A Promised Land

30 அக்டோபர் 2014

இயக்குனர் முருகதாஸ் ஒரு கதைத்திருடனா?

அண்மையில் வெளிவந்த கத்தி படத்தினுடைய கதையினை தன்னுடையதுதான் என்று கோபி என்ன சமூக ஆர்வலர் உரிமை கோரியிருககின்றார். அவருடைய நேர்காணல் ஒன்றனை இன்று பார்த்தேன். பாவம் அந்த சமூகத்தை நேசிக்கும் படைப்பாளி. அவருடைய தெளிவான பேச்சு, சமூகத்தின்மீது அவருக்கு இருக்கின்ற பற்று, கத்தி படம் தொடர்பாக முருகதாஸைப் பார்த்து அவர் கேட்கின்ற ஆணித்தரமான கேள்விகள், இவற்றைப் பார்க்கும்போது இந்த கத்திபடத்தினை முருகதாஸ் கோபியிடமிருந்து களவாடியிருக்கின்றார் என்பதற்கு மேலும் சான்றாகின்றது

கஜினியும் அதற்கு பின்பு வந்த முருகதாஜின் படங்கள் எல்லாமே வேறுபடங்களை உல்டா செய்து எடுக்கப்பட்டவைதான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதேபோல இதுவரையும் தன்னுடைய படங்கள் எதிலுமே கம்யூனிசம் பற்றி வாயே திறக்காத இந்த வியாபாரி முருகதாஸ் சமூகநலனை முன்னிறுத்தி அதுவும் கம்யூனிஸ கருத்துக்களுடன் ஒரு படம் எடுத்து வெளியிடும்போது அவரை சந்தேகத்துடனே பார்க்க வேண்டியிருக்கின்றது. (அந்தக் கம்யூனிஸ கருத்தும் கோபியினுடையதாம்.) முருகதாஸ் தான் ஒரு நேர்மையாளனாக இருந்திருந்தால் கோபிக்கு எதிராக வழக்குப்போட்டிருக்கவேண்டும் அப்படிச் செய்யாமல் இது பணத்திற்காக நடைபெறும் ஏமாற்று முயற்சி என்று அறிக்கை விட்டிருக்கின்றார் இந்த முருகதாஸ்.

முருகதாஸ் ஒரு நேர்மையானவராக கம்யூனஸித்திற்கு ஆதரவானவராக இருந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கமாட்டார். இயக்குனர் என்பதையும் தாண்டி வியாபாரி என்ற நிலையிலேயே இயங்கிவரும் முருகதாஸ் இப்படிப்பட்ட ஒரு கதையினை யோசித்திருக்கமாட்டார் என்று புலப்படுகின்றது.

உண்மையிலேயே கோபியினுடைய கதை திருடப்பட்டிருந்தால் முருகதாஸ் தண்டிக்கப்படவேண்டும் அத்தோடு அதற்கான விலையினை கொடுக்கவேண்டும் அப்போதுதான் இனிவரும் காலங்களிலாவது பல உதவி இயக்குனர்களுடைய கதை திருடப்படாமல் பாதுகாக்கப்படும்.


கஜினி படத்தின் ஒரிஜினல் படமான மொமென்ரோ படத்தின் இயக்குனர் விரைவில் இந்தியா வருகின்றாராம். முருகதாஸ் அவருடைய படத்தின் கதையினை திருடியதையும் யாராவது அந்த இயக்குனரின் காதில் போட்டுக்கொடுங்கள். அந்தக் கதையினை திருடியதற்காகவும் முருகதாஸ் மீது சட்டநடவடிக்கை எடுக்கட்டும்.

முருகதாஸ் புகழ்பாடும் விஜய் டிவியும் சமூக பிரச்சனைகளை வெளிக்கொண்டுவரும் நீயாநானா கோபிநாத்தும் இந்த கதைத்திருட்டைப் பற்றி நீயா நானா செய்வார்களா இல்லாவிட்டால் வழமைபோலவே வாங்குறதை வாங்கிக்கொண்டு ஜால்ரா அடிப்பார்களா என்பது பலருடைய எதிர்பார்ப்பு.


கோபியினுடைய நேர்காணல்


கருத்துகள் இல்லை: