A Promised Land

14 டிசம்பர் 2009

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் சங்கடங்களும்

சரத்பொன்சேகாவின் அரசியல் பிரவேசத்தில் ஏற்கனவே சூடுபிடித்துள்ள இலங்கையின் அரசியல்களம் எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தல்
என அறிவித்தபின் மேலும் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் சிறுபான்மையினரான தமிழ் மக்கள் மத்தியில் அல்லது அவர்கள் சார்பான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மத்தியிலும் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பான நிலமை இன்னும் தெளிவில்லாமல்தான் இருக்கின்றது. ஏனென்றால் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும்தான் முதல் காரணம். தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு இரு வேட்பாளர்களும் இதுவரையும் தவறிவிட்டனர் என்றனர் என்றே கூறவேண்டும்.

சரத் பொன்சேகா இல்லாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சிக்குதான் எங்களுடைய வாக்கை அளித்திருப்போம் என்று கூறுவோரும் இருக்கின்றார்கள். ஆனாலும் இரு வேட்பாளர்களும் தமிழ் மக்கள் மத்தியில் அவ்வளவான நல்ல கருத்து இல்லையென்றுதான் கூறவேண்டும். தற்போதைய நிலையில் இரு வேட்பாளர்களும் தமிழ் மக்களுடைய வாக்கினை குறிவைத்து தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். இதனுடைய ஒரு கட்டம்தான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினுடைய யாழ் விஜயம்.

மறுபுறத்தில் சுதந்திர கட்சியினரும் தங்களுது பிரச்சாரங்களினையும் ஆரம்பித்திருக்கின்றார்கள். யுத்த வெற்றியினையே சிங்கள மக்களிடையே நடக்கும் பிரச்சாரங்களின்போது இரு தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றார்கள்.
உண்மையிலே தமிழ் மக்களுடைய நிலையோ யாருக்கு வாக்களிப்பது என்று வரும்போது இத்தேர்தலில் சங்கடமான நிலைதான். பொது வேட்பாளர் சரத் பொன்சேகா இனவாத கருத்தினை கொண்டவர் என்ற நிலைப்பாடு காணப்படுகின்றது. அத்தோடு யாழ் மக்களுக்கு அவரைப்பற்றி ஓரளவுக்கு தெரியும்; ஏனென்றால் யாழின் கட்டளை தளபதியாக இவர் இருந்தவர்.இவரின் காலப்பகுதியில்தான் யாழில் சர்ச்சைக்குரிய விடயங்கள் பல உலக அளவில் பேசப்பட்டன. ஆனாலும் தற்போது தனது இராணுவ சீருடையினை கழைந்து அரசியிலில் நுழைந்து ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதால் தனக்கு தமிழ் மக்களின் ஆதரவு இருக்கும் என்றும் நம்புகின்றார். அத்தோடு தமிழ் மக்களின் ஆதரவை பெறுவதற்கு இவர் முகாம் மக்கள் தொடர்பாகவும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

மறுபுறத்தில் சுதந்திர கட்சியின் ஆட்சியில்தான் தமிழர்கள் அதிகமான கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்தது என்ற கருத்தும் காணப்படுகின்றது. ஆனாலும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி தனது ஆதரவினை சுதந்திர கட்சிக்கும் வேட்பாளரான மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கியிருக்கின்றது. ஆனாலும் சரத்பொன்சேகாவால தம்முடைய் வாக்குவங்கி உடையலாம் என்று சுதந்திரக்கட்சியின் கருதுகின்றார்கள். இதனாலேயே சரத் பொன்சேகாவிற்கு எதிரான கருத்துக்களையும் சரத் தமிழ் மக்களுக்கு எதிரானவர் என்ற கருத்தினையும் மக்கள் மத்தியில் பகிரங்கமாக சுதந்திரகட்சியின் பிரச்சார கூட்டங்களில் கூறிவருகின்றனர்.
தமிழ் கூட்டமைப்போ இது தொடர்பாக எந்த முடிவினையும் இதுவரைக்கு தெரிவிக்கவில்லை. சரத்பொன்சேகா இல்லாமல் வேறு ஒருவர் வேட்பாளராக நின்றிருந்தால் கூட்டமைப்பு தன்னுடைய ஆதரவினை ஐதேகவிற்கே வழங்கியிருக்கும் ஆனால் தற்போது அது முடியாத காரியம். மக்களுடைய முடிவு தெரியாமல் யாருக்கும் ஆதரவளக்கவில்லை தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்த பிற்பாடுடு அறிவிக்கின்றோம் எனமட்டுமே தற்போதைக்கு கூட்டமைப்பினரால் கூறமுடியும்.

தற்போது போட்டியிடும் பிரதான இருதரப்பினர்களிடம் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் காணப்படுகின்றது. அதேபோல சர்வதேச சமூகத்துக்கும்கூட இருக்கத்தான் செய்கின்றது. இந்த தேர்தலில் இந்தியாவும் மறைமுகமாக தற்போதைய ஜனாதிபதியே அடுத்த ஜனாதிபதியாகவும் வரவிரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எப்படி இருந்தாலும் தமிழ் மக்களுடைய வாக்குகள் யாருக்கு என்பதை இன்னமும் சரியாக கணிப்பதற்கு சற்று சிக்கல் நிலையே காணப்படுகின்றது. யுத்தம் இலங்கையில் முடிவுற்ற நிலையிலே தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இரண்டாவது பதிவர் சந்திப்பு எனது பார்வை

கொழும்பு தமிழ் சங்கத்தில்இடம்பெற்ற 1வது பதிவர் சந்திப்புக்கு செல்லாததனால் எனக்கு இதுதான் முதலாவது பதிவர் சந்திப்பாக அமைந்தது. உண்மையிலே இந்த சந்திப்பானது மிகவும் ஒரு ஆக்கபூர்வமான சந்திப்பாகவே அமைந்ததென்று கூறலாம் எனென்றால் அங்கு கதைக்கப்பட்ட விடயங்கள்.
முதலில் கலந்துரையாடப்பட்ட பதிவு எழுதுதல் என்பது பற்றிய கலந்துரையாடல்கூட பதிவுகள் எப்படியிருக்கவேண்டும் தனித்துவங்கள் விருப்பங்கள்போன்றவற்றினை ஆழமாக அலசியிருந்தது. தூங்கியவர்களை எழுப்புவதுபோல அப்பப்போ புல்லட் அடித்த லூட்டிகளுக்கும் அளவில்லை. அதற்கு பிறகு பதிவர் லோஷன் தனது கருத்துக்களையும் தெரிவித்திருந்தார்.
அதேபோலத்தான் பெண்களும் வலையுலகமும் அனானிகள் போன்ற தலைப்புக்களை விவாதிக்கவும் பல தகவல்களை அவற்றின்மூலம் பெறவும் கூடியதாக இருந்தது.
அதேபோல மது தனது பாணியில் கூகிளில் ஆரம்பித்திருக்கும் இலங்கை தமிழ் பதிவர்கள் என்கின்ற குழுமத்தினை எவ்வாறு உபயோகப்படுத்துவது போன்ற பல தொழில்நுட்ப விடயங்களை கூறியது மிகவும் பயனுள்ளதாவே அமைந்திருந்தது. அதேபோல் மாதத்திற்கு ஒருமுறை குழுமத்திலே குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றுகூடி கதைப்பது என்ற கருத்து மிகவும் வரவேற்கப்படக்கூடிய ஒன்று.
இறுதியாக ஏற்பாட்டுகுழுவினர் ஏற்பாடு செய்திருந்த இருவிளையாட்டுகளில் நாம் பங்குபற்றினோம் ஓன்றில்கூட வெற்றிபெற முடியவில்லை.
ஆகமொத்தத்தில் இரண்டாவது பதிவர் சந்திப்பானது மிகவும் ஒரு காத்திரமான சந்திப்பாகவும் அதேவேளையில் வெற்றிகரமான சந்திப்பாகவே நிறைவு பெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்டு பல பதிவர்களுடன் அளவளவான ஒரு அருமையான சந்தர்ப்பமும் எனக்கு கிடைத்ததென்றுதான் நான்கூறவேண்டும்.
அடுத்த சந்திப்பு எப்போது?

11 டிசம்பர் 2009

இங்கையும் வேட்டைக்காரனா (என்ன கொடுமை இது....)

இது எனக்கு வந்த பேஸ்புக் மெசேஜ்


வேட்டைக்காரன் படத்தை ஓட்டுவதற்கு பயபுள்ளைங்க ரொம்ப றிஸ்க் எடுக்கீனம்போல
படத்தை சொடுக்கி பெருசாக பார்க்கலாம்