A Promised Land

india லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
india லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 நவம்பர் 2020

பகுத்தறிவாளன் மக்களை முட்டாளாக்கலாமா?

 "பகுத்தறிவாளன் மக்களை முட்டாளாக்கலாமா?" என்ன கேள்வியை பார்த்தவுடன் உங்களுக்கு நினைவுக்கு வரும் நபர் யார்? 

ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்....

.

.

.

பகுத்தறிவாளன் என்றவுடன் என்மனதுக்கு நினைவுக்கு வருபவர் நடிகர் கமல்ஹாசன். உங்களில் பலபேருக்கும் கமல்ஹாசன் என்னபெயர் மனதில் ஒருகணம் வந்துபோயிருக்கலாம். இந்திய சினிமா நடிகர்களின் முற்போக்கு சிந்தனை நிரம்பிய திரைப்படங்களை தயாரித்ததிலும் நடித்ததிலும் அதற்கு முன்மாதிரியாக செயற்படுவர்களிலும் உலகநாயகன் என்று தமிழ்சினிமா இரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கமல்ஹாசன் தொடர்பிலேயே ஒரு விடயத்தை மிகவும் சுருக்கமாக கூறிச்செல்லப் போகின்றேன். 

அதற்கு முதலில் உங்களுக்கு ஒரு விடையத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். கமல்ஹாசன் எனும் திரைப்பட நடிகரின் இரசிகன் நான். நாயகன், சலங்கையொலி போன்ற படங்களை பார்த்ததன்மூலம் அவர் திரைப்படங்கள்பால் ஈர்க்கப்பட ஒருவன்.

மக்கள் நீதி மய்யம் என்னும் பெயர் தமிழ் நாட்டில் கட்சியொன்றைத் தொடங்கி செயற்பட்டு வருபவர். நடிகள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற விதி எங்குமில்லை அத்துடன் அது அவருடைய ஜனநாயகத்தின் மீது அவருக்கு இருக்கும் உரிமை. தமிழ்நாட்டு மக்கள் விரும்பினால் அவரை முதலமைச்சராகக் கூட ஆக்கலாம். அந்த வகையில் இந்தவிடயத்தில் அவரை விமர்சிப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. 

ஆனால் பிக்பாச் எனும் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தொடர்ச்சியாக நான்க்கு முறை செயற்பட்டிருக்கின்றார். பிக்பாஸ் என்னும் ரியலிட்டி ரிவி நிகழ்ச்சியானது நெதர்லாந்து நாட்டின் பிக் ப்ரதர் (Big Brother) எனும் ரியலிட்டி ஷோவின் இந்திய வேர்ஷன்.  Endemol Shine India எனும் நிறுவனம் இந்தியாவில் இந்நிகழ்ச்சியை தயாரிப்பதற்கான உரிமையை வாங்கி ஹிந்தி தமிழ் தெலுங்கு கன்னடா மராத்தி மலையாளம் போன்ற மொழிகளில் தயாரித்து வருகிறது. 

18 பேரை ஒரு வீட்டுக்குள் அடைத்துவிட்டு அவர்கள் அடிபடுவதையும் பிடிபடுவதையும் கமராக்களால் படம்பிடித்து படத்தொகுப்பு செய்து 100 நாட்களுக்கு ஒளிபரப்பும் இந்த நிகழ்சியை பகுத்தறிவாளனக தன்னைக் காட்டிக்கொண்டு முற்போக்கான செயல்களில் ஈடுபடும் கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. 

பிக் பிரதர், பிக்பாஸ் போன்ற ரியலிட்டி ஷோக்கள் எப்படி ஆரம்பித்து எப்படி முடிவடைய வேண்டும் எந்தக் கதாபாத்திரம் வெல்லவேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அதன்படியே முன்னகர்த்திச் செல்லப்படுபவையா இவை காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாது எஸ்.எம்.எஸ் என்ற போர்வையில் மக்களிடம் கோடிக்கணக்கான பணத்தினை சுருட்டும் இப்படியானதொரு நிகழ்ச்சியை பாருங்கள் என்று கமல் அழைப்பு விடுப்பதும் அதைத் தொகுத்து வழங்குவதும் விமர்சிக்கக்கூடியது. 

தான் செய்வது சரியென தனது தரப்புக் காரணங்களை நடிகர் கமல்ஹாசன் நியாயப்படுத்த முடியும் ஆனால் அதையும் தாண்டி ஒரு பகுத்தறிவாளனாக / முற்போக்குவாதியாக அவர் இதனை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. 










15 டிசம்பர் 2014

4th Agenda Short Film Festival - 2014



கடந்த 12- 14ம் திகதிவரை கொழும்பில் 4வது முறையாக நேற்று இடம்பெற்று முடிந்த
அஜண்டா 14 குறும்திரைப்பட விழாவில் முதன்முறையாக 20க்கும் மேற்பட்ட தமிழ்க் குறும்படங்கள் பங்குபற்றியிருந்தன அதில் விமல்ராஜின் “திரைக்கதையில் அவள்” கலிஸின் “குரும்பை” றினோசனின் “ஆனந்தி” மாதவனின் “அப்பால்” சமிதனின் “நான் நீ அவர்கள்”, சிவராஜின் "பை" ஆகிய குறும்படங்கள் திரையிடலுக்காக தெரிவுசெய்யப்பட்டு பார்வையாளர்களுக்காக திரையிடப்பட்டன.  அத்தோடு சிங்கள தமிழ் என்ற வேறுபாடு இல்லாமல் குறும் திரைப்படங்கள் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.


குறும்திரைப்பட விழாவின் நேற்றைய இறுதிநாளான நேற்று 14.12.2015 இடம்பெற்ற விருது வழங்கும் விழாவில் பிரதம விருந்தினராக இலங்கையின் திரைப்பட இயக்குனர் அசோக ஹந்தகம கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராக 45 வருடங்களுக்கு முன்னர் “காகமும் மனிதர்களும்” என்ற குறும்படத்தினை இயக்கி இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற சுகதபால செனரத் யாப்பா கலந்து சிறப்பித்தார். அத்தோடு சுவிஸ்லாந்தின் உயஸ்தானிகர், கனடாவின் உயஸ்தானிகர், Goethe Institute Director உட்பட பல வெளிநாட்டு உள்நாட்டு பிரமுகர்கள் மற்றும் திரைப்படத்துறை சார்ந்தோரும் கலந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு வருடமும் இந்த திரைப்பட விழாவை அனோமா ராஜகருணா மற்றும் அவருடைய அஜண்டா 14 நிறுவனம் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவின் நடுவர்களாக திரைப்பட இயக்குனர் தர்மசிரி பண்டாரநாயக்க, ஒளிப்பதிவாளர் எம்.டி. மகிந்தபால, திரைப்பட விமர்சகர் காமினி வியாங்கொட, திரைப்பட விமர்சகர் முரளீதரன் மயூரன், இந்தியாவின் Documentary Filmmaker Ein Lal  ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.


மாதவனின் “அப்பால்” குறும்படம் Most Gender Sensitive Short film  பிரிவில் சிறந்த படமாக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. அப்பால் திரைப்படத்துடன் இன்னும் இரு சிங்கள குறுந் திரைப்படங்கள் விருதுக்கு முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேபோல் 24 வயதுக்க்கு குறைந்த குறும்பட இயக்குனர்களில் சிறந்த இயக்குனரை தெரிவு செய்து வழங்கப்படும் Most Promising short film maker விருதனையும் “அப்பால்” குறும்படத்தை இயக்கியமைக்காக மாதவன் பெற்றுக்கொண்டார். அதேவேளை சிறந்த அனிமேசன் குறும் திரைப்படத்திற்கான விருதினை “Good boys land” குறும்படத்தை இயக்கிய Lahiru Samarasinghe பெற்றுக்கொண்டார். மனித உரிமை தொடர்பில் பேசப்பட்ட குறும்திரைப்படத்திற்கான விருதினை “A very short film about killing” குறும்திரைப்படத்தினை இயக்கிய சுமுது அத்துகொரளை பெற்றுக்கொண்டதோடு இவர் இயக்கிய மற்றுமொரு குறும் திரைப்படமான “Hole in the wall” இந்த ஆண்டுக்கான சிறந்த குறும் திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. அதேவேளை இந்த ஆண்டுக்கான “Jury” விருது “Beyond the Reality” குறும்திரைப்படத்திற்காக சுஜித் ராஜபக்ச பெற்றுக்கொண்டார். விருது வென்றவர்களுக்கு ஒவ்வொரு விருதுடனும் தலா 20 ஆயிரம் ரூபா பணப்பரிசில்களும் சிறந்த குறும் படத்திற்கு 150 ஆயிரம் ரூபா பணப்பரிசும் மேலதிகமாக வழங்கப்பட்டதுடன் சிறந்த குறும்படத்திற்கா விருதுவென்ற சுமித் அத்துக்கொரளையின் அடுத்த படத்தயாரிப்பிற்கு துணைபுரிவதாக அஜண்டா 14 திரைப்படவிழா சார்பாக உறுதி வழங்கப்பட்டது.






Mathavan Maheswaran receiving "Most Promising short film maker" Award from Director Ilango Ramanathan & Goethe Institute Director


   
Lahiru Samarasinghe receiving "Best Animation Short Film Award" 


Mathavan Maheswaran receiving "Most Gender Sensitive Short film" Award from Canadian High Commissioner & Nimalka Fernando 
 
Sujith Rajapakse receiving "Jury Award" from Ein Lal & Dharmasiri Bandaranayake



Sumudu Athukorala receiving "Best Short Film of the Year" from Filmmaker Asoka Handagama & Anoma Rajakaruna



Mr.Sugadapala Senarath Yappa honored by Anoma Rajakaruna & the Agenda 14 team. 


Pictures by Chamath Hasanka

30 அக்டோபர் 2014

இயக்குனர் முருகதாஸ் ஒரு கதைத்திருடனா?

அண்மையில் வெளிவந்த கத்தி படத்தினுடைய கதையினை தன்னுடையதுதான் என்று கோபி என்ன சமூக ஆர்வலர் உரிமை கோரியிருககின்றார். அவருடைய நேர்காணல் ஒன்றனை இன்று பார்த்தேன். பாவம் அந்த சமூகத்தை நேசிக்கும் படைப்பாளி. அவருடைய தெளிவான பேச்சு, சமூகத்தின்மீது அவருக்கு இருக்கின்ற பற்று, கத்தி படம் தொடர்பாக முருகதாஸைப் பார்த்து அவர் கேட்கின்ற ஆணித்தரமான கேள்விகள், இவற்றைப் பார்க்கும்போது இந்த கத்திபடத்தினை முருகதாஸ் கோபியிடமிருந்து களவாடியிருக்கின்றார் என்பதற்கு மேலும் சான்றாகின்றது

கஜினியும் அதற்கு பின்பு வந்த முருகதாஜின் படங்கள் எல்லாமே வேறுபடங்களை உல்டா செய்து எடுக்கப்பட்டவைதான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதேபோல இதுவரையும் தன்னுடைய படங்கள் எதிலுமே கம்யூனிசம் பற்றி வாயே திறக்காத இந்த வியாபாரி முருகதாஸ் சமூகநலனை முன்னிறுத்தி அதுவும் கம்யூனிஸ கருத்துக்களுடன் ஒரு படம் எடுத்து வெளியிடும்போது அவரை சந்தேகத்துடனே பார்க்க வேண்டியிருக்கின்றது. (அந்தக் கம்யூனிஸ கருத்தும் கோபியினுடையதாம்.) முருகதாஸ் தான் ஒரு நேர்மையாளனாக இருந்திருந்தால் கோபிக்கு எதிராக வழக்குப்போட்டிருக்கவேண்டும் அப்படிச் செய்யாமல் இது பணத்திற்காக நடைபெறும் ஏமாற்று முயற்சி என்று அறிக்கை விட்டிருக்கின்றார் இந்த முருகதாஸ்.

முருகதாஸ் ஒரு நேர்மையானவராக கம்யூனஸித்திற்கு ஆதரவானவராக இருந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கமாட்டார். இயக்குனர் என்பதையும் தாண்டி வியாபாரி என்ற நிலையிலேயே இயங்கிவரும் முருகதாஸ் இப்படிப்பட்ட ஒரு கதையினை யோசித்திருக்கமாட்டார் என்று புலப்படுகின்றது.

உண்மையிலேயே கோபியினுடைய கதை திருடப்பட்டிருந்தால் முருகதாஸ் தண்டிக்கப்படவேண்டும் அத்தோடு அதற்கான விலையினை கொடுக்கவேண்டும் அப்போதுதான் இனிவரும் காலங்களிலாவது பல உதவி இயக்குனர்களுடைய கதை திருடப்படாமல் பாதுகாக்கப்படும்.


கஜினி படத்தின் ஒரிஜினல் படமான மொமென்ரோ படத்தின் இயக்குனர் விரைவில் இந்தியா வருகின்றாராம். முருகதாஸ் அவருடைய படத்தின் கதையினை திருடியதையும் யாராவது அந்த இயக்குனரின் காதில் போட்டுக்கொடுங்கள். அந்தக் கதையினை திருடியதற்காகவும் முருகதாஸ் மீது சட்டநடவடிக்கை எடுக்கட்டும்.

முருகதாஸ் புகழ்பாடும் விஜய் டிவியும் சமூக பிரச்சனைகளை வெளிக்கொண்டுவரும் நீயாநானா கோபிநாத்தும் இந்த கதைத்திருட்டைப் பற்றி நீயா நானா செய்வார்களா இல்லாவிட்டால் வழமைபோலவே வாங்குறதை வாங்கிக்கொண்டு ஜால்ரா அடிப்பார்களா என்பது பலருடைய எதிர்பார்ப்பு.


கோபியினுடைய நேர்காணல்


14 அக்டோபர் 2014

How Old Are You?


மேலே உள்ள தலைப்பு அண்மையில் மலையாள சினிமாவில் வெளிவந்த மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று. இரண்டு நாட்களுக்கு முன்னம் இந்தத் திரைப்படத்தினைப் பார்த்தேன். படம் பிடித்துப் போய்விட்டது. இன்றுதான் அதைப்பற்றி கிறுக்குவதற்று நேரம் கிடைத்தது. இது அந்தப் படத்தினைப் பற்றி விமர்சனம் அல்ல அந்தப் படம் தொடர்பாக நான் கிறுக்கியவை. 


தெற்காசியாவில் அதுவும் இலங்கை மற்றும் இந்தியாவில் பெரும்பாலும் ஆணாதிக்க சமூகங்க கட்டமைப்புக்களுடன்தான் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். பெண்கள் மனைவி என்ற ஸ்தானத்தை திருமணத்தின் மூலம் பெற்றுக்கொண்டு கணவனுக்கு சேவை புரிபவளாகளும் பிள்ளைகளை பெற்று பராமரிப்பவளாகவுமே பெரும்பாலும் இருந்து கொண்டிருக்கின்றாள். படித்து வேலையில் இருப்பவர்கள்கூட இந்த ஆணாதிக்க சமூகத்தின் இறுக்கமான கட்டமைப்புக்களுக்குள் சிக்குண்டு தங்களுடைய கனவுகளை குடும்பத்திற்காக மூட்டைகட்டி ஒரு மூலையில்போட்டுவிட்டு வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். விதிவலக்காக பல பெண்கள் இந்த ஆணாதிக்க சமூகத்திலிருந்து வெளியே வந்து பெண்களுக்கான உரிமைகளை குடும்பத்திலும் சமூகத்திலும் வென்றெடுக்க போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அதில் சில பெண்கள்  ஏனைய பெண்களுக்கு கட்டமைப்பிலிருந்து வெளியே வருவதற்கு முன்மாதியாகவும் இருக்கின்றார்கள். இது ஒரு மிகப்பெரிய பரந்துபட்ட தலைப்பு. இந்தத் தலைப்பினை பிரதான கருப்பொருளாக எடுத்துக்கொண்டு பெண்களுக்கு சமூகக் கட்டமைப்புகளிலிருந்து வெளியே வருவதற்கான ஒரு ஆரம்ப்பப் புள்ளியை அல்லது ஒரு உந்துசக்தியை வழங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் இந்த “How Old Are You?”. 



வருவாய் துறை அலுவலகத்தில் சாதாரண கிளாக்காக பணிபுரியும் நிருபமாவின் கணவன் ராஜீவ்ஆகாசவானிவானொலி அறிவிப்பாளன். அவனுடைய நீண்டகால கனவு  அயர்லாந்து நாட்டுக்கு சென்று குடியேற வேண்டும் என்பதே. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள். நிருபமா தனது கும்பமே தனக்கு எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருப்பவள். அவளுடைய வயதை காரணம்காட்டி அயர்லாந்து செல்வதற்கான விண்ணப்பம் நிராகரிககப்படுகின்றது. அதேவேளை எதிர்பாராத விதமாக நிருபமா தன்னுடைய மகள் ஊடாக கேட்ட ஒரு கேள்வி காரணமாக இந்தியாவின் ஜனாதிபதி நிருபமாவை சந்திக்க விருப்பப்படுகின்றார். ஜனாதிபதியினை சந்திக்கச்செல்லும் நிருபமா எதிர்பாராமல் நடந்த சம்பவம் ஒன்றின் காரணமாக ஜனாதிபதியை நேரில் சந்தித்தும் அவருடன் பேசமுடியாமல் போய்விடுகின்றது. இதன் காரணணமாக அவர் சமூகவலைத்தளங்களில் கேலிக்கு உட்படுகின்றாள். இதேவேளை நிருபமாவின் கணவனுக்கும் மகளுக்கும் அயர்லாந்து செல்வதற்கான விசா கிடைக்கின்றது. இருவரும் நிருபமாவை விட்டுவிட்டு அயர்லாந்து பயணிக்கின்றனர். பின்னர் நிருபமாவினுடைய பள்ளித்தோழி ஒருவரை சந்திக்கும் நிருபமா அதன்மூலம் கல்லூரிக்காலங்களில் அவள் ஒரு சிறந்த ஆளுமையுள்ள ஒருத்தியாக இருந்ததையும் தற்போது திருமணம் முடித்து குடும்பத்துக்காகவே வாழும் ஒரு சாதாரண பெண்ணாக மாறிவிட்டதையும் காண்கின்றாள். மீண்டும் நிருபமாவினுடைய ஆளுமையை வெளியே கொண்டுவர அந்த நண்பி முயற்சிக்கின்றாள். அதிலே வெற்றியும் அடைகின்றாள். இதன் பின்னர் நிருபமா சமூகத்தில் மிகப்பெரிய பொறுப்புக்களை முன்னெடுக்கும் நிலைக்கு உயரும் நிலையினை அடியும்போது அயர்லாந்திலிருக்கும் கணவன் ஊர் திரும்பி அவளுக்கு அயர்லாந்து செல்ல விசா கிடைத்துவிட்தென்றும் மகளுக்கு சரியான உணவு இல்லை ஆகவே நிருபமா வந்தால்எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுகின்றான். அவள் குடும்பத்திற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு அயர்லாந்து போகின்றாளா அல்லது தொடர்ந்தும் இந்தியாவிலே இருந்து தன்னுடைய கனவுகளை நனவாக்கின்றாள் என்பதுதான் படத்தினுடைய சாராம்சம். 


கேரளாவில் மட்டுமல்ல பொதுவாக தெற்காசியாவுக்கும் பொதுவான இந்த பரந்துபட்ட தலைப்பினை மிக அழகாக Bobby Sanjay திரைக்கதையாக்க அதை திரைப்படமாக கொடுத்திருக்கின்றார் இயக்குனர் Rosshan Andrrews
இந்தப்பட்ம் ஆணணாதிக்க கட்டமைப்புக்குள் சிக்கி தன்னுடைய கனவுகளையும் ஆசைகளையும் மூலையில் போட்டு வைத்திருக்கும் பெண்கள் தங்களுடைய நிலையினை உணரவும் பெண்கள் சாதிப்பதற்கு அவர்களுடைய வயது ஒன்றும் பெருட்டே இல்லை என்பதையும் 140 நிமிடங்களுக்குள் மிக அழகாக காட்டியிருக்கன்றார் இயக்குனர். இதில் நிருபமா கதாபாத்திரத்திற்கு வரும் மஞ்சு வாரியர் தன்னுடைய நடிப்பினால் நிருபமா பாத்திரத்திற்கு உயிர்கொடுத்திருக்கின்றார். அத்தோடு சமூகத்தில் காணப்படும் மிகப்பெரிய சிக்கலுடைய பெண்கள் அடக்குமுறை மற்றும் ஆணாதிக்க மனோநிலை மற்றும் கட்டமைப்பு பிரச்சனையை மிக எளிதாக இந்தப் படத்தின்மூலம்  காட்டி அவற்றை தகர்த்துக்கொண்டு பெண்கள் சமூக மட்டத்திற்கு எவ்வாறு உயரலாம் என்பதை இந்தப்படம் மிகத்தெளிவாக காட்டியிருக்கின்றது. கட்டாயம் மலையாளம் பேசுவோர் மாத்திரமல்லாது எல்லா மொழி பேசுபவர்களும் பார்க்கவேண்டிய ஒரு மிகச்சிறந்த படம். 


13 அக்டோபர் 2014

கத்தி யாருக்கு ஷார்ப்? விஜய்கா அல்லது லைக்காவுக்கா?



கத்தி படம் விஜய் இரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஒரு படம். ஆனால் தற்போது சினிமா இரசிகர்கள் எல்லோராலும் வெளிவருமா இல்லை என ஆவலோடு எதிர்பார்க்கப்படும் படம். உண்மையில் கத்தி படத்திற்கு என்னதான் பிரச்சனை? ஏன் இவ்வளவு தடை முயற்சிகள் அந்தப் படத்திற்கு? என்னுடைய ஊகங்கள் கீழே...

1. லைக்கா மொபைல் என்னும் பல்தேசிய வியாபார நிறுவனம் தமிழ் சினிமாவில் காலூன்றுவதை தடுத்தல்.

2. தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிடவேண்டும் அரசியல் ஆசையில் துடித்துக்கொண்டிருக்கும் விஜய்க்கு அரசியல் மட்டத்திலிருந்து கொடுக்கபபடும் நெருக்கடியில் இதுவும் ஒன்று. 

மேலே கூறிய இரு பிரதான காரணங்களிலிலும் முதலாவது காரணமே இந்தக் கத்தி படத்திற்கு ஏற்படுத்தப்படும் தடைகளுக்கு காரணமாக இருக்கவேண்டும் என கருதவேண்டியிருக்கிறது.

சினிமா என்பது கலை என்ற ஒரு விடயத்தினையும் தாண்டி இந்தியாவில் சினிமா என்பது 100% வியாபாரமாகவே பார்க்கப்படுகின்றது.                                  இந்த வியாபாரத்தில் பைனான்ஸியர் தயாரிப்பாளர் தொடக்கம் தியட்டர் முதலாளிவரை குறுகிய காலத்தில் அதிகளவு இலாபத்தினை பார்த்துவிட வேண்டும் என துடித்துக்கொண்டிருப்பவர்கள். சாதாரணமாக இந்தியாவில் திரைப்படம் ஒன்றை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் பைனான்ஸியர்களை அணுகுவார்கள். அவர்களும் குறிப்பிட்ட கால அளவை நிர்ணயித்து பணத்தை தயாரிப்பாளர்களுக்கு வழங்குவார்கள். தயாரிப்பாளர் அதற்குப் பின்னர் படத்தை தயாரிப்பார். ஆரம்பிக்கும்போதே படத்தை திரையிடும் காலத்தினையும் தீர்மானித்துவிடுவார்கள். எல்லாமே பக்காவாக பிளான் பண்ணப்பட்டுத்தான் நடந்துகொண்டிருக்கின்றது. இதில் குறிப்பிட்ட திகதியில் படம் வெளிவராவிட்டால் படத்தின் தயாரிப்பளருக்கு சிக்கல்தான். (விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு வந்த பிரச்சனையும் அதுதான்)

இப்படி இந்திய சினிமா ஒருவரோடு ஒருவர் இணைந்த முறையில் ஒரு மாபியா ஆகவே இயங்கிக்கொண்டு வந்திருக்கின்றது இங்கே இதற்கும் கத்தி பிரச்சனைக்கும் என்ன தொடர்பு என்று உங்களுக்கு கேட்கத் தோன்றும்.
பல்லாயிரக்கணக்கான மில்லியன் முதலீட்டுடன் செயற்பட்டுவரும் லைக்கா போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் திரைப்படம் ஒன்றை தயாரிக்க வரும்போது ஏற்கவே இருந்த பைனான்ஸியர், தயாரிப்பாளர் என்ற ஒன்றுக்குள் ஒன்று பின்னப்பட்ட வலையமைப்பினை இந்த பல்தேசிய வியாபார நிறுவனங்கள் தங்கியிருக்கத்தேவையில்லை. நேரடியாகவே எத்தனை கோடிகளையும் முதலிட அவர்கள் தயாராகவிருப்பார்கள். காரணம் அவர்களில் இருக்கும் தாராள பணப்புழக்கம். இதனால் ஏற்கனவே இருந்த நடைமுறைகள் சிறிது சிறிதாக ஆட்டம் காணத் தொடங்கும் இவ்வாறு இடம் பெற்றால் ஏற்கனவே சினிமா மூலம் கொள்ளை இலாபம் கண்டு சுவை பிடிபட்ட முதலாளிகளுடைய இருப்புக்கு அரம்பத்தில் பெரிதாக சிக்கல் இல்லாவிட்டாலும் லைக்காவின் வரவு பல புதிய பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு இந்தியாவில் சினிமாவில் நேரடியாக முதலிட வாய்ப்புக்களை உருவாக்கிவிடும் இது முதலாளிகளில் இருப்பினை கேள்விக் குறியாக்கிவிடும். ஆகவே லைக்காவின் வரவை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தவேண்டும அல்லது பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகள் குடுத்துதமிழ் சினிமாவில் முதலிட நினைக்கின்ற ஏனைய பல்தேசிய நிறுவனங்களுக்கு பயத்தினை ஏற்படுத்தவேண்டும் இதன்மூலம் அவர்களை உள்ளே வரவிடாமல் செய்யவேண்டும். இந்தப் பின்னணிதான் கத்தி படத்திற்கும் லைக்கா நிறுவனத்திற்கும் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சனைகளுக்கு காரணம். இதற்கு இந்தப் பிரச்சனைகளுக்கு பின்னாலிருப்பவர்கள் கண்டுபிடித்த காரணங்கள்தான் லைக்கா நிறுவனம் இலங்கை அரசுடனும் ராஜபக்ஷ குடும்பத்துடனும் மிகவும் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருக்கின்ற ஒரு நிறுவனம் என்ற கருத்தினை முன்வைத்து பிரச்சனைகளை வலுவாக்கியதுதான்.

ஆனால் அந்தோ பாவம் தமிழ் சினிமா இரசிகர்கள். ஏற்கனவே நடிகர்களுக்காக பிரிந்துநின்று அடிபடும் அவர்களை இருபகுதியும் நன்றாக பயன்படுத்துகின்றார்கள். அத்தோடு இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி லைக்கா நிறுவனத்தின் எதிரிகளும் புகுந்து விளையாடுகின்றார்கள் ஆனால் இந்தப் பிரச்சனைகளுக்கு அப்பால் இந்தப் பிரச்சனைகளால் லைக்கா நிறுவனத்திற்கு இலவசமாக தங்களது நிறுவனத்தினைப் பற்றிய விளம்பரம் கிடைத்திருக்கின்றது. கத்தி பிரச்சனைக்கு முன்னர் லைக்கா பற்றி தெரிந்தும் அவர்களுடைய சேவையினை பயன்படுத்தாமல் இருந்தவர்கள் இப்போது லைக்கா நிறுவனத்தின் சிம் அட்டைகளை பாவித்து இந்தியாவுக்கு மிகக்குறைந்த செலவில் கதைத்துக் கொண்டிருக்கின்றார்களாம்.

ஆக மொத்தத்தில் கத்தி விஜய்கும் முருகதாசுக்கும் ஷாப்பா வேலை செய்கிறதோ இல்லையோ லைக்கா என்ற பல்தேசிய வியாபார நிறுவனத்திற்கு நல்ல ஷார்ப்பாகவே வேலை செய்கின்றது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று இதைத்தான் சொல்றது.

fb - வதீஸ் வருணன்- 

07 அக்டோபர் 2014

மெட்ராஸ் - கொண்டாடப்படவேண்டிய படமல்ல


இது விமர்சனமல்ல ரௌத்திரம்
அண்மையில் வெளிவந்த மெட்ராஸ் திரைப்படம் பலராலும் பாராட்டப்பட்டது. இதன் காரணமாக திரைப்படத்தினைப் பார்த்தேன். தமிழ் சினிமாவின் தலைவிதியை எண்ணி நான் நொந்துகொண்டேன்
தமிழ் சினிமா குட்டைக்குளிருந்து வெளியேவரமுடியாமல் வெளியே வந்துவிட்டதுபோல் மாயையை ஏற்படுத்திக் கொண்டு வந்திருக்கிறது இந்தத் திரைப்படம். மற்ற வியாபார தமிழ் சினிமாவைப்போலவே இந்திரைப்படத்திலும் கொலை, வெட்டுக்குத்து, அடிதடி, அரசியல், துரோகம் எல்லாமே அப்படியே பிடித்துவைத்த பிள்ளையார் போல குடியிருக்கிறது
புதிதாக இருப்பது, ஹீரோயிசம் காட்டாது ஒவ்வொருவரா கொலை செய்துவிட்டு இறுதியில் சிறுவர்களுக்கு பாடமெடுக்கும் கார்த்தியும் கதைக்களமான "வட சென்னையும்" மட்டும்தான்.
வழமையாக தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் பஞ்ச வனம்பேசி 100 பேரை அடித்து வீழ்த்தி பார்வையாளனுக்குள்ளும் வன்முறையை புகுத்தி வீடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் நடைமுறை இருந்துகொண்டிருந்தது. இந்தப்படத்தில் சிறிது வித்தியாசமாக கதாநாயகன் ஹீரோயிசம் காட்டாது படம் நெடுகிலும் கொலைசெய்துகொண்டு பார்வையாளர்களுக்குள் சத்தமில்லாது வித்தியாசமான வன்முறை சிந்தனையினை தூண்டி விட்டிருக்கின்றார் இயக்குனர். அட்டக்கத்தி என்ற நல்ல ஒரு திரைப்படத்தினை கொடுத்த Pa Ranjith தானா இந்த படத்தை எடுத்தது என்று மீண்டும் என்னுள்ளே கேள்வியை எழுப்ப வைத்துவிட்டது இந்தப் படம்.
*இன்று ஒரு செய்தி பார்த்தேன். சமூக மாற்றத்துக்கான விருது மெட்ராஸ் படத்திற்கு வழங்கப்போகின்றார்களாம். என்ன கொடுமையான ஒரு அறிவிப்பு இது. வன்முறைக் கலாச்சாரத்தினை வித்தியாசமான முறையில் மக்களுக்குள் புகுத்திய இப்படத்திற்கு சமூக மாற்றத்திற்கான விருது கொடுத்து தவறான முன்மாதிரியை தமிழ் சினிமாவுக்கு காட்டப்போகின்றார்கள் என்ற வருத்தம்தான் எனக்கு.
கலையினை கட்டாயக் கொலைசெய்து வியாபாரமாக மாறிவிட்ட தமிழ் சினிமாவின் முடிவு எவ்வாறு இருக்கும்?

17 மார்ச் 2013

பாலாவின் பரதேசி!



இயக்குனர் பாலா மற்றும் அவருடைய உயிரை உலுக்கும் படங்கள் தொடர்பாக பத்திரிகைகளில் கேட்டறிந்திருந்தாலும் தியட்டரில் பார்த்த அவருடைய முதற்படம் “பிதாமகன்”. உயர்தரம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் பார்த்தேன். அதன் பின்னரே தேடிவாங்கி "சேது" மற்றும் "நந்தா" படங்களை பார்த்திருந்தேன். பிதாமகன் படம் பார்த்ததிலிருந்து அதற்குப் பிறகு வெளிவந்த நான்கடவுள், அவன் இவன் மற்றும் தற்போது வெளிவந்திருக்கும் பரதேசிவரை தியட்டரிலேயே பார்த்திருக்கின்றேன். அதுவும் பாலாவின் படங்களை நண்பர்களுடன் சென்று பார்க்காமல் தனியாகவே பார்ப்பது வழக்கம். இந்த படங்கள் எல்லாமே ஒருவகையின் என்னைப்பாதித்ததுண்டு.

பாலா போன்ற கலைப்பட இயக்குனர்கள் உண்மைகளை எடுத்து ஜதார்த்தமாகவும் சிலஇடங்களில் ஜதார்த்தத்தைதாண்டி சில காட்சிகளை அமைத்து அதனுடைய தாக்கத்தினை பார்வையாளர்களுக்கு வழங்கிவிடுவார்கள். இவர்களுடைய படம் முடிவடையும்போது பார்வையாளர்களுடைய மனதை கலங்கடித்துவிடும். அந்தவகையில் நேற்றுப் பார்த்த பரதேசி படம் என்னை மிகவும் Disturb பண்ணிவிட்டது. 
தேயிலைத்தோட்டத்து வாழ்க்கையின் ஆரம்பத்தை அல்லது அவர்கள் வெள்ளையர்களின் தேயிலைதோட்டங்களில் வேலை செய்வதற்கு தங்களது சொந்த ஊரிலிருந்த எவ்வாறு ஏமாற்றி அழைத்து வரப்பட்டார்கள் அங்கே எவ்வாறு வேலைவாங்கப்பட்டார்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பதை தனக்கே உரிய வன்முறைப்பாணியில் இந்தப்படத்தில் சொல்லியிருக்கின்றார் இயக்குனர் பாலா. 

இந்தப் படத்தில் நடித்த அதர்வா, வேதிகா, தன்ஷிகா உட்பட பெரும்பாலும் படத்திலே இருந்த எல்லோரும் தங்களது பாத்திரங்களை வெகுசிறப்பாகவே செய்திருக்கின்றார்கள். "நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு" இது இயக்குனர் பாலாவின் எல்லாப்படங்களிலுமே இருக்கின்ற ஒரு சிறப்பு.
பின்ணணி இசைதான் படத்தினுடைய மிகப்பெரிய பிரச்சனையே. பின்ணணி இசை இல்லாமலேயே இந்த படத்தினை வெளியிட்டிருக்கலாம் என்று படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது தோன்றியது எனக்கு.
சில இடங்களில் பின்ணணி இசை காட்சியுடன் ஒட்டாமலேயே வேறு ஒரு திசையில் பயணிக்கிறது. ஜீவி இப்படியான படங்களுக்கு பின்ணணி இசைவழங்குவதற்கு இன்னும் பக்குவப்படவில்லை என தோன்றுகிறது. அத்தோடு வெள்ளையர்களால் கொடுமைப்பட்டதை இன்னும் கூடுதலாக காட்டியிருக்கலாம்.  மொத்தத்தில் எல்லோரும் கட்டாயம் பார்க்கவேண்டிய உயிரினை உலுக்கும் இயக்குனர் பாலாவின் படம் பரதேசி.



அண்மையில் இயக்குனர் பாலா நடிகர்களை தாக்குவதுபோலவும் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டுவதுபோலவும் வீடியோக்கள் வெளிவந்து சர்ச்சையினை தோற்றுவித்திருக்கினறது. நானும் அந்த வீடியோவை பார்த்தேன் ஆனால் வீடியோவில் காட்டப்பட்டவை காட்சியில் வந்திருப்பவையே ஆகவே ஒரு காட்சியை எப்படி நடிக்கவேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு காட்டும்போது எடுக்கப்பட்டவீடியோக்கள்தான் அவை. மேலும் திரைப்படங்களில் பயன்படுத்தம் அந்த தடிக்களால் அடிக்கும்போது வலி ஏற்படாது சத்தம் மட்டுமேவரும் சோ அதைப்பற்றி பெரிதாக வெளியில் இருப்பவர்கள் அலட்டிக்கொள்ளவோ அல்லது அதை தூக்கிப்பிடித்துக்கொண்டு மனிதஉரிமை மீறல் என்று கூக்குரலிடவோ தேவையில்லை என்பதே இந்தத்துறைக்குள் உதவி இயக்குனராக இருக்கும் என்னுடைய கருத்து.


என்னைப் பொறுத்தளவில் பாலா போன்ற இயக்குனர்கள் அவ்வாறுதான் இருப்பார்கள். தாங்கள் நினைப்பதுபோல நடிகர்கள் நடிக்கவில்லையென்றால் பேச்சு ஏச்சுக்கள் வாங்கவேண்டி வரும் சிலவேளைகளில் அடியும் வாங்கவேண்டிவரும். ஏன் சிலவேளைகள் உதவி இயக்குனர்கள்தான் கெட்டவார்த்தை திட்டுக்களையும் அடிகளையும் வாங்கவேண்டிவரும். இதை நான் இங்கு ஏன் சொல்கின்றேன்என்றால் எல்லாம் என்னுடைய அனுபவம்தான். இலங்கையின் சிங்கள இயக்குனர் அசோக ஹந்தகமகூட நடிகர்கள் சரியாக நடிக்கவில்லையென்றால் நடிகர்களுடன் கடுமையாக நடந்துகொள்வார். சிலவேளைகளில் எங்களுடனும் கடுமையாகத்தான் நடந்துகொள்வார். இவ்வாறான இயக்குனர்கள் அவர்களுக்கு தேவையான நடிப்பை எவ்வாறாயினும் நடிகர்களை கஷ்டப்படுத்தியாவது பெறவே முயற்சிப்பார்கள் என்பதே உண்மை. ஆகவே அதைப்பற்றி வெளியிலுள்ளவர்கள் அலட்டிக்கொள்ளாமல் இருப்பதே சாலச்சிறந்தது.