A Promised Land

இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

07 நவம்பர் 2020

மோசமான விமான அனுபவம்

நான் 2009 நவம்பர் மாதம் விமானத்தில் முதன்முறையாக பயணிக்க தொடங்கியதன் பின்னர் தற்போதுவரை இந்தியா சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், அவுஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய ஆறு நாடுகளுக்கு விமானம் மூலம் பயணம் செய்திருக்கிறேன். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அல்லது இந்தியன் ஏர்லைன்ஸில் தான் நான் வழமையாக இந்தியா பயணிப்பேன்.  

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆந் திகதி முப்பையிலிருந்து கொழும்புக்கு ஜெட் ஏர்வேஸில் பயணிதேன். இம்முறை வேலை விசியமாக நவம்பர் 4 கொழும்பிலிருந்து கொச்சினுக்கு ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸில் பயணித்திருந்தாலும் returen ticket ஜெட் ஏர்வைசில் ஏன் போட்டார்கள் என்பது என்னுடைய நிறுவன Production Booker க்கே வெளிச்சம். (கொச்சியிலிருந்து மும்பைக்கு வாகனம் மூலம் பயணம் மேற்கொண்ட அனுபவம் தொடர்பில் பின்னர் எழுதுவேன்)

(கோளாறு ஏற்பட்ட விமானம்)

விமனத்தில் ஏறும்போதே அவ்விமானம் கொஞ்சம் பழைய விமானமாக இருந்தது கொஞ்சம் உறுத்தியது. TV Screenகூட இல்லாத பழைய விமானம். மாலை 5:30 க்கு புறப்பட வேண்டிய விமானம் நாம் விமானத்தினுள் ஏறிய பின்பும்கூட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒன்ரரை மணிநேர தாமதத்தின் பின்னன் சுமார் 7 மணிக்கு மும்பையிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்டது.

(விமானத்தின் உட்புற தோற்றம்)

புறப்பட்டு ஒரு பிரச்சினையுமில்லாமல் புனே நகரையும் தாண்டி பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானியிடமிருந்து ஒரு தகவல் "விமானத்தில்.ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறு. நான் இப்போது மீண்டும் மும்மையை நோக்கி விமானத்தை செலுத்தப்போகிறேன்."

(விமானத்தின் தரவுகளை உள்ளக wifi இணைப்பு மூலம் தொலைபேசியில் பார்த்தேன். இவ்விடத்தில் விமானம் மும்பைக்கு திரும்பியது)

விமானத்தில் ஒரு திடீர் பதைபதைப்பு. திடிரென்று விமானத்தின் உயரம் கடகடவென்றும் இறங்கத் தொடங்கியது. விமானத்தில் இன்னும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. விமானப் பணிப்பெண்கள் மிகவும் அமைதியாக பயணிகளை சாந்தப்படுத்தினர். ஒருவரையும் இருக்கையைவிட்டு எழுந்திருக்க விடவில்லை. எனக்கு இரு ஆசனத்திற்கு முன்னால் அமர்ந்திருந்த வெளிநாட்டுக் காரர் ஒருவர் பெரிய சத்தமாக என்ன நடக்கிறது? விமானியுடன் நான் பேச வேண்டும் என்னும் கோபப்பட்டு சத்தம்போட்டுக் கொண்டிருந்தார். விமானப் பணிப்பெண்கள் அது முடியாது. அமைதியாக இருங்கள் என்று காட்டமாக கூறிவிட்டனர்.

எனக்கு மறுபுறத்தில் வயதான இரண்டு சிங்கள அம்மாமார் பௌத்த பிரித்தை ஓதிக்கொண்டு புத்தபிரானை நோக்கி வழிபடத் தொடங்கனர்.

நான் அப்போது ஒரு விடயத்தை யோசித்தேன் அதாவது விமானத்தின் கோளாறு பெரியதாக இருந்தால் விமானத்தை புனே விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு விமானி நடவடிக்கை எடுத்திருப்பார். ஆனால் அவர் முப்பைக்கு மீண்டும் செல்வதால் கோளாறு அவ்வளவு பெரியதாக இருக்க வாய்ப்பில்லை. தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்கலாம் என்று எனக்கு நானே கூறி என்னை சாந்தப்படுத்தினேன்.

ஆனாலும்ன் உள்மனதில் ஒர் பதைபதைப்பு. வெளிக்காட்டாமல் எனது தொலைபேசியின் FLIGHT MOOD ஐ அகற்றிவிட்டுப் பார்த்தேன். தொலைபேசி Roamimg Signal ஏதும் இல்லை. அந்த நேரத்தில் என்னக்கு ஒரு யோசனை தோன்றியது. கடகடவென்று எனது அம்மாவுக்கும் தம்பிக்கும் ஒரு குறுந்தகவலைத் தட்டிவிட்டேன்.

அதாவது "நான் கொழும்பை நோக்கி பயணிக்கும் விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக மும்பை விமனநிலையத்துக்கு திரும்பவும் போய்க்கொண்டிருக்கிறது. இந்த குறுந்தகவல் உங்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் ஒன்று நான் மும்பை விமான நிலையத்தில் இறஙகியிருப்பேன் அல்லது விமானம் எங்காவது விழுந்திருக்கும்"

அதன்பின் அமைதியாக அப்படியே இருந்துவிட்டேன்.

சரியாக 27 நிமிடங்களில் அதாவது இரவு 8:12 க்கு விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. அம்மா தமிபியிடமிருந்தும் அழைப்புக்கள். வந்திருந்தன. பத்திரமாக இருக்கிறேன் என்பதை தெரியப்படுத்தியதன் பின்னரே அவர்கள் சாந்தமடைந்தனர்.

(செல்பி)

இதேவேளை மாற்று விமான ஏற்பாட்டை ஜெட் ஏர்வேஸ் அங்கு செய்திருந்தது. ஒரு மணி தாதமத்திற்கு பின்னர் வேறொரு விமானத்தில் கொழும்பு புறப்பட்டோம்.

இரவு 11:50 மணிக்கு கொழும்பில் பத்திரமாக தரையிறங்கினோம். அப்போது விமானி தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டபோது தனக்கு ஒத்துழைத்தமைக்கு எமக்கு நன்றி கூறினார்.

(மாற்று விமானம்)

இப்படியான ஒரு விமான பயண அனுபவத்தை நான் பெற்றிருக்கவில்லையாததால் இதுவே எனது மோசமான விமான பயணமாக அமைந்திருந்தது. எனது நிறுவனத்துக்கும் எனது அனுபவம் தொடர்பில் விபரித்து மின்னஞசல் அனுப்பி இனி ஜெட் ஏர்வைஸில் டிக்கட் முன்பதிவு செய்ய வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டேன். அதேவேளை அடுத்த நாளே ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் மின்னஞசல் ஒன்றை அனுப்பியிருந்தது.

27 அக்டோபர் 2014

சினிமா என்பது வெறும்பொழுதுபோக்கு ஊடகம் மாத்திரமா?


சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்ற ரீதியிலேயே இந்தியர்கள் சினிமாவை அணுகுகின்றார்கள். ஆனால் சினிமா என்பது வெறுமனே ஒரு பொழுதுபோக்கு ஊடகமா என்ற கேள்வியினை கேட்கவேண்டிய நேரம் இது. சினிமா என்றால் பொழுதுபோக்கு ஊடகம் என்ற மாயையை தவறான எண்ணத்தினை மக்கள் மத்தியில் புகுத்தியவர்கள் யார்? ஏன் அவ்வாறு மாற்றினார்கள் என்பதற்கு பின்னால் பல அரசியல் காரணங்கள் புதைந்து கிடக்கும் என்பதுதான் உண்மை.

சினிமா என்பது ஒரு இனத்தின் அரசியலைப் காத்திரமாக பேசும் கலை. உண்மையிலே கலை என்பது காலத்தின் கண்ணாடி. ஒரு இனத்தின் வாழ்வியலை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தெரியப்படுத்தவும் அரசுகளையும் அதிகாரத்தவர்களையும் கேள்விகேட்கக்கூடிய ஒரு மிகப்பலம்வாய்ந்த ஊடகம். இந்த சினிமா என்ற மிகமுக்கியமான அசையும் காட்சி ஊடகம் 20ம் நூற்றாண்டின் லுமினஸ் சகோதரர்களின் மிகமுக்கியமான கண்டுபிடிப்பு. இந்த சினிமாவால் பல அரசுகளே ஆட்டம் கண்டிருக்கின்றன. பல இயக்குனர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் பலர் நாடுகடத்தப்பட்டிருக்கின்றார்கள் அத்தோடு படைப்புக்கள் அதிகார வர்க்கத்தினால் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இவை உலக சினிமா வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன. சினிமா ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்றால் ஏன் இவ்வளவு மோசமான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கவேண்டும் என்ன கேள்வி இயல்பாகவே சினிமா தொடர்பாக சாதாரண அறிவுள்ள ஒருவருக்கு எழவேண்டும்

இந்தியாவில் சினிமாவை அரசியல் காரணங்களுக்காக பொழுதுபோக்கு ஊடகமாக மாற்றி வைத்திருக்கின்றார்கள். ஒரு நல்ல சினிமா என்பது பார்வையாளனுடைய சிந்தனையை இன்னொருகட்டத்திற்கு தூண்டிவிடவேண்டும். அதுவே நல்ல சினிமா. தமிழ் சினிமாவின் ஆரம்ப கட்டங்களில் நடிகர்கள் பெரிய திரையில் சண்டைபிடிப்பார்கள் பார்வையாளர்கள் அதை பார்ப்பார்கள். ஆனால் இன்று நடப்பது என்ன இரசிகர்கள் நடிகர்களுக்காக பிரிந்து தங்களுக்கிடையில் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள் நடிகர்கள் அமைதியாக இவற்றை பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இதற்கு காரணம் யார்? யார் இதற்கு பொறுப்புகூறவேண்டும்? இன்றும் தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் என்று கேட்டால் 70 களில் 80 களில் வெளிவந்த படங்களையே பெரும்பாலானோர் கூறுவார்கள் காரணம் என்ன அந்தக் காலப்பகுதியில் வெளிவந்த திரைப்படங்கள் தரமானவையாகவும் காத்திரமான படைப்புக்களாகவும் இருந்தன. இன்று வெளிவரும் திரைப்படங்கள் வெறும் வன்முறையினையையும் ஹீரோயிசத்தையும் பெண்களின் உடலையும் சதையையும் முன்னிறுத்தியே வெளிவந்துகொண்டிருக்கின்றன. அண்மையில் புதிய சில இளம் இயக்குனர்கள் நம்பிக்கை தருகின்றனர் ஆனாலும் அவர்களும் எவ்வளவுநாள் இந்த மாயையை தாக்குப்பிடிப்பார்கள் என்பது கேள்விக்குரிய விடயம்தான்.

இந்தியாவில் கலையை கொலைசெய்து இன்று அதை வியாபாரமாக்கிவிட்டார்கள். ஒருசில நாட்களில் பலநூறுகோடி சம்பாதிக்கும் வழியாகவே சினிமாவை பயன்படுத்துகின்றார்கள். பார்வையாளர்களுடை பலவீனங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி  இவற்றை செய்வது வியாபாரிகளுக்கு இலகுவாக இருக்கின்றது. ஒரு சில சமூகப்பொறுப்புள்ள இயக்குனர்களைத்தவிர மற்ற எல்லோருமே இயக்குனர் என்ற நிலையிலிருந்து விடுபட்டு வியாபாரிகளாகவே இன்று திரைப்படங்களை இயக்கிக்கொண்டிருக்கின்றார்கள். மக்கள் இந்த மாயையிலிருந்து விடுபட்டு தெளிவு பெற்றால் மாத்திரமே நல்ல காத்திரமான சினிமாவை நாங்கள் பார்க்கமுடியும்.



vathees@gmail.com

29 டிசம்பர் 2010

காவலன் படத்தினை வெற்றிபெறச்செய்வோம்

தலைப்பை பார்த்தவுடன் விஜய் இரசிகர்கள் மிகுந்த சந்தோசமடைவார்கள் என்று நினைக்கின்றேன் சந்தோசப்பட்டால் மட்டும் போதாது சூட்டோடு சூடாக (எவன்டா அவன் அங்க சூடா என்ன வேணும் என்று கேட்கிறது?) எனக்குரிய சன்மானத்தினை வழங்கவேண்டும் என்று விஜயினுடைய இரசிகர்களைஅன்புடன் கேட்டுக்கொண்டு விடயத்திற்கு வருகிறேன்.

அண்மைக்காலமாக விஜய் நடித்த படங்கள் எல்லாம் பலத்த சாதனைகளை தோல்வியில் நிலைநாட்டிக்கொண்டிருப்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும் தொடர் தோல்விகள் தயாரிப்பாளர்களுக்கு தொடர் நட்டங்கள் இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகளை விஜய் தனது படங்களின்மூலம் சந்தித்தும் விஜய் திருந்துவதாக இல்லைப்போல்லாதான் தெரிகின்றது.  இந்தா வருகிறது அந்தா வருகிறது பொங்கலுக்கு வருகிறது என்று தியட்டர் இல்லாமல் காவலன் படத்தினுடைய வெளியீடு தள்ளிப்போய்கொண்டே இருக்கிறது. இந்த லட்சணத்தில மன்மதன் அம்பு படம் தோற்கவேணும் அப்போதுதான் காவலன் படம் வெளியிடுவதற்கு தியட்டர் கிடைக்கும் என்று கேனைத்தனமாக புலம்பிக்கொண்டு இருக்கும் விஜய் இரசிகர்களும் இருக்கிறார்கள் என்று இந்த நேரத்தில் சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. 

நான் உண்மையிலேயே விஜயினுடைய எதிர்பாளன்தான் ஆனால்பாருங்கோ எனக்கே விஜயினுடைய தோல்விப்படங்களை பார்த்து போரடிச்சுப்போச்சு பின்ன மொக்கை படங்களை தொடர்ந்து தந்தால் தோல்விக்குமேல் தோல்வி வராமல் வெற்றியா வரும் என்று விஜய் எதிர்ப்பாளர்கள் கேட்கிறது தெரிகின்றது (இப்போதெல்லாம் விஜய் இரசிகர்களே விஜயை திட்டுகிறஅளவுக்கு நிலமை ஆகியிருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது) அதோட இன்னும் எவ்வளவு நாள்தான் நாங்களும் மொக்கை படங்களையே பார்க்கிறது அதனான இனி வரும் படங்களின் கதைகளையாவது சரியாக தெரிவு செய்யவேண்டும் இதுதான் எனது கோரிக்கை. அதனால மொக்கை படமாக இருந்தாலும் காவலன் படமாவது வெற்றிபெறவேண்டும் என்று என்னுடைய உள்மனம் சொல்லுது ஆகவே மொக்கை படமாக இருந்தாலும் பரவாயில்லை சினிமா இரசிகர்களே காவலன் படத்தை பத்து பதினைந்து தடவையாவது தியட்டருக்கு சென்று பார்த்து படத்தினை வெற்றிபெறச்செய்யவேண்டும் என்று தாழ்மையாக வேட்டுக்கொள்ளுகிறேன். விஜய் காவலனுக்கு பிறகாவது நல்ல கதைகளை தெரிவு செய்து நடிகவேணும் என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட விருப்பம்கூட.

அப்புறம் விஜய் அவருடைய அப்பாவோட சேர்ந்து பல சொங்கித்தனமாக செய்யக்கூடாத விடயங்களை செய்வதற்கு தயாராகிறமாதிரி கதையெல்லாம் அடிபடுகிறது அதுதான் அவருடைய அரசியல் மேட்டர். அதற்காக விஜயை அரசியலுக்கு வரவேண்டாம் என்று சொல்லி நான் அவருடைய ஜனநாயக உரிமையை தடுக்க விரும்பவில்லை. அரசியலுக்கு வாங்கோ வந்து மக்களுக்கு நல்லதை செய்யுங்கோ ஆனால் சரியான நேரத்தில அரசியலுக்கு வாங்கோ என்றுதான் நான் கூறுகிறேன்.
விஜய்க்கும் ஆறாவது அறிவு என்ற ஒன்று இருக்குது என்று நான் நம்புறன் அதைவைச்சு அவர் நல்ல நேரத்தில நல்ல முடிவொன்றை எடுப்பார் என்று நான் நம்புறன்.

கடைசியிலையும் சொல்லுறன் மொக்கைபடமாக இருந்தாலும் எப்படியாவது காவலன் படத்தினை வெற்றிபெறச் செஞ்சிடுங்கோ இது இந்த விஜய் எதிர்பாளனின் தாழ்மையான வேண்டுகோள் அம்புட்டுத்தான் விசியம்...