A Promised Land

29 ஜனவரி 2017

குழம்பிய நிலையிலுள்ள "ஈழம்" ஆதரவாளர்கள்

ஈழ ஆதரவாளர்கள் என சொல்லிக்கொள்வோர் எப்போதுதான் தெளிந்த ஒரு நிலையில் இருந்திருக்கின்றார்கள் என்று கேட்டால் பதில் எப்போதும் இல்லை என்பதுதான். எப்போதும் தாமும் குழம்பி ஏனையவர்களையும் குழப்புவதில் விண்ணர்கள் இந்த so called "ஈழம்" ஆதரவாளர்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் என்று நினைக்கின்றேன் சரியாக காலப்பகு தி நினைவில்லை பேஸ்புக்கில் ஒரு ஸ்டேடஸ் பதிந்திருந்தேன். "ஈழம் என்று அழைப்பதை விடுத்து இலங்கை என தமிழன் எப்போது அழைக்கத் தொடங்குகின்றானோ அப்போதிலிருந்தே சிங்களவர்களின் ஆதரவு தமிழர்களுக்கு கிடைக்கும் அதுவரையும் சந்தேகக் கண்ணுடந்தான் தமிழர்களின் எந்த விடயங்களையும் பார்ப்பார்கள்" இதுவே அந்த ஸ்டேட்டஸ்.

இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த உள்நாட்டு வெளிநாட்டு ஈழம் ஆதரவாளர்கள் "ஈழம் என்பது இலங்கைக்கு பழங்காலத்திலிருந்த பெயர். ஈழம் = இலங்கை, சிங்களவர்கள் அதனை புரிந்தாலே எல்லாம் சரி"
என என்னுடன் சண்டை பிடித்தார்கள்.

அப்போது இலங்கையிம் ஈழமும் ஒன்று என சண்டைபிடித்தவர்கள் தற்போது என்னடாவென்றால் ஈழம் இலங்கை இரண்டும் ஒன்றுக்கொன்று வேறுபட்டது என்பதாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இலங்கையில் இருந்து செயற்படும் பேஸ்புக் போராளிகள் சிலரும், ஈழம், இலங்கை இரண்டும் ஒன்றுக்கொன்று வேறுபட்டது என அடித்து சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

உண்மையிலேயே இலங்கை, ஈழம் என்பன வேறுவேறானதா என நாம் புராதன வரலாற்றுக் குறிப்புக்களைக் கொண்டு பார்ப்போமானால் இலங்கை என அழைக்கப்படும் தீவே முற்காலத்தில் ஈழம் என அழைக்கப்பட்டதற்கான சான்றுகள் பரந்து காணப்படுகின்றன.

விடுதலைப் புலிகள் கூட தமக்கு ஈழம் வேண்டும் என போராடவில்லை. தமிழீழம் (தமிழர் வாழும் வடக்கு-கிழக்கு பிரதேசம்) வேண்டுமென்ற கோரிக்கையுடனேயே போராடினார்கள். 

(ஈழம் தொடர்பில் மேலும் அறிய - http://bit.ly/2jJgU4Q) 

ஆகவே தமிழர்கள் ஈழம் இலங்கை தொடர்பில் குழம்பாமல் இருப்பதே நல்லது. அதற்கு திட்டமிட்டு குழப்புவர்களை இனம் காணவேண்டியது முக்கியமானது.