A Promised Land

22 ஜனவரி 2017

வற்றாப்பளை அம்மன் கோவில்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற கோவில்தான் வற்றாப்பளை அம்மன் கோவில். நந்திக்கடலின் ஓரத்தில் அமைந்துள்ள இக்கோவில் இலங்கைத் தமிழ் இந்துக்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்றது.

இக்கோவிலின் திருவிழாவில் இலட்சக்கணக்கனான பக்தர்கள் ஆண்டுதோறும் பங்குபற்றுவது வழக்கம். இங்கு ஏற்றப்படும் தீபமானது நந்திக்கடலின் தண்ணீரிலே எரிகின்றது என்று கூறப்படுக்கின்றது.

தற்போது இக்கோயிலின் கோபுரம் தவிர்ந்த அனைத்தும் இடிக்கப்பட்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இப்புகழ் பெற்ற கோவிலுக்கு விஜயம் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது.