A Promised Land

Shortfilm லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Shortfilm லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 டிசம்பர் 2014

4th Agenda Short Film Festival - 2014



கடந்த 12- 14ம் திகதிவரை கொழும்பில் 4வது முறையாக நேற்று இடம்பெற்று முடிந்த
அஜண்டா 14 குறும்திரைப்பட விழாவில் முதன்முறையாக 20க்கும் மேற்பட்ட தமிழ்க் குறும்படங்கள் பங்குபற்றியிருந்தன அதில் விமல்ராஜின் “திரைக்கதையில் அவள்” கலிஸின் “குரும்பை” றினோசனின் “ஆனந்தி” மாதவனின் “அப்பால்” சமிதனின் “நான் நீ அவர்கள்”, சிவராஜின் "பை" ஆகிய குறும்படங்கள் திரையிடலுக்காக தெரிவுசெய்யப்பட்டு பார்வையாளர்களுக்காக திரையிடப்பட்டன.  அத்தோடு சிங்கள தமிழ் என்ற வேறுபாடு இல்லாமல் குறும் திரைப்படங்கள் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.


குறும்திரைப்பட விழாவின் நேற்றைய இறுதிநாளான நேற்று 14.12.2015 இடம்பெற்ற விருது வழங்கும் விழாவில் பிரதம விருந்தினராக இலங்கையின் திரைப்பட இயக்குனர் அசோக ஹந்தகம கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராக 45 வருடங்களுக்கு முன்னர் “காகமும் மனிதர்களும்” என்ற குறும்படத்தினை இயக்கி இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற சுகதபால செனரத் யாப்பா கலந்து சிறப்பித்தார். அத்தோடு சுவிஸ்லாந்தின் உயஸ்தானிகர், கனடாவின் உயஸ்தானிகர், Goethe Institute Director உட்பட பல வெளிநாட்டு உள்நாட்டு பிரமுகர்கள் மற்றும் திரைப்படத்துறை சார்ந்தோரும் கலந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு வருடமும் இந்த திரைப்பட விழாவை அனோமா ராஜகருணா மற்றும் அவருடைய அஜண்டா 14 நிறுவனம் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவின் நடுவர்களாக திரைப்பட இயக்குனர் தர்மசிரி பண்டாரநாயக்க, ஒளிப்பதிவாளர் எம்.டி. மகிந்தபால, திரைப்பட விமர்சகர் காமினி வியாங்கொட, திரைப்பட விமர்சகர் முரளீதரன் மயூரன், இந்தியாவின் Documentary Filmmaker Ein Lal  ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.


மாதவனின் “அப்பால்” குறும்படம் Most Gender Sensitive Short film  பிரிவில் சிறந்த படமாக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. அப்பால் திரைப்படத்துடன் இன்னும் இரு சிங்கள குறுந் திரைப்படங்கள் விருதுக்கு முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேபோல் 24 வயதுக்க்கு குறைந்த குறும்பட இயக்குனர்களில் சிறந்த இயக்குனரை தெரிவு செய்து வழங்கப்படும் Most Promising short film maker விருதனையும் “அப்பால்” குறும்படத்தை இயக்கியமைக்காக மாதவன் பெற்றுக்கொண்டார். அதேவேளை சிறந்த அனிமேசன் குறும் திரைப்படத்திற்கான விருதினை “Good boys land” குறும்படத்தை இயக்கிய Lahiru Samarasinghe பெற்றுக்கொண்டார். மனித உரிமை தொடர்பில் பேசப்பட்ட குறும்திரைப்படத்திற்கான விருதினை “A very short film about killing” குறும்திரைப்படத்தினை இயக்கிய சுமுது அத்துகொரளை பெற்றுக்கொண்டதோடு இவர் இயக்கிய மற்றுமொரு குறும் திரைப்படமான “Hole in the wall” இந்த ஆண்டுக்கான சிறந்த குறும் திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. அதேவேளை இந்த ஆண்டுக்கான “Jury” விருது “Beyond the Reality” குறும்திரைப்படத்திற்காக சுஜித் ராஜபக்ச பெற்றுக்கொண்டார். விருது வென்றவர்களுக்கு ஒவ்வொரு விருதுடனும் தலா 20 ஆயிரம் ரூபா பணப்பரிசில்களும் சிறந்த குறும் படத்திற்கு 150 ஆயிரம் ரூபா பணப்பரிசும் மேலதிகமாக வழங்கப்பட்டதுடன் சிறந்த குறும்படத்திற்கா விருதுவென்ற சுமித் அத்துக்கொரளையின் அடுத்த படத்தயாரிப்பிற்கு துணைபுரிவதாக அஜண்டா 14 திரைப்படவிழா சார்பாக உறுதி வழங்கப்பட்டது.






Mathavan Maheswaran receiving "Most Promising short film maker" Award from Director Ilango Ramanathan & Goethe Institute Director


   
Lahiru Samarasinghe receiving "Best Animation Short Film Award" 


Mathavan Maheswaran receiving "Most Gender Sensitive Short film" Award from Canadian High Commissioner & Nimalka Fernando 
 
Sujith Rajapakse receiving "Jury Award" from Ein Lal & Dharmasiri Bandaranayake



Sumudu Athukorala receiving "Best Short Film of the Year" from Filmmaker Asoka Handagama & Anoma Rajakaruna



Mr.Sugadapala Senarath Yappa honored by Anoma Rajakaruna & the Agenda 14 team. 


Pictures by Chamath Hasanka

20 அக்டோபர் 2014

ஐய்யய்யோ கத்தி(கள்)... இதுதான் றியல் கத்தி

தலைப்பைப் பார்த்து என்னவோ ஏதாவென்று பதறியடிச்சு ஓடிந்த அனைவருக்கும் நன்றிகள்

இங்கே நான் பகிரும் இந்த வீடியோ இலங்கையில் தயாரிக்கப்பட்டு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுவென்ற குறும் திரைப்படம். இதனுடைய பெயர் கத்திகள். இதை 2008ம் ஆண்டு என்னுடைய நண்பர் ஆனந்த ரமணன் இயக்கியிருந்தார்.

20 செப்டம்பர் 2014

A Gun & A Ring

அண்மையில் கொழும்பில்இடம்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரே ஒரு தமிழ்த் திரைப்படம் A Gun & A Ring. அதை திரையரங்கில் சென்று பார்க்கமுடியாது போய்விட்டது காரணம் இந்தப்படம் திரையிடப்பட்ட அதேநாளிலேயே என்னுடைய குறும்படமும் வேறு ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டது. இதனால் திரையரங்கில் திரைப்படத்தினை பார்க்க முடியவில்லை. சரி விடயத்திற்கு வருவோம். நான் திரையிடப்பட்ட இரண்டு முறையும் பார்கமுடியாமல் போன காரணத்தினால் இயக்குனர் தந்த இணைய முகவரியில் இந்தப்படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. பரவலாக இந்தப்படத்தினைப் பற்றி ஏற்கனவே பலர் தமது பார்வைகளை முன்வைத்தபடியால் நான் அவற்றைப்பற்றிக் கதைக்காமல் வேறு சில விடயங்களை கதைக்கலாம் என முடிவு செய்திருக்கின்றேன்.

சும்மா சப்பைப்படங்களை ஒருபோதும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடுவதற்கு தெரிவு செய்யமாட்டார்கள். ஆனால் இந்தப்படம் ஷங்காய் திரைப்படவிழாவில் திரையிடுவதற்கு முதல்முறையாக உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்டபோதே இந்தப்படத்தில் ஏதோ விசயம் இருக்கவேண்டும் என ஊகித்திருந்தேன். கொழும்பில் இடம்பெறும் சர்வதேச திரைப்பட விழாவில் எந்தவொரு தமிழ்ப்படமும் இல்லையென தெரியவந்தபோது (தமிழ்நாட்டுப்படங்களை இங்கே திரையிட ஏற்பாட்டாளர்கள் விரும்பியிருந்தபோதும் இந்திய தயாரிப்பாளர்கள் விரும்பாத காரணத்தினால் சில படங்களை திரையிடமுடியாமல் போய்விட்டது) நான் இந்தத்திரைப்படத்தினை கொழும்பில் திரையிட முன்மொழிந்திருந்தேன். இதன் பிறகே அவசர அவசரமான இயக்குன லெனின் அவர்களை தொடர்பு கொண்டு திரைப்படத்தை வாங்கி கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவினுடைய ஏற்பாட்டாளர்களிடம் கொடுத்திருந்தேன். அவர்களுக்கும் படம் பிடித்துப்போக படத்தினை தணிக்கைக்கு அனுப்பி தணிக்கையும் கிடைத்தபடியால் இலங்கைப் பார்வையாளர்களுக்கு இந்த அருமையான படத்தினை பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இதற்கு காரணமாகவிருந்த அனோமா ராஜகருணா, அசோக ஹந்தகம மற்றும் பிரசன்ன விதானகே ஆகியோருக்கு நன்றி கூறவேண்டும்.

இந்தப் படத்தில் எனக்கு பிடித்தது படத்தினுடைய திரைக்கதை கதாபாத்திரங்களின் தெரிவு இசை மற்றும் இயக்கம். ஒளிப்பதிவு சரியில்லை என பல தமிழ் பார்வையாளர்கள் கூறியபோதும் நான் இந்தப்படத்தினைப் பார்க்கும்போது ஒளிப்பதிவு இந்தப் படத்தின் கதையினை எந்தஒரு இடத்திலும் சிக்கலாக்கவில்லை ஆகவே எனக்கு ஒளிப்பதி தொடர்பில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

பொதுவாக சர்வதேச திரைப்படவிழாக்களில் ஒரு படத்தினை தெரிவு செய்யும் போது அந்தப் படத்தின் கதையின் நேர்மை மிகமுக்கியமான இடத்தில் இருக்கின்றது. இந்தப் படம் உலகலாவிய ரீதியில் வெளிவரும் தமிழ்ப் படங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் முக்கியமான இடத்தில் இருக்கின்றது. காரணம் இந்தப்படத்தின் கதையில் இருக்கின்ற நேர்மை. இயக்குனர் கதையினை சிக்கலான திரைக்கதையினூடு சொல்லமுற்படும்போது அதை கவனமாக கையாண்ட விதம் ஆகிய இரண்டையும் முக்கியமாக கூறலாம். ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் ஒவ்வொரு பின்னணி. சில பாத்திரங்களின் பின்னணியை இயக்குனர் கூறும்போதும் சில பாத்திரங்களின் பின்னணி கூறப்பட்டிருக்கவில்லை. அப்படி கூறவும் தேவையில்லை. பார்வையாளனாகிய என்னை அவற்றை ஊகிக்க விடுவது இன்னும் சாலச் சிறந்தது. மற்றையது கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் மிகப்பொருத்தமானவர்களை தெரிவு செய்திருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியது.

அடுத்தது இசை. இந்தப் படத்திற்கு இசை மற்றுமொரு பலம். இந்தப் படத்தின் கதையினை இன்னும் ஆழமாக பார்வையாளனுக்கு கொண்டு சேர்ப்பதில் இசை முக்கிய இடத்தில் இருக்கின்றது. திரைக்கதைக்கு தேவையான இடத்தில் இசையினை சரியாக பயன்படுத்தியிருக்கின்றார் இயக்குனர்.


இறுதியாக படத்தில் சொல்லப்பட்ட அரசியல் சொல்லப்பட்ட விதம் தொடர்பில் எனக்கு சில முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி தரமான ஒரு தமிழ்ப் படமாக இந்தப் படத்தினைக் கருதலாம். அந்தவகையில் இந்தப் படத்தினை உருவாக்கிய இயக்குனர் லெனின் அவர்களும் இந்த பணத்தினை செலவு செய்து உருவாக்கிய விஷ்ணு முரளியும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இலங்கைத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவரும் திரைப்படங்களில் மிகவும் முக்கியமான இடத்தில் இந்த கன் அன் ரிங் திரைப்படம் இருக்கின்றது என்பதனை மிகவும் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம்.

Official Page https://www.facebook.com/aGunANDaRing 

06 ஜனவரி 2014

என்னுடைய முதல் குறும்படம் "தவறிப் பிறந்த தரளம்"


Synopsis 

இலங்கையின் வடக்கில் 2009 யுத்தம் முடிவடைந்த பின்னர் மீளக்குடியமர்வுகள் இடம்பெற்ற பின்பும் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உளவில் ரீதியான தாங்கங்களிலிருந்து இன்னும் மீண்டுவரவில்லை. யுத்தகாலத்தில் ஏற்பட்ட சிறுவயதுத் திருமணங்கள் பல ஆயிரக்கணக்கான சிறுவர்களை இந்த உருவாக்கியிருந்தது. அப்படியான சிறுவயது திருமணம் மூலம் பிறந்த ஒரு சிறுவன் போரின் உளவியல் தாக்கங்களிலிருந்து விடுபடாமல் பெற்றோருடன் வசித்துவருகின்றான். இதேவேளை அந்தச் சிறுவனுடைய பெற்றோருக்கிடையில் ஏற்படும் பிரச்சனை காரணமாக எவ்வாறு சிறுவன் பாதிக்கப்படுகின்றான் அதிலிருந்து வெளிய வருகின்றான் என்பதையும் இந்தக் குறும்படம் கூறமுயற்சி செய்கின்றது.


As resettlement initiatives take place in the North of Sri Lanka, following the end of the war in 2009, the children who were affected psychologically due to the war have still not recovered from their trauma. Additionally, child marriages that took place during war-time gave birth to many children in broken homes. This film follows the story of a young boy, who suffers from Post Traumatic Stress Disorder (PTSD) after the war. He is the only child of young parents who were forced into marriage as children. This short film explores how he is affected by marital problems between his parents and how he attempts to escape his living hell.




Cast and Crew

அம்மா - பிரியா
மகன் - பிரகாஸ்
அப்பா - தர்மலிங்கம்
பெண் - தனுசியா

இளைஞர்கள் - சுலக்ஷன்
                         நில்ருக்ஷன்
                         என்.சுலக்ஷன்

எழுத்து இயக்கம் - வதீஸ் வருணன்

ஒளிப்பதிவு - சமந்த தசநாயக்க

படத்தொகுப்பு ஒலிச்சேர்க்கை - சசங்க சஞ்சீவ

தயாரிப்பு - வதீஸ் வருணன் | விப்லன் ஒணோராஜ்