A Promised Land

23 அக்டோபர் 2014

கத்தி... தமிழர்களுக்கு நிலத்தடி நீரின் அருமை இனியாவது புரியுமா?

கத்தி படம் பார்த்துவிட்டேன். தனிப்பட்ட ரீதியில் எனக்கு இந்தப் படம் பிடித்திருக்கின்றது காரணம் படத்தினுடைய பிரதான கரு. (இந்த கதையினை கோபி என்பவரிடமிருந்துமுருகதாஸ் 4 வருடங்களுக்கு முன்னர் களவாடியுள்ளாராம். அதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்குத்தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகளும் நடைபெற்றதாம். 

அடுத்த உலகப்போர் என்ற ஒன்று வருமானால் அது நீருக்காகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் பொதுவாக கூறுகின்றார்கள். அது உண்மையும்கூட. நிலத்தடி நீர் என்ற மிக்பெரிய கருவினை மைய்யமாக வைத்து இந்தக் கதை முருகதாஸினால்(??????) எழுதப்பட்டிருக்கின்றது. இலங்கையில் இருக்கின்றவர்களுக்கு நிலத்தடி நீர் தொடர்பான அறிவு எந்தளவுதூரம் இருக்கு என்று எனக்குத் தெரியாது ஆனால் காலம்கடந்து வந்திருந்தாலும் இந்தப் படம் நிலத்தடி நீர் தொடடர்பாக  தமிழ்நாட்டின் சமூகமட்டத்தில் ஒரு பரவலான கலந்துரையாடலை ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம் தமிழ்நாட்டுக்கு கீழேயுள்ள எஞ்சியுள்ள நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட வேண்டும்

விஜய் இந்த Powerful கதையினை தனது அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தியிருக்கின்றார் படத்தில் வன்முறையினையையும் ஹீரோயிஸத்தையும்  தவிர்த்திருக்கலாம்

எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ஒரு Corporate  கம்பனி இன்னுமொரு Corporate கம்பனிக்கு எதிராக எப்போதும் வேலைசெய்யாது ஆனால் லைக்கா என்ற மிகப்பெரிய Corporate கம்பனி இந்த குளிர்பான மற்றும் மெதேன் வாயு உற்பத்தியில் ஈடுபடும் உலகலாவிய ரீதியில்மிகப் பலம்பொருந்திய Corporate நிறுவனங்களுக்கு எதிரான கதையினைகூறும் படத்தை எடுத்திருப்பதுதான் ஆச்சரியமளிக்கின்றது.

விஜய் என்ற நடிகனை தவிர்த்து எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உலகளவில் இருக்கப்போகும் இந்த நிலத்தடிநீர்ப் பிரச்சனையினை காலதாமதமாக கையிலெடுத்திருந்தாலும் கோபி என்றவரிடம் இந்த கதையினை களவாடி இந்த கதையினை இயக்குனர் முருகதாசு  இயக்கியிருக்கின்றார்.

இந்த திரைப்படம் சமூகமட்டத்தில் அதுவும் குறிப்பாக இந்தியாவின் கிராமங்கள் நகரங்களில் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை தோற்றுவிக்கவேண்டும் அதனூடாக மிகவும் பெறுமதிவாய்ந்த அத்தியாவசியமான நீர் அதுவும் நிலத்தடி நீர் தொடர்பான விளிப்புணர்வு ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும் என்பது நிலத்தடி நீர் பாதுகாக்கப்படவேண்டும் என்று சிந்திக்கின்ற என்னுடைய அவா.

*இந்தக் கதையினை சொந்தமாக எழுதிய கோபி என்ற அந்த சமூக சிந்தனைவாதிக்கு  ஒரு சல்யூட் (இது தொடர்பான கோபியினுடைய நண்பரின் பேஸ்புக் பதிவு - http://goo.gl/F0L5sq)

*கதையினை களவாடிய முருகதாஸிற்கு ஒரு *^*&#@#%$@