A Promised Land

28 அக்டோபர் 2008

நீல A படம் உங்களுக்கு பார்க்க வேண்டுமா?

உங்களுக்காக மிகவும் சிரமபட்டு கொம்பியூட்டரில வரைந்தது
பெரிசா பார்க்க வேண்டும் என்றால் படத்தில கிளிக் பண்ணி பெரிசாக பார்க்கலாம்
ஆனா ஒன்று மட்டும் சொல்லுகிறேன். இந்தப் பதிவைப் பார்த்துவிட்டு என்னோடு ஒருத்தரும் சண்டைக்கு வரப்படாது சரியா. இதோ உங்களுக்காக நான் தரும் A படம்

---
---------
-------------
-------------------
----------------------
---------------------
----------------------------
-------------------------------]
=====================================
==============================================
==================================================


நல்லா பார்த்தீங்களா எப்படி எனது நீல A படம் ?????????ஹிஹி------------------------

15 அக்டோபர் 2008

தனது தனித்துவத்தை இழக்கின்றாரா இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்..




12B படமே இவருடைய முதல் படம் எனினும் மின்னலே படப் பாடல்கள்தான் முதலில் வெளிவந்தன. மின்னலே படப் பாடல்கள் வெளிவந்தவுடன் தமிழ் இசையுலகிற்கு கிடைத்த ஒரு சிறந்த இசையமைப்பளர் என்று எல்லோராலும் நினைக்கும் அளவிற்கு இசைவிரும்பிகள் மிகவும் எதிர்பார்த்த ஒருவர். அத்துடன் ஏ.ஆர்.ரஹ்மானுடைய உதவியாளராக இருந்து இசையுலகிற்கு பிரவேசித்தவர் என்ற வகையிலம் கூட ரொம்பவே எதிர்பார்க்கப்பட்டவர். அந்த எதிர்பார்ப்பை தனது அடுத்தடுத்து வந்த படங்களில் இனிமையான மெலடிப்பாடல்கள் மூலமும் ஏனைய பாடல்கள் மூலமும் மிகவும் அற்புதமாக வெளிப்படுத்தினார். தொடர்ச்;சியாக மூன்று வருடங்கள் அவருக்கு கிடைத்த பிலிம்பேர் விருதுகளை இதற்கு சான்றாக கூறலாம். ஹரிஸ் இசையமைத்த பாடல்கள் அனைத்துமே (ஏறத்தாள 95% ஆனவை) வெற்றியடைந்திருக்கின்றன. அத்துடன் பல படங்களின் வெற்றிக்கு காரணமாக இருந்தது இவருடைய பாடல்தான் என்று கூறினால் அது மிகையாகாது.

இதன் பிறகு ஹரிஸ் என்றால் மெலடி , மெலடி என்றால் ஹரிஸ் எனும் அளவிற்கு மிகவும் பிரபல்யம் அடைந்தது இவரது மெலடிப்பாடல்கள். இதற்கு உதாரணமாக வசீகரா, ஒன்றா இரண்டா,பார்த்த முதல்நாளே,போன்ற பல பாடல்களை கூறிக்கொண்டே செல்லலாம். இவர் இசையமைத்த சாமி படப்பாடல்களின் வெற்றியை தொடர்ந்துதான் சங்கரின் அன்னியன் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்தளவிற்கு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடுத்தபடியாக இயக்குனர்களால் விரும்பப்படும் ஒருவராக ஹரிஸ் மாறியிருந்தார்.

ஆனால் அண்மைய சில காலங்களாக வெளிவரும் இவருடைய பாடல்கள் தன்னுடைய பாடல்களையே தழுவியதாகவும் வேறுபல பாடல்களை அப்படியே தழுவியவையாகவும் அல்லது வேறுபாடல்களை ஞாபகப்படுத்துபவையாகவும் அமைந்துகொண்டிருக்கின்றன எனும் பொழுது மிகவும் கஸ்ரமாத்தான் இருக்கிறது. பல பாடல்கள் சற்றும் வித்தியாசம் இல்லாமல் அப்படியே பிரதி( Copy) செய்யப்பட்டிருக்கிறது. அண்மையில் வெளிவந்த வாரணம் ஆயிரம் படப்பாடல்கள் கூட இவருடைய ஏனைய பல பாடல்களை நினைவுபடுத்துகின்றது.




இவற்றை நோக்கும் போது மெட்டுக்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுவpட்டதா??? என்று கேட்கத் தோன்றுகின்றது. இவற்றை பார்க்கும் போது ஹரிஸின் ஆரம்ப காலப் பாடல்களும்கூட பிரதி செய்யப்பட்ட பாடல்களா என்ற பெரியகேள்வி கூட என்னுள் எழுகின்றது. இவற்றிற்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது அதாவது இனிவரும் படங்களில்
நல்ல தரமான தழுவல்கள் இல்லாத பாடல்களை ஹரிஸ் தரவேண்டும்.
அப்படி தருவதன் மூலமே ஹரிஸினுடைய பாடல்கள் என்ற பெயரைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

10 அக்டோபர் 2008

ழ அழகு

கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
காலுக்கு கொலுசு அழகு
தமிழுக்கு ழ அழகு

03 அக்டோபர் 2008

குசும்பு குரு!!!(குமரேசன்)

இனி என்னுடைய இந்த வலைப் பூவில் அறிமமுகமாகின்றார் குசும்பு குமரேசன்.





என் இனிய குசும்பு தமிழ் மக்களே!! இந்த குரு கோக் அடிச்சுட்டு குப்புற படுக்க இங்க வரல்ல. இனி குசும்பிலும் கலக்குவானெல்ல

*சில்வர் க்ளாசில் தண்ணி அடிக்கலாம், கண்ணாடி க்ளாசில் தண்ணி அடிக்கலாம் ஆனால்
கூலிங் க்ளாசில் தண்ணி அடிக்க முடியுமா?
இந்த குரு அடிப்பானெல்லே!!ஹிஹிஹிஹி..........

02 அக்டோபர் 2008

மூட நம்பிக்கைகள்


இன்றைய நவீன உலகில் விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்தாலும் மூட நம்பிக்கைகள் மட்டும் மக்களை விட்டு மறைவதாக இல்லை. இவற்றுக்கு நிறையவே காரணங்களை கூறலாம். இவற்றில் பெரும்பான்மையானவை சமயத்தை சார்ந்தவையாக அல்லது தழுவியவையாக உள்ளன என்று கூறினால் அது மிகையாகாது.

இவ்வாறு மூடநம்பிக்கைகள் வளர்வதற்;கு மிக முக்கியமான காரணமாக அந்தந்த மக்களின் கலாச்சாரம் செல்வாக்குச் செலுத்துகின்றது.

மூட நம்பிக்கைகளை அதிகமாக ஆசிய நாடுகளே பின்பற்றுகின்றன என்று கூறலாம். அதிலும் குறிப்பாக தென் ஆசிய நாடுகளை(இந்தியா இலங்கை பாக்கிஸ்தான் போன்ற நாடுகளை) குறிப்பிடலாம்.அதற்காக உலகத்திலுள்ள ஏனைய நாடுகளில் இவை இல்லையெ கூற முடியாது. ஏனைய நாடுகளுடன் ஒப்பீடுகையில் ஆசியாவில் சற்று அதிகம் என கூறலாம்.

இலங்கை போன்ற நாடுகளில் இவை ஓரளவு குறைவாக காணப்பட்டாலும் இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக இந்த மூடநம்பிக்கைகளை பின்பற்றி வருகின்றார்கள்.உதாரணமாக மழை பெய்யவில்லை எனில் மிருகங்களுக்கு திருமணம் செய்வது அவர்களுடைய கடவுள்களுக்கு மிருகங்களை பலியிடுவது போன்ற பலவற்றையும் கூறிக்கொண்டு செல்லலாம்.அத்துடன் பல பெண்கள் இவற்றால் சமூகத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள்.

இவற்றில் ஈடுபடுவது சாதாரண பாமர மக்கள் முதல் படித்தவர்கள் மற்றும் அரசியல்திகள் என எல்லா வகையானவர்களையும் குறிப்பிட்டு கூறலாம்.
இவற்றில் மிகவும் கொடுமை மூடநம்பிக்கை என்ற பெயரில் பல உயிர்கள் காவுகொள்ளப்படுவது மற்றும் மக்களை ஏமாற்றுவதும் தான்.

காலத்திற்கு காலம் மனிதன் விஞ்ஞான ரீதியாக எத்தனையோ கண்டுபிடிப்புக்கள் எத்தனையோ மாற்றங்கள் என ப+மியையும் தாண்டி விண்வெளியை ஆராய்ந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் நாம் இன்றும் மூட நம்பிக்கைகளை பின்பற்றிக் கொண்டு இருக்கின்றோம் எனும் பொழுது மிகவும் கவலையளிக்கின்றது.


இன்று பலர் மூடநம்பிக்கைகளை களைய எவ்வளவோ முயர்ச்சிகளை மேற்கொள்ளுகின்றார்கள்.ஆனாலும் இது ஒரு சவாலான விடையம் என்பது வெளிப்படை உண்மை.எத்தனை பாரதிகள் இந்த மண்ணில் தோன்றினாலும் இந்த மூடநம்பிக்கைகளை மக்களின் மனங்களிலிருந்து அவ்வளவு சுலபமாக ஒழித்து விட முடியாது என்பது திண்ணம்.