A Promised Land

09 நவம்பர் 2012

நான்!




"நான்" என்பது வெறும் இரண்டெழுத்து சொல் என்று நானே கருதினால் என்னைவிட இந்த உலகத்தில் முட்டாள் யாருமில்லை என்றுதான் அர்த்தம். "நான்" என்னும் இரண்டெழுத்து அர்த்தப்படுத்திய அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கின்ற அல்லது அர்தப்படுத்தப் போகின்ற விடயங்கள் எதிர்காலத்தில் என்னைச்சார்ந்த வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக இருக்கப்போகும் ஒன்று. எப்போது எனக்குள், நான் யார்? நான் என்ன செய்யவேண்டும்? எனத்தேடத்தேடத் தொடங்ங்கும்போதே பகுத்தறிவு என்ற ஒன்று இருப்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது...

ஆரம்பத்தில் நான் யார் என்று தேட ஆரம்பித்தபோது என்னுடைய ஒவ்வொரு அசைவுகளையும் தீர்மானிப்பது சமூகம் என்ற ஒரு மாயை என்பதை புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. நான் யார் என்பதை தீர்மனிக்கும் புள்ளி எனக்குள் இல்லாமல் எனக்கு வெளியே இருப்பதை உணர்ந்தபோது அதனுளிலிருந்து வெளியேறவேண்டும் என்ற ஒரு உத்வேகம் என்னுள் ஏற்படுகின்றது.  ஆனாலும் இந்த சமூகம் என்னை ஒரேயடியாக அவ்வளவு இலகுவில் வெளிவர அனுமதி மறுத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் என்னுடைய தெரிவுகளை வலுக்கட்டாயமாக இந்த சமூகம் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கின்றது.  இந்த மாயையிலிருந்து வெளிவரும்போது "நான்" என்பதற்கான அர்த்தத்தினை தேடி இலகுவில் பயணிக்கலாம் என்று புலப்படுகின்றது.

தேடல் பயணம் தொடரும்...