A Promised Land

அரசியல்வாதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல்வாதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 அக்டோபர் 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வைக்கோற்பட்டறை நாயா?


மேலே தலைப்பில் குறிபிபட்ட விடயம் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வெளிப்படையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்த விடயம். இலங்கையின் கடந்த வார பீக் செய்திகள் எல்லாம் யாழ்ப்பாணத்திற்கான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விஜயமும் யாழ்தேவியின் மீள்வருகையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புறக்கணிப்பும்தான்.



இலங்கை ஜனாதிபதி தன்னுடைய அரசியல் செல்வாக்கை தென்னிலங்கையில் அதிகரித்துக்கொள்ளவும் அடுத்த ஆண்டில் இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலை கருத்தில் கொண்டுமே தன்னுடைய யாழ் விஜயத்தினை ஏற்பாடு செய்திருக்கின்றார் என்பது பலருடைய கருத்து. அங்கே இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டங்களில் அவர் தெரிவித்த கருத்துக்களும் மேலுள்ள கூற்றுக்கு மேலும் வலுச் சேர்ப்பதாகவுமே காணப்பட்டது. யாழ்தேவி பயணத்தினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தயை ஊடகங்கள் முதன்மையாக காட்டியிருந்தாலும் அதையும் தாண்டி பல செயற்திட்டங்களை அவர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்திருந்தார். அவற்றில் பாடசாலைகளுக்கு ஆய்வுகூடங்கள் மற்றும் பல திட்டங்கள் என்பவை அடங்கும். இவை பெரிதாக ஊடகங்களால் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் ஏற்றுக்கூடியவையா? 



இதேவேளை வடக்கு மாகாண சபையினை தன்னுடைய கையில் வைத்திருக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஜனாதிபதியின் இந்த யாழ் விஜயத்தினை வெளிப்படையாகவே புறக்கணித்திருந்தது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்போ எம்பிக்களோ வடமாகாணசபை உறுப்பினர்களோ யாருமே எந்த வித நிகழ்வுகளிலும் பங்கெடுக்கவில்லை. ஆனால் வடமாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் நிகழ்வுகளில் பங்கெடுத்தனர்.


யுத்தம் முடிந்த பின்னர் மனித சிவில் உரிமைகள் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை மற்றும் இராணுவ பிரசன்னம் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் காணப்படுகின்றது இதுபோன்ற நிலையில் மகிந்தவின் விஜயம் அரசியலை அடிப்படையாக கொண்டது ஆகவேதான் இவ்விஜயத்தினை புறக்கணிக்கின்றோம் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். இதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கலாம் ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வடமாகாண அபிவிருத்திக்கூட்டத்தில் பங்குபற்றாமல் விட்டது விமர்சிக்கவேண்டிய ஒன்று. சிவில் உரிமைகள் கிடைக்கவில்லை எனப்போரடுவது ஏற்கத்தக்கதுதான் ஆனால் அதைக்காட்டி மக்கள் வாழம் பிரதேசங்களில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்பாடுகளில் பங்குபற்றாமல் இருப்பது விமர்சிக்க வேண்டியது.


வடக்கின் காப்பட் வீதிகளில் தாங்கள் சொகுசாக பயணிக்க சொகுசு வாகனங்களை அரசாங்கத்திடம் கேட்டு வாங்குவதில் வடமாகாணசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இருக்கின்ற ஆர்வம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு பெற்றுக் கொள்வதற்கு அல்லது பெற்றுக் கொடுப்பதற்கு இல்லாமல் இருக்கின்றது. 


என்ன நடந்தாலும் மக்கள் மஹிந்தவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் டக்ளசுக்கு வாக்களிக்கமாட்டார்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பான (இலங்கை தமிழரசு கட்சி) தமக்கே வாக்களிப்பார்கள் என்ற ஒரு நம்பிக்கையினை வைத்துக்கொண்டு தமிழரசு கட்சியினர் எழுந்தமானமாக செயற்படுகின்றனர். ஆனால் மக்கள் எவ்வளவுநாள்தான் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பின்னாலே போவார்கள் என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால் தமிழர்கள் தாங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதை மிகத் தெளிவாக தெரிந்து வைத்திருக்கின்றார்கள். வேறு வழிகள் இல்லாத காரணத்தினால் விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களிக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.


இலங்கைத் தமிழரசு கட்சியின் தமிழீழ கனவில் சிக்கி சின்னாபின்னமாகி இறுதியில் அழிந்துபோனது அப்பாவி மக்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும்தான். அந்த அழிவு போர் எம்மோடே போகட்டும் எங்களுடைய எதிர்கால சந்ததிக்கு வேண்டாம் என்பதுதான் இன்று இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களின் எதிர்பார்ப்பு. அதற்கு இன்றைய நவீனகால அரசியலை சமாளிக்கும் திறனுடைய பலமான தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் அணியொன்று தமிழர்களுக்கு தேவை. அதுதான் காலத்தின் கட்டாயம்கூட. அவ்வாறு ஒரு இளைய அணியொன்று  அரசியலில் எழுமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு இறுதி செய்யப்படு புதிய அரசியல் எழுற்சி ஒன்று ஏற்படும். ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலையில் தமிழர்கள் இன்று இருக்கின்றார்கள். காரணம் இன்றைய நாட்டின் சூழல் பலமான இளைஞர் அணியொன்றை அரசியலில் கட்டியெழுப்ப சந்தர்ப்பத்தினை வழங்குமா என்பது முக்கியமான கேள்வி. அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்ற பழமொழிதான் இந்த இடத்தில் எனக்கு நினைவுக்கு வருகின்றது.

09 மார்ச் 2010

தமிழ் அரசியல் தலைவர்களும் கூட்டமைப்பும்....

இம்முறை பாராளுமன்ற தேர்தல் இடம் பெறப்போவதாக அறிவித்த நாளில் இருந்து பரபரப்புக்களுக்கு பஞ்சமில்லை. இதில் பத்திரிகைகளில் அனேகமாக தமிழ் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய செய்திகளையே அதிகமாக தாங்கி வருகின்றன. இம்முறை தமிழ் பிரதேசங்ககளில் போட்டியிடுவதற்கு பல கட்சிகளும் சுயேட்சையாக ஏராளமான வேட்பாளர்களும் போட்டியிடுகின்றார்கள்.

2004 ம் ஆண்டு இடம் பெற்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 22 ஆசனங்களை வடகிழக்கில் பெற்று அமோக வெற்றியை பெற்றிருந்தது. இந்த வெற்றியினை இல்லாமல் செய்வதற்காகவே இவ்வாறு ஏராளமானோர் வடகிழக்கில் சுயேட்சையாக போட்டியிடுகின்றார்கள்(போட்டியிட வைக்கப்படுகின்றார்கள்) போலத்தான் எனக்கு புலப்படுகின்றது. காசு கொடுத்து அரசு சுயேற்சை குழுக்களை போட்டியிட வைக்கின்றது என யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்ணணி வேட்பாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட அண்மையில் யாழ்நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். அதேபோல மற்றுமொரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அரியநேந்திரன் அண்மையில் தமிழ் வாரவெளியீடு ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்யுமாறு சுயேற்சை வேட்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றார். இவர்களுடைய கருத்துக்களையும் உதாசீனம் செய்துவிட முடியாது.

இன்னுமொரு முக்கியமான விடயம்தான் கடந்த தேர்தலில் விடுதலைப் புலிகளால் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு தமிழ் தேசியகூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட பலரை கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றியமை. இது பல மட்டங்களில் பெரும் சர்ச்சையை அண்மையில் கிளப்பிவிட்டிருந்தது. இதன் காரணமாக வெளியேற்றப்பட்டவர்கள் தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்ணணி என்ற பெயரில் வடகிழக்கில் போட்டியிடுகின்றார்கள். இதன் மூலம் தற்போதைக்கு அந்த விவகாரம் அப்படியே தணிந்திருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இவர்களுக்கும் இடையே ஊடக அறிக்கை மூலமான விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றமையை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

இதனிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது விழுந்திருக்கும் இன்னுமொரு குற்றச்சாட்டுதான் தமிழ் மக்களுடைய ஏக பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக இருந்த கொள்கைகளை கைவிட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகாளால் நிராகரிக்கப்பட்ட ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் பேசுவதற்கு தயார் என்று அறிவித்திருப்பதாக தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்ணணி தெரிவிக்கின்றது. ஒஸ்லோ பிரகடனத்தை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டார்களா இல்லையா என்று விவாதிப்பதற்கா நேரம் இதுவல்ல. உலக அரங்கில் இலங்கை தமிழர்களுடைய அரசியல் ஸ்திரத்தினை தெளிவாக நிரூபிக்க வேண்டிய காலம் இது. 2004ம் ஆண்டு உலக நாடுகளுக்கும் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் தங்களுடைய அரசியல் பலத்தினை நிரூபிக்க வேண்டியமை எவ்வளவு முக்கியமானதாக இருந்ததோ அதைவிடவும் தற்போது நிரூபிக்க வேண்டிய தேவையிருப்பதாக நான் கருதுகின்றேன்.

மற்றையது பிராந்தய வல்லரசு அயல்நாடு என்பதையும் கடந்து இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை என்று வரும்போது இந்தியாவின் செல்வாக்கானது மிகமுக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. என்னை பொறுத்தவரையில் தமிழ் Nசிய கூட்டமைப்பு இதனை தெளிவாக புரிந்துகொண்டுள்ளது போன்றுதான காணப்படுகின்றது. சுட்டமைப்பானது ஈழப்பிரச்சனை தொடர்பில் இந்தியாவிடம் இருந்து எதனையோ எதிர்பார்ப்பது அல்லது இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதற்கு முயற்சிக்கினறது போலத்தான் புலப்படுகின்றது. இதன் ஒரு நடவடிக்கையாகத்தான் புதுடில்லியில் அர்களுடைய காரியாலயம் ஒன்றை நிறுவது தொடர்பான திட்டம் என்றுகூட கூறலாம். கடந்த நாட்களில் கூட இந்திய வெளியுறவு செயலர் நிருபமாராவ் இலங்கைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதியுடனும் அரசியல் கட்சிகள் சிலவற்றுடனும் பேச்சு நடத்தியிருந்தார்.

எது எவ்வாறாயினும் விடுதலைப்புலிகள் இருந்த காலப்பகுதியில் ஒன்றாக ஒற்றுமையாக(?) இருந்த தமிழ் தலமைகள் விடுதலைப்புலிகளுடைய வீழ்ச்சியின் பின்னர் இவ்வாறு பிளவுபட்டு நிற்பது தமிழ் மக்களுடைய அரசியல் போராட்டத்துக்கும் ஒரு பெரும் பின்னடைவே. எது எப்படியோ தமிழ் கட்சிகளுக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த பிளவுகள் தமிழ் மக்களுடைய அரசியல் ஸ்;திரத்தில் பாரிய தாக்கத்தினை எதிர்காலத்தில் செலுத்தப்போகின்றது என்பதுதான் உண்மை என்பதனை தமிழ் மக்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ் தலமைகள் ஐக்கியப்பட்டு ஒற்றுமையாக இருப்பார்களெயனால் தமிழ் மக்களுக்கான உரிமைகள் அபிலாசைகளை பற்றி இலங்கையின் அரசியல் தலமைகளுடன் கதைப்பதற்கு இலகுவானதாகும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

04 மார்ச் 2010

தேர்தல் கூத்துக்கள்

தேர்தல் என்று ஒன்று வந்தவிட்டாலே பரபரப்புக்களுக்கு குறைவிருக்காது. கட்சி தாவல்கள் அடிதடி சண்டைகள் என்று இவற்றை அடுக்கிக்கொண்டு போகலாம். ஆனால் இங்கு நான் சொல்லப்பொவது எனக்கு தெரிந்த கூத்துக்களைதான்

தேர்தலில் வேட்பாளருக்குரிய இலக்கங்களை பெறும்போது கட்சிகளினால் மேற்கொள்ளப்படும் கூத்துக்கள். இது சம்பந்தமாக நான் சில நாட்களுக்கு முன்னமே அறியக்கூடியதாக இருந்தது. அதாவது மலையகத்தில் போட்டியிடும் ஒரு பிரபல்ய தமிழ் கட்சிக்கு எப்போது தேர்தலில் 8ம் 9ம் 10 வது இலக்கங்களை கட்டாயமாக வழங்க வேண்டுமாம். அதேபோல மற்றும் ஒரு கட்சிக்கு 2ம் 3ம் 4ம் இலக்கங்களை கட்டாயம் வழங்க வேண்டுமாம். இந்த இருகட்சிகளுக்கும் வழங்கப்படும் இந்த இலக்கங்களை தவிர்ந்து ஏனைய இலக்கங்களைத்தான் ஏனையோருக்கு தேர்தல் அலுவலகம் வழங்க வேண்டுமாம். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது 1வது இலக்கத்தை பெறுவதற்காக தங்களுடைய முதல் எமுத்துக்களை மாற்றிகொள்பவர்களும் வேட்பாளர்களாக எமது நாட்டில் இருக்கின்றார்கள். அதாவது ஆங்கில முதல் எழுத்தான “A” யை தனது பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வார்களாம். இதனால் 1வது இலக்கம் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை. ஏனென்றால் இலக்கங்கள் வழங்கும்பொது ஆங்கில எழுத்துக்களின் வரிசையிலேயே இலக்கங்கள் வழங்கப்படுவது வழமையானதினாலாகும்.

இப்படி எனக்கு தெரிந்த தேர்தல் கூத்துக்கள் இவை. ஆனால் இன்னும் எத்தனையோ கூத்துக்கள் தில்லுமுல்லுகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. உங்களுக்கும் இவ்வாறான கட்சிகளின் தில்லுமுல்லுக்ள ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள் எங்களுக்கும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். ஏனென்றால் பொதுமக்களுக்கு அரசியல்வாதிகள் கட்சிகளின் பல விடயங்கள் தெரிந்திருப்பதில்லை. இவ்வாறான ஆக்கங்கள் மூலமாகவாவது வேட்பாளர்கள் கட்சிகள் அடிக்கும் கூத்துக்களை அவர்களும் தெரிந்து கொள்ள முடியும்.

என்னை அடிக்கடி உறுத்தும் ஒரு கேள்விதான் தேர்தலில் ஒருவேட்பாள் மக்களின்மூலம் வராமல் ஏன் கட்சி தலைவர்கள் மூலம் தெரிவு செய்யப்படுகின்றார்கள் என்பதுதான். இவ்வாறு கட்சி தலைவரினால் ஒரு வேட்பாளர் நேரடியாக தெரிவு செய்யுமிடத்து அவர் மக்களுக்கு சேவைசெய்ய வேண்டிய அல்லது மக்களுக்கு பதில் சொல்ல அவசியமில்லாமல் போகின்றது. அந்த வேட்பாளர் தன்னை தெரிவு செய்த கட்சிக்கோ அல்லது தலைவருக்கே பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு இதன்மூலம் தள்ளப்படுகின்றார். ஆனால் எது எப்படியானாலும் மக்கள்தான் வாக்களிக்கவேண்டும். அது அவர்களுடைய ஜனநாயக கடமை என்பதோடு மட்டுமே நின்று விடுகின்றது அவர்ககளுடைய பங்கு. இதனால் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் தேர்தலின் பின்னர் தவிடுபொடியாகி விடுகின்றது.