A Promised Land

08 ஜனவரி 2010

எதிர்பார்பை அதிகரிக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா


பாடல்கள் மற்றும் இயக்குனர் நடிகர் என்று பல கோணங்களில் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் படம்தான் “விண்ணைத்தாண்டி வருவாயா” வாரணம் ஆயிரத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கியிருக்கும் திரைப்படம், வழக்கமக தனது படங்களுக்கு இசையமைக்கும் ஹரிஸ் ஜெயராஜை கழற்றி விட்டுவிட்டு ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையுடனும் லிட்டில் சுப்பர் ஸ்டார் சிம்பு மற்றும் திரிஷாவும் இணையும் இந்த படம் மிகவும் எதிர்பார்ப்பினை தோற்றுவித்துள்ளது. எங்களை ஒருகணம் சிலிர்க்கச்செய்த வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்கு பின்னர் ஒரு அழகிய காதல்கதையுடன் வெளிவரும் படமென்று விண்ணைத்தாண்டி வருவாயா என்று கூறப்படுகின்றது.எதிர்பார்ப்பிற்கு இன்னுமொரு காரணம் அண்மையில் வெளியாகியிருக்கும் பாடல்கள் என்பதையும் கூறலாம். அண்மையில் பிபிசி தொலைக்காட்சியில் விண்ணைத்தாண்டி வருவாயா பாடலும் ஏ,ஆ.ரஹ்மானின் நேர்காணலும் ஒளிபரப்ப்பட்டிருந்தது. அத்தோடு பாடல் வெளியீடானது லண்டனிலேயே இடம்பெற்றது என்பதனையும் குறிப்பிட்டாக வேண்டும்.

"விண்ணைத்தாண்டி வருவாய" பாடல்களில் அந்த "ஹோசான" பாடலை குறிப்பிட்டு கூறலாம். தாமரையின் அருமையான வரிகளுக்கு தனது பாணியினிலே சிறந்த ஒரு இசையினை ரஹ்மான் வழங்கியிருக்கின்றார் என்றே கூறமுடியும். அத்துடன் அதில் கலந்திருக்கு இசை நுணுக்கம் போன்றவற்றை வைத்து பார்த்தால் நிற்சயம் இந்தப் பாடல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நல்ல ஒரு பெயரினையும் இந்த ஆண்டின் சிறந்த பாடல் என்ற இடத்தை பெற்றுவிடும் என்பதில் ஐய்யமில்லையென்பது என்கருத்து.

"ஹோசான" பாடலை கேட்டு மகிழ

கருத்துகள் இல்லை: