்வதற்கு தயாராகிறமாதிரி கதையெல்லாம் அடிபடுகிறது அதுதான் அவருடைய அரசியல் மேட்டர். அதற்காக விஜயை அரசியலுக்கு வரவேண்டாம் என்று சொல்லி நான் அவருடைய ஜனநாயக உரிமையை தடுக்க விரும்பவில்லை. அரசியலுக்கு வாங்கோ வந்து மக்களுக்கு நல்லதை செய்யுங்கோ ஆனால் சரியான நேரத்தில அரசியலுக்கு வாங்கோ என்றுதான் நான் கூறுகிறேன்.
விஜய்க்கும் ஆறாவது அறிவு என்ற ஒன்று இருக்குது என்று நான் நம்புறன் அதைவைச்சு அவர் நல்ல நேரத்தில நல்ல முடிவொன்றை எடுப்பார் என்று நான் நம்புறன்.

கடைசியிலையும் சொல்லுறன் மொக்கைபடமாக இருந்தாலும் எப்படியாவது காவலன் படத்தினை வெற்றிபெறச் செஞ்சிடுங்கோ இது இந்த விஜய் எதிர்பாளனின் தாழ்மையான வேண்டுகோள் அம்புட்டுத்தான் விசியம்...

27 டிசம்பர் 2010

சூடா என்ன இருக்கு என்று கேட்டது தப்பா? - அம்பு


தலைப்பை பார்த்தவுடனே பல அன்பு உள்ளங்களுக்கு(எப்புடியெல்லாம் ஐஸ் வைக்கவேண்டியிருக்கு) என்ன சொல்லவாறன் என்பது விளங்கியிருக்கும். பதிவே போடுறதில்லை என்று ஒரு குறிக்கோளேட இருந்தவனை கடைசியில விளக்கப்பதிவு எழுத வைச்சிட்டிங்களே.

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் அப்புடி நான் என்னத்தைய்யா கேட்டுட்டன்? சூடா என்ன இருக்கு" என்றுதானே கேட்டன் அந்த கடையில் வேலைசெய்த அந்த நண்பர் கொஞ்சம் நகைச்சுவையுணர்வு மிக்கவராக இருந்துவிடார் அவ்வளவுதான். அதைப்போய் உலக அளவில பேமஸ் ஆக்கிட்டிங்களேய்யா... இப்புடி என்னை புலம்ப வைச்சிட்டிங்களே. என்னுடன் அன்று கடைக்கு வந்த அந்த இரு நண்பர்களுக்கும் ஏதாவது செய்யணும்போல இருக்கு. உங்களுடைய கடமையுணர்வு புல்லரிக்க வைக்குதைய்யா...

------------------------
அண்மையில் மன்மதன் அம்பு திரைப்படம் பார்த்தேன் சமூகத்தில் இருக்கும் மிகப்பெரிய சவாலான விடயமான சந்தேகத்தினை கையில் எடுத்திருக்கின்றார் கமல்.

படத்தின் கதை - நான் சொல்லப்போறதில்லை போய் தியட்டுரில பாருங்கோ


நடிப்பு -
கமல் - ம்..ம்... நடிப்பு என்றாலே கமல் என்று ஒரு வரலாறே இருக்கு. கமலினுடைய நடிப்பைபற்றி நான்சொல்லித்தான் தெரியோணுமாக்கும்

மாதவன் - பட்டையை கிளப்பியிருக்கிறாரு மாதவன்

த்ரிஷா - பொண்ணு சும்மா அந்தமாதிரி நடிச்சிருக்கு. பின்ன கமல்படத்தில நடிக்க வந்துட்டு குருவி திருப்பாச்சி இதுபோன்ற படத்தில நடிச்சமாதிரி
நடிக்கமுடியுமே

சங்கீதா - அம்மணி கலக்கியிருக்கிறா அதுவும் அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் பின்னிட்டீங்க போங்க

ஏனையவர்களும் நன்றாக நடித்திருக்கின்றார்கள் குறிப்பாக ரமேஷ் அர்விந், சங்கீதாவின் மகனாகவரும் அந்த சுட்டி பையன், குஞ்சு குறூப்

இசை - நீலவானம் பாடல் மற்றும் பின்ணணி இசையில் கலக்கியிருக்கின்றார் தேவி ஶ்ரீ பிரசாத் என்பதைவிட கமல் DSPயை நன்றாக வேலைவாங்கியிருக்கின்றார் என்று சொல்லவேண்டும்

ஒளிப்பதிவு - இந்த படத்தில் ஒளிப்பதிவினைப்பற்றி சொல்லவேண்டும் அற்புதமாக படமாக்கியிருக்கின்றார் புதியவரான மனுஷ நந்தன். இவருடைய முதல்படத்திலேயே கலக்கியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

படத்தொகுப்பு - நீலவானம் பாடல் தொகுப்பு செய்யப்பட்ட விதம் அருமை. அத்துடன் படத்தொகுப்பும் அருமையாக இருக்கின்றது. ஷான் முஹம்தம் என்ற புதியவர்தான் படத்தொகுப்பு. முதல்படத்திலேயே நன்றாக வேலைசெய்திக்கின்றார்

இயக்கம் - கே.எஸ். இரவிக்குமார்   தனது பாணியிலேயே படத்தை இயக்கியிருக்கின்றார் ஆனாலும் படத்தின் பெரும்பாலான பகுதியில் கமலே
தனித்துவமாக தெரிகின்றார்
மொத்தத்தில் ஒரு கமலுடைய இரசிகனாக எனக்கு படம் திருப்தி அம்புட்டுத்தானுங்கோ...

இதை விமர்சனம் எண்டு நீங்க நினைச்சால்அதுக்கு கம்பனி பொறுப்பாகாது

எனக்கு பிடித்த கமலின் 10 படங்கள் (விளக்கங்களை பின்பு ஒரு பதிவில் விளக்கமாக தருகிறேன்)


1. 16 வயதினிலே
2.சலங்கைஒலி
3.குணா
4.நாயகன்
5.மூன்றாம்பிறை
6.குருதிப்புனல்
7. இந்தியன்
8.விருமாண்டி
9.அன்பேசிவம்
10.தசாவதாரம்

18 டிசம்பர் 2010

இலங்கைப் பதிவர்களின் கிரிக்கட் நேரடி ஒளிபரப்பு

உலகின் முன்ணணி விளையாட்டு நிகழ்வுகளை ஒளிபரப்பிவரும் ESPN, Star Sports, Ten Sports போன்றவற்றிற்கே சவால் விடும் நோக்கில் நாளை இடம்பெறவுள்ள தமிழ்ப் பதிவர்களின் கிரிகட் நேரடி ஒளிபரப்பினை சகபதிவர் கௌபோய் மது இலங்கையில் இருந்து உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளர் என்பதை சகலருக்கும் இத்தால் அறியத்தருகின்றேன்... இது தொடர்பாக பக்கோட தம்பி திருவாளர் கங்கோன் அவர்கள் வெளியிட்டிருக்கும் செய்தி கீழே உங்களுக்காக பிரதி செய்யப்பட்டு இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது


எதிர்வரும் 19ம் திகதி காலை 9.31 முதல் இலங்கையில் தமிழ்மொழிமூலமாகப் பதிவிடுகிற பதிவர்களின் சந்திப்பு ரொக்சி திரையரங்கிற்கு முன்னாலிருக்கிற தேசிய கலை இலக்கியப் பேரவை மண்டபத்தில் நடைபெறவுள்ளதை அறிந்திருப்பீர்கள்.
ஏற்பாட்டுக்குழுவினர் முழுமூச்சுடன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.

சந்திப்பினை வழமைபோல ஹக்கர் கெளபோய்மது அவர்கள் நேரடி ஒளிபரப்புச் செய்யவுள்ளார் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.
http://www.livestream.com/srilankantamilbloggers என்ற சுட்டியில் ஒளிபரப்பினை நீங்கள் காலை 9.31 (GMT: காலை 04.01) முதல் கண்டுகளிக்கலாம்.

அதைத்தவிர,
பதிவர்களிடையே அந்நியோன்னியத்தை வளர்க்கும் முகமாக, ஒருநாளை மகிழ்வுடன் களிக்கும் விதமாக நாளை காலை 9 மணிமுதல் இடம்பெறவுள்ள கிறிக்கற் போட்டியையும் நேரடி ஒளிபரப்புச் செய்யப்போவதாக ஹக்கர் கெளபோய்மது அறிவித்துள்ளார்.
மைதானம் என்பதால் தெளிவாக இருப்பது சிறிது கடினம் எனினும் தான் நேரடி ஒளிபரப்பு செய்வதில் குறியாக இருக்கிறார்.
அந்தப் போட்டியையும் நீங்கள் http://www.livestream.com/srilankantamilbloggers என்ற சுட்டியில் போட்டி தொடங்கியவுடன் பார்வையிடலாம்.

நன்றி.

சந்திப்போம் நண்பர்களே.

03 டிசம்பர் 2010

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - 03


இரண்டாவது பதிவர் சந்திப்பு நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகப் போகின்றது. இந்த கால எல்லைக்குள் நம்மிடையே குட்டி சந்திப்புகள் அவ்வப்போது நடந்திருந்தாலும் அனைத்துப் பதிவர்களும் சந்திக்கும் பாரிய சந்திப்புகள் ஒன்றும் நடைபெறாதது கவலைக்குரியதே. இக்குறையை ஓரளவுக்காவது நிவர்த்தி செய்யும் பொருட்டு பதிவர் சந்திப்பொன்றை நடாத்த முன்வந்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

பதிவர்கள், புதிய பதிவர்கள், பதிவுலகத்தை உற்றுநோக்குபவர்கள்(வாசகர்கள்) ஆகிய அனைவரும் கலந்து கொள்ளலாம். அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

இலங்கைத் தமிழ்ப்பதிவர் சந்திப்பு

இடம்: கைலாசபதி அரங்கு,
            தேசிய கலை இலக்கியப்பேரவை(ரொக்சி திரையரங்குக்கு எதிரில்),
            காலிவீதி, வெள்ளவத்தை, கொழும்பு –06
காலம்: 19ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, காலை 9.31 மணி

நிகழ்ச்சி நிரல்

  • அறிமுகவுரை
  • பதிவர்கள் அறிமுகம்
  • கலந்துரையாடல் 1 - கூகுல் குழுமத்தை வினைத்திறனுடன் பயன்படுத்தல் மற்றும் ஏனைய தொழிநுட்பப் பிரச்சினைகள் பற்றி ஆராய்தல்.
  • கலந்துரையாடல் 2 - தமிழ் தட்டச்சு கருவிகளும், அவற்றைப் பற்றிய ஆய்வுகளும் கருத்துக்களும்.
  • இடைவேளையில் இன்னிசை.
  • கலந்துரையாடல் 3 - பதிவுலகைத் தாண்டி பதிவர்கள் வழங்ககூடிய பங்களிப்புகளை ஆராய்தல்.
  • கலந்துரையாடல் 4 - பதிவர்களிடையே பதிவுலகம் சார் போட்டித் தன்மையை ஏற்படுத்தலும், அண்மைக்கால பதிவுலகில் உள்ள தொய்வுநிலை பற்றிய கருத்துப் பரிமாற்றமும்.
  • பதிவர்கள் தங்களுக்கிடையேயான கருத்து பரிமாற்றம்.

  • நன்றியுரை.

இதுவரை குழுமத்திலேயோ அல்லது பேஸ்புக்கிலேயோ இயலுமானவரை விரைவாக உறுதிப்படுத்தவும். இம்முறை ஏற்பாட்டுக்குழுவினர் 
நிரூஜாவதீஸ்அனுதினன்வரோஅஷ்வின்பவன்.

பி.கு – வெளியிடங்களிலிருந்து வருவோர் தங்குமிட வசதிகள் தேவைப்படின் பதிவர் அஷ்வினை 13ம் திகதிக்கு முதல் தொடர்புகொண்டால் உரிய வசதிகளைச் செய்து தரமுடியும்.


இது பதிவர்களால் பதிவர்களுக்கு நடாத்தப்படும் சந்திப்பு எனவே சந்திப்புத் தொடர்பான தட்டிகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது, அவற்றை உங்கள் வலைப்பூக்களில் இட்டு சந்திப்புக்கு ஆதரவு வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
தட்டிகளைப்பெற இங்கே சொடுக்குங்கள்

07 செப்டம்பர் 2010

டெங்கு.... Update..

டெங்கு....

இலங்கையில் பல மாதங்களாக அச்சுறுத்தி வரும் டெங்கு காரணமாக இதுவரையிலும் 208 பேர் பலியாகியுள்ளதாகவும் சுமார் 28 500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிததுள்ளது. இலங்கையின் தலைநகரிலேயே டெங்கு காரணமாக அதிகளவானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கம்பஹா யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்ட மக்களும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நோய் மேலும் பரவாமல் இருக்க உங்கள் சூழலை சுத்தமாக வைத்திருந்து நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்துங்கள்... டெங்கு வந்தால் எல்லோருக்கும் சங்குதான்

24 ஆகஸ்ட் 2010

இலங்கையில் 13வது மற்றும் 17வது திருத்த சட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் காணப்படுகின்ற சிக்கல்கள் என்ன?

எங்களுடைய நிறுவனம் தயாரித்து ஒளிபரப்பி வரும் "முக்காலம்" நிகழ்ச்சியில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் பிரஜைகளின் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஸ்ரீ.றங்காஆகியோர் கலந்து கொண்டு இது பற்றி கலந்துரையாடினார்கள். அது தொடர்பான காணொளியை இங்கே இணைத்திருக்கிறேன்

Mukkalam 09 - Effective and Efficient Implementation of State Decisions from Young Asia Television

03 ஜூலை 2010

உங்களுக்கு இலங்கை தமிழர் நாங்கள்தானா கிடைத்தோம் ?

"இலங்கைத்தமிழர்" தமிழ் உணர்வு" இலங்கையில் நடைபெறும் விழாக்களில் கலந்துகொள்ளும் சினிமா துறையினருக்கு தடை" "இலங்கைக்கு சென்றால் தடை" இலங்கை "இலங்கை" இவ்வாறான சொற்களை கேட்டு இணையங்களில் பார்த்து எனக்கு அலுத்துவிட்டதுடன் சம்பந்தப்பட்வர்களின்மீது கோபமும்தான் வருகின்றது. இன்று தமிழ் நாட்டில் அரசியல் செய்யவேண்டும் என்றால் ஏதோ ஒரு வகையில் இலங்கை பிரச்சனையை கையில் எடுக்க வேண்டிய நிலையில் தமிழ் நாட்டின் அரசியல் கலாச்சாரம் மாறிவிட்டதோ என எண்ணத்தோன்றும் அளவிற்கு நிலமை சென்றுவிட்டது.

இந்த எதிர்ப்பு அரசியல் கலாச்சராம் சில ஆண்டுகளுக்கு முன்னமே மிகவும் மும்முரமாக வெளித்தெரிய ஆரம்பித்தது என்றாலும் ஆரம்பம்தொட்டு சிறு சிறு எதிர்ப்புக்கள் இருந்தன ஆனாலும் இவ்வளவு தூரத்திற்கு அவை இருக்கவில்லை. எதிர்ப்புக்களால் மேலும் மேலும் துன்பப்படபோவது இங்கிருக்கும் தமிழ் மக்கள் என்பதை எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டும். வடபகுதியில் எரிக்கும் வெயிலின் மத்தியிலும் கொட்டும் மழையின் வெள்ளத்திலும் பொருளாதார ரீதியாகவும் எல்லா வகையாலும் நாளாந்தம் தங்கள் வாழ்க்கையினை நடத்துவதற்கு அம்மக்கள் படும்பாடு குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து அறிக்கைகளை வெளியிடும் தமிழ் உணர்வாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் எங்கு தெரியப்போகின்றது. இவர்களுடைய ஒரே நோக்கம் இலங்கைத்தமிழரை பயன்படுத்தி சந்தர்ப்ப அரசியல் செய்வதுதான். இந்த எதிர்ப்பரசியலுக்குள் தற்போது தமிழ் சினமாவும் சிக்கியிருப்பது பெரும் வேதனையான விடயம் என்றாலும் தமிழ் சினிமாவில் அரசியல் கலந்திருப்பது சாராதரணமான ஒன்றுதானே.

இவற்றைபற்றி பந்தி பந்தியாக எழுதுவதற்கு எனக்கு உடன்பாடு இல்லை. எனக்குள்ளும் இவர்களின் மேல் இந்த சமூகத்தின்மேல் பல உலக நியதிகளின்மேல் நியாயமான கோபம் இருக்கிறது ஆனாலும் நியாயமான கோபங்களுடன் வாழும் சாமானியன் என்று என்னால் கூறமுடியாமல் இருக்கிறது ஏனென்றால் தொழிலால் நான் ஒரு ஊடகவியலாளன். தமிழ் உணர்வாளர்களின் எதிர்புக்களை இலங்கையில் இருக்கும் பெரும்பாலான தமிழர்கள் விரும்பவில்லை என்பதையும் உங்கள் எதிர்ப்புக்களால் தொடர்ந்தும் பாதிக்கப்படபோவது இலங்கையில் இருக்கும் தமிழர்களாகிய நாங்களே என்பதை எதிர்பாளர்களும் சம்பந்தப்பட்வர்களும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே எனது கோரிக்கை.

05 ஜூன் 2010

பிறந்தநாள் வாழ்த்து -வயசை மட்டும் கேட்காதீங்கப்பா?

ஊடக உலகிலும் பதிவுலகிலும் நன்கு அறியப்பட்ட எல்லோருடனும் இயல்பாகவும் நட்பாகவும் பழகும் அறிவிப்பாளர் பதிவர் நண்பர் லோஷன் அண்ணா அவர்களுக்கு பிறந்தநாள் வாழத்துக்கள்...



எலே இதுக்குப்பிறகும் யாரும் வயசை கேட்பீங்களா?

31 மே 2010

அங்காடித்தெருவும் பதிவுலக விருதுகளும் - சே! வடைபோச்சே


வெளிவந்து பலநாட்களாகியும் எனக்கு பார்ப்பதற்கு நேற்றுவரையும் சந்தர்ப்பம் இல்லாதுபோன திரைப்படம்தான் அங்காடித்தெரு. மிக இயல்பான பல விடயங்களை ஆழமாக கூறும் ஒரு திரைப்படம்தான் இது.பார்த்தவுடன் பிடித்துப்போய்விட்ட நல்ல ஒரு சினிமாவை எங்களுடைய கண்முன்நிறுத்திய பட இயக்குனர் வசந்தபாலனுக்கு பாராட்டுகள்.இப்படத்தில் நடித்த நடிகர்களுடைய இயல்பான நடிப்பு, இசை போன்றவற்றை இரசிக்கலாம். படம்வெளிவந்து இவ்வளவு நாட்களுக்கு பின் அதைப்பற்றி விமர்சனம் எழுதுவது எனக்கு சரியாக படவில்லை. ஆனாலும் எனக்கு வடைபோச்சே...ஏனென்று கேட்கிறீர்களா?
பதிவர் சதீஷ் மற்றும் பலரும் தற்போது இணையத்தில் ஆரம்பித்த முயற்சிதான் திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் - 2010. மிகவும் பாரிய விளம்பரங்களுடன் பதிவர்களால் நடத்தப்பட்டுவரும் இவ்விருது வழங்கும் முயற்சிபாராட்டத்தக்க விடயம்தான். அதில் சிறந்த திரைப்படத்திற்கு வாக்களித்தவிட்டுதான் அங்காடித்தெருவை பார்த்தேன். மனது கனத்துவிட்டது. அட இந்தப்படத்திற்கு வாக்கிளிக்க முடியாமல் போய்விட்டதென்று.ம்...பார்ப்போம் இன்னும் 3வாரங்கள் இருப்பாதாக கூறுகின்றார்கள். நண்பர்கள், ஓட்டுப்போடுபவர்கள் இந்தப்படத்திற்கு எப்படியும் அமோக ஆதரவினை வழங்குவார்கள் என நான் நம்புகின்றேன். உங்களுடைய பொன்னான வாக்குகளையும் நீங்களும் அளிக்கலாம்...நீங்களும் வாக்களிக்க இங்கே கிளிக்குங்கள்

09 மார்ச் 2010

தமிழ் அரசியல் தலைவர்களும் கூட்டமைப்பும்....

இம்முறை பாராளுமன்ற தேர்தல் இடம் பெறப்போவதாக அறிவித்த நாளில் இருந்து பரபரப்புக்களுக்கு பஞ்சமில்லை. இதில் பத்திரிகைகளில் அனேகமாக தமிழ் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய செய்திகளையே அதிகமாக தாங்கி வருகின்றன. இம்முறை தமிழ் பிரதேசங்ககளில் போட்டியிடுவதற்கு பல கட்சிகளும் சுயேட்சையாக ஏராளமான வேட்பாளர்களும் போட்டியிடுகின்றார்கள்.

2004 ம் ஆண்டு இடம் பெற்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 22 ஆசனங்களை வடகிழக்கில் பெற்று அமோக வெற்றியை பெற்றிருந்தது. இந்த வெற்றியினை இல்லாமல் செய்வதற்காகவே இவ்வாறு ஏராளமானோர் வடகிழக்கில் சுயேட்சையாக போட்டியிடுகின்றார்கள்(போட்டியிட வைக்கப்படுகின்றார்கள்) போலத்தான் எனக்கு புலப்படுகின்றது. காசு கொடுத்து அரசு சுயேற்சை குழுக்களை போட்டியிட வைக்கின்றது என யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்ணணி வேட்பாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட அண்மையில் யாழ்நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். அதேபோல மற்றுமொரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அரியநேந்திரன் அண்மையில் தமிழ் வாரவெளியீடு ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்யுமாறு சுயேற்சை வேட்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றார். இவர்களுடைய கருத்துக்களையும் உதாசீனம் செய்துவிட முடியாது.

இன்னுமொரு முக்கியமான விடயம்தான் கடந்த தேர்தலில் விடுதலைப் புலிகளால் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு தமிழ் தேசியகூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட பலரை கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றியமை. இது பல மட்டங்களில் பெரும் சர்ச்சையை அண்மையில் கிளப்பிவிட்டிருந்தது. இதன் காரணமாக வெளியேற்றப்பட்டவர்கள் தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்ணணி என்ற பெயரில் வடகிழக்கில் போட்டியிடுகின்றார்கள். இதன் மூலம் தற்போதைக்கு அந்த விவகாரம் அப்படியே தணிந்திருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இவர்களுக்கும் இடையே ஊடக அறிக்கை மூலமான விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றமையை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

இதனிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது விழுந்திருக்கும் இன்னுமொரு குற்றச்சாட்டுதான் தமிழ் மக்களுடைய ஏக பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக இருந்த கொள்கைகளை கைவிட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகாளால் நிராகரிக்கப்பட்ட ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் பேசுவதற்கு தயார் என்று அறிவித்திருப்பதாக தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்ணணி தெரிவிக்கின்றது. ஒஸ்லோ பிரகடனத்தை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டார்களா இல்லையா என்று விவாதிப்பதற்கா நேரம் இதுவல்ல. உலக அரங்கில் இலங்கை தமிழர்களுடைய அரசியல் ஸ்திரத்தினை தெளிவாக நிரூபிக்க வேண்டிய காலம் இது. 2004ம் ஆண்டு உலக நாடுகளுக்கும் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் தங்களுடைய அரசியல் பலத்தினை நிரூபிக்க வேண்டியமை எவ்வளவு முக்கியமானதாக இருந்ததோ அதைவிடவும் தற்போது நிரூபிக்க வேண்டிய தேவையிருப்பதாக நான் கருதுகின்றேன்.

மற்றையது பிராந்தய வல்லரசு அயல்நாடு என்பதையும் கடந்து இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை என்று வரும்போது இந்தியாவின் செல்வாக்கானது மிகமுக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. என்னை பொறுத்தவரையில் தமிழ் Nசிய கூட்டமைப்பு இதனை தெளிவாக புரிந்துகொண்டுள்ளது போன்றுதான காணப்படுகின்றது. சுட்டமைப்பானது ஈழப்பிரச்சனை தொடர்பில் இந்தியாவிடம் இருந்து எதனையோ எதிர்பார்ப்பது அல்லது இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதற்கு முயற்சிக்கினறது போலத்தான் புலப்படுகின்றது. இதன் ஒரு நடவடிக்கையாகத்தான் புதுடில்லியில் அர்களுடைய காரியாலயம் ஒன்றை நிறுவது தொடர்பான திட்டம் என்றுகூட கூறலாம். கடந்த நாட்களில் கூட இந்திய வெளியுறவு செயலர் நிருபமாராவ் இலங்கைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதியுடனும் அரசியல் கட்சிகள் சிலவற்றுடனும் பேச்சு நடத்தியிருந்தார்.

எது எவ்வாறாயினும் விடுதலைப்புலிகள் இருந்த காலப்பகுதியில் ஒன்றாக ஒற்றுமையாக(?) இருந்த தமிழ் தலமைகள் விடுதலைப்புலிகளுடைய வீழ்ச்சியின் பின்னர் இவ்வாறு பிளவுபட்டு நிற்பது தமிழ் மக்களுடைய அரசியல் போராட்டத்துக்கும் ஒரு பெரும் பின்னடைவே. எது எப்படியோ தமிழ் கட்சிகளுக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த பிளவுகள் தமிழ் மக்களுடைய அரசியல் ஸ்;திரத்தில் பாரிய தாக்கத்தினை எதிர்காலத்தில் செலுத்தப்போகின்றது என்பதுதான் உண்மை என்பதனை தமிழ் மக்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ் தலமைகள் ஐக்கியப்பட்டு ஒற்றுமையாக இருப்பார்களெயனால் தமிழ் மக்களுக்கான உரிமைகள் அபிலாசைகளை பற்றி இலங்கையின் அரசியல் தலமைகளுடன் கதைப்பதற்கு இலகுவானதாகும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

04 மார்ச் 2010

தேர்தல் கூத்துக்கள்

தேர்தல் என்று ஒன்று வந்தவிட்டாலே பரபரப்புக்களுக்கு குறைவிருக்காது. கட்சி தாவல்கள் அடிதடி சண்டைகள் என்று இவற்றை அடுக்கிக்கொண்டு போகலாம். ஆனால் இங்கு நான் சொல்லப்பொவது எனக்கு தெரிந்த கூத்துக்களைதான்

தேர்தலில் வேட்பாளருக்குரிய இலக்கங்களை பெறும்போது கட்சிகளினால் மேற்கொள்ளப்படும் கூத்துக்கள். இது சம்பந்தமாக நான் சில நாட்களுக்கு முன்னமே அறியக்கூடியதாக இருந்தது. அதாவது மலையகத்தில் போட்டியிடும் ஒரு பிரபல்ய தமிழ் கட்சிக்கு எப்போது தேர்தலில் 8ம் 9ம் 10 வது இலக்கங்களை கட்டாயமாக வழங்க வேண்டுமாம். அதேபோல மற்றும் ஒரு கட்சிக்கு 2ம் 3ம் 4ம் இலக்கங்களை கட்டாயம் வழங்க வேண்டுமாம். இந்த இருகட்சிகளுக்கும் வழங்கப்படும் இந்த இலக்கங்களை தவிர்ந்து ஏனைய இலக்கங்களைத்தான் ஏனையோருக்கு தேர்தல் அலுவலகம் வழங்க வேண்டுமாம். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது 1வது இலக்கத்தை பெறுவதற்காக தங்களுடைய முதல் எமுத்துக்களை மாற்றிகொள்பவர்களும் வேட்பாளர்களாக எமது நாட்டில் இருக்கின்றார்கள். அதாவது ஆங்கில முதல் எழுத்தான “A” யை தனது பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வார்களாம். இதனால் 1வது இலக்கம் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை. ஏனென்றால் இலக்கங்கள் வழங்கும்பொது ஆங்கில எழுத்துக்களின் வரிசையிலேயே இலக்கங்கள் வழங்கப்படுவது வழமையானதினாலாகும்.

இப்படி எனக்கு தெரிந்த தேர்தல் கூத்துக்கள் இவை. ஆனால் இன்னும் எத்தனையோ கூத்துக்கள் தில்லுமுல்லுகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. உங்களுக்கும் இவ்வாறான கட்சிகளின் தில்லுமுல்லுக்ள ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள் எங்களுக்கும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். ஏனென்றால் பொதுமக்களுக்கு அரசியல்வாதிகள் கட்சிகளின் பல விடயங்கள் தெரிந்திருப்பதில்லை. இவ்வாறான ஆக்கங்கள் மூலமாகவாவது வேட்பாளர்கள் கட்சிகள் அடிக்கும் கூத்துக்களை அவர்களும் தெரிந்து கொள்ள முடியும்.

என்னை அடிக்கடி உறுத்தும் ஒரு கேள்விதான் தேர்தலில் ஒருவேட்பாள் மக்களின்மூலம் வராமல் ஏன் கட்சி தலைவர்கள் மூலம் தெரிவு செய்யப்படுகின்றார்கள் என்பதுதான். இவ்வாறு கட்சி தலைவரினால் ஒரு வேட்பாளர் நேரடியாக தெரிவு செய்யுமிடத்து அவர் மக்களுக்கு சேவைசெய்ய வேண்டிய அல்லது மக்களுக்கு பதில் சொல்ல அவசியமில்லாமல் போகின்றது. அந்த வேட்பாளர் தன்னை தெரிவு செய்த கட்சிக்கோ அல்லது தலைவருக்கே பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு இதன்மூலம் தள்ளப்படுகின்றார். ஆனால் எது எப்படியானாலும் மக்கள்தான் வாக்களிக்கவேண்டும். அது அவர்களுடைய ஜனநாயக கடமை என்பதோடு மட்டுமே நின்று விடுகின்றது அவர்ககளுடைய பங்கு. இதனால் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் தேர்தலின் பின்னர் தவிடுபொடியாகி விடுகின்றது.

04 பிப்ரவரி 2010

இலங்கை தமிழ் அரசியல் கைதிகள்

எங்களுடைய நாட்டில் என்று அவசரகால சட்டமும் பயங்கரவாத தடைச்சட்டமும் கொண்டுவரப்பட்டதோ அன்றிலிருந்து சந்தேகத்தின் பெயரில் ஒருவரை தடுத்து வைத்திருப்பதென்பது இயல்பாகி போனதொன்றாகிவிட்டது. எத்தனையோ தாய் தந்தையர் தங்களுடைய பிள்ளைகளுக்காகவும் பல மனைவிமார் தங்களது கணவர்களையும் பிள்ளைகள் அப்பாவையும் சிறையிலே சென்று பார்பதை தவிர அவர்களுக்கு முன்னால் வேறுஒர தெரிவும் இல்லாமல் இருக்கிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பலர் விடுதலை செய்யப்பட்டாலும் இன்னும் விசாரணைகள் இன்றி எத்தனைபேர் சிறைகளில் வாடுகின்றனர். இவர்கள்மீது முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டாக விடுதலைப்புவிகளுக்கு உதவி செய்தனர் அல்லது பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணைபோயினர் என்று சொல்லப்படுகின்றது. இவர்கள் தொடர்பான ஒரு சிறிய தொகுப்பு யா ரிவி நிறுவனத்தினால் அண்மையில் தயாரிக்கப்பட்டது. அந்த தொகுப்பையும் பாதிக்கப்பட்டவர்ளின் அழுகுரலையும் இந்த நாட்டு அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளும் இதோ இந்த காணொளியில்...

16 ஜனவரி 2010

மாற்றம் ஏற்படாது தடுக்க வேண்டும்

தலைப்பை பார்த்தவுடனேயே ஏதோ அரசியல் பதிவு என்று நினைக்கவேண்டாம். இது இயற்கையுடன் சம்பந்தப்பட்ட ஒரு பதிவு. அதாவது தற்போது புவியானது நாளுக்கு நாள் வெப்பமடைந்து வருகின்றது. இதற்கு முக்கியமான காரணமாக மனிதனது செயற்பாடுகளை கூறலாம். அதிகரித்து வரும் நகர மயமாக்கல் இதற்கு முக்கியமான காரணமாகும்.
காலநிலை மாற்றத்தைால் எரிர்காலத்தில் புவியானது பாரிய சவால்களை சந்திக்க வேண்டி வரும். எனவே எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு தற்போதே சரியான திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும். இயற்கை சூழலை பாதுகாக்க வேண்டும். அதற்கு புவியில் உள்ள ஒவ்வொருவருடைய பங்களிப்பும் முக்கியம் .

இயற்கையை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு www.earthlanka.net எனும் இணையத்தளம் செயற்பட்டு வருகின்றது. தற்போது கொழும்பில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் EDEX 2010 கண்காட்சியில் Earthlanka தனது கண்காட்சி கூடத்தினை Green Zone ல் நிறுவியிருக்கின்றது. நீங்களும் EDEX 2010 கண்காட்சிக்கு சென்றால் ஏர்த்லங்காவின் Green Alliance கண்காட்சி ‍கூடத்திற்கு சென்று மேலதிக விபரங்களை பெற்று கொள்ளலாம்.
உங்களது கருத்துக்களை அவர்களுடைய கீழ்வரும் வலைப்பதிவிற்கு சென்று பதியலாம். உங்களுடை பெறுமதியான கருத்துக்கள் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றகண்காணிப்பு குழுவினருக்கு அனுப்பிவைக்கப்படும்.
வலைப்பதிவு இங்கே அழுத்தவும்
www.earthlanka.com
Join Earthlanka Fan Club on Facebook "One Earth" Click Here

12 ஜனவரி 2010

பிணையில் விடுதலையானார் ஊடகவியலாளர் திசநாயகம்

2008ம் ஆண்டு மார்ச் மாதம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு கடந்தவருடம் இலங்கை மேல்நீதிமன்றத்தினால் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் திசநாயகம் பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய மேல் முறையீட்டு மனுவானது இன்னும் விசாரணையில் இருக்க அவரால் தாக்கல் செய்யப்பட்ட பிணைமனுவின் தீர்பின் ஊடாகவே இவர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் பேசும் மக்களுக்காக குரல்கொடுத்த இவரது விடுதலையானது மகிழ்ச்சி அளித்தாலும் ஏனைய அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே எனது கோரிக்கை

08 ஜனவரி 2010

எதிர்பார்பை அதிகரிக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா


பாடல்கள் மற்றும் இயக்குனர் நடிகர் என்று பல கோணங்களில் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் படம்தான் “விண்ணைத்தாண்டி வருவாயா” வாரணம் ஆயிரத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கியிருக்கும் திரைப்படம், வழக்கமக தனது படங்களுக்கு இசையமைக்கும் ஹரிஸ் ஜெயராஜை கழற்றி விட்டுவிட்டு ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையுடனும் லிட்டில் சுப்பர் ஸ்டார் சிம்பு மற்றும் திரிஷாவும் இணையும் இந்த படம் மிகவும் எதிர்பார்ப்பினை தோற்றுவித்துள்ளது. எங்களை ஒருகணம் சிலிர்க்கச்செய்த வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்கு பின்னர் ஒரு அழகிய காதல்கதையுடன் வெளிவரும் படமென்று விண்ணைத்தாண்டி வருவாயா என்று கூறப்படுகின்றது.எதிர்பார்ப்பிற்கு இன்னுமொரு காரணம் அண்மையில் வெளியாகியிருக்கும் பாடல்கள் என்பதையும் கூறலாம். அண்மையில் பிபிசி தொலைக்காட்சியில் விண்ணைத்தாண்டி வருவாயா பாடலும் ஏ,ஆ.ரஹ்மானின் நேர்காணலும் ஒளிபரப்ப்பட்டிருந்தது. அத்தோடு பாடல் வெளியீடானது லண்டனிலேயே இடம்பெற்றது என்பதனையும் குறிப்பிட்டாக வேண்டும்.

"விண்ணைத்தாண்டி வருவாய" பாடல்களில் அந்த "ஹோசான" பாடலை குறிப்பிட்டு கூறலாம். தாமரையின் அருமையான வரிகளுக்கு தனது பாணியினிலே சிறந்த ஒரு இசையினை ரஹ்மான் வழங்கியிருக்கின்றார் என்றே கூறமுடியும். அத்துடன் அதில் கலந்திருக்கு இசை நுணுக்கம் போன்றவற்றை வைத்து பார்த்தால் நிற்சயம் இந்தப் பாடல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நல்ல ஒரு பெயரினையும் இந்த ஆண்டின் சிறந்த பாடல் என்ற இடத்தை பெற்றுவிடும் என்பதில் ஐய்யமில்லையென்பது என்கருத்து.

"ஹோசான" பாடலை கேட்டு மகிழ