A Promised Land

Tamil TV லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tamil TV லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 நவம்பர் 2020

பகுத்தறிவாளன் மக்களை முட்டாளாக்கலாமா?

 "பகுத்தறிவாளன் மக்களை முட்டாளாக்கலாமா?" என்ன கேள்வியை பார்த்தவுடன் உங்களுக்கு நினைவுக்கு வரும் நபர் யார்? 

ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்....

.

.

.

பகுத்தறிவாளன் என்றவுடன் என்மனதுக்கு நினைவுக்கு வருபவர் நடிகர் கமல்ஹாசன். உங்களில் பலபேருக்கும் கமல்ஹாசன் என்னபெயர் மனதில் ஒருகணம் வந்துபோயிருக்கலாம். இந்திய சினிமா நடிகர்களின் முற்போக்கு சிந்தனை நிரம்பிய திரைப்படங்களை தயாரித்ததிலும் நடித்ததிலும் அதற்கு முன்மாதிரியாக செயற்படுவர்களிலும் உலகநாயகன் என்று தமிழ்சினிமா இரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கமல்ஹாசன் தொடர்பிலேயே ஒரு விடயத்தை மிகவும் சுருக்கமாக கூறிச்செல்லப் போகின்றேன். 

அதற்கு முதலில் உங்களுக்கு ஒரு விடையத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். கமல்ஹாசன் எனும் திரைப்பட நடிகரின் இரசிகன் நான். நாயகன், சலங்கையொலி போன்ற படங்களை பார்த்ததன்மூலம் அவர் திரைப்படங்கள்பால் ஈர்க்கப்பட ஒருவன்.

மக்கள் நீதி மய்யம் என்னும் பெயர் தமிழ் நாட்டில் கட்சியொன்றைத் தொடங்கி செயற்பட்டு வருபவர். நடிகள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற விதி எங்குமில்லை அத்துடன் அது அவருடைய ஜனநாயகத்தின் மீது அவருக்கு இருக்கும் உரிமை. தமிழ்நாட்டு மக்கள் விரும்பினால் அவரை முதலமைச்சராகக் கூட ஆக்கலாம். அந்த வகையில் இந்தவிடயத்தில் அவரை விமர்சிப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. 

ஆனால் பிக்பாச் எனும் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தொடர்ச்சியாக நான்க்கு முறை செயற்பட்டிருக்கின்றார். பிக்பாஸ் என்னும் ரியலிட்டி ரிவி நிகழ்ச்சியானது நெதர்லாந்து நாட்டின் பிக் ப்ரதர் (Big Brother) எனும் ரியலிட்டி ஷோவின் இந்திய வேர்ஷன்.  Endemol Shine India எனும் நிறுவனம் இந்தியாவில் இந்நிகழ்ச்சியை தயாரிப்பதற்கான உரிமையை வாங்கி ஹிந்தி தமிழ் தெலுங்கு கன்னடா மராத்தி மலையாளம் போன்ற மொழிகளில் தயாரித்து வருகிறது. 

18 பேரை ஒரு வீட்டுக்குள் அடைத்துவிட்டு அவர்கள் அடிபடுவதையும் பிடிபடுவதையும் கமராக்களால் படம்பிடித்து படத்தொகுப்பு செய்து 100 நாட்களுக்கு ஒளிபரப்பும் இந்த நிகழ்சியை பகுத்தறிவாளனக தன்னைக் காட்டிக்கொண்டு முற்போக்கான செயல்களில் ஈடுபடும் கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. 

பிக் பிரதர், பிக்பாஸ் போன்ற ரியலிட்டி ஷோக்கள் எப்படி ஆரம்பித்து எப்படி முடிவடைய வேண்டும் எந்தக் கதாபாத்திரம் வெல்லவேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அதன்படியே முன்னகர்த்திச் செல்லப்படுபவையா இவை காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாது எஸ்.எம்.எஸ் என்ற போர்வையில் மக்களிடம் கோடிக்கணக்கான பணத்தினை சுருட்டும் இப்படியானதொரு நிகழ்ச்சியை பாருங்கள் என்று கமல் அழைப்பு விடுப்பதும் அதைத் தொகுத்து வழங்குவதும் விமர்சிக்கக்கூடியது. 

தான் செய்வது சரியென தனது தரப்புக் காரணங்களை நடிகர் கமல்ஹாசன் நியாயப்படுத்த முடியும் ஆனால் அதையும் தாண்டி ஒரு பகுத்தறிவாளனாக / முற்போக்குவாதியாக அவர் இதனை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.