A Promised Land

06 ஜனவரி 2009

அழகுசாதனப் பொருட்களும் பாவப்பட்ட மிருகங்களும்

அழகுசாதனப்பொருட்கள் என்பது மனிதர்களுக்கு இன்றைய காலக்பகுதியில் முக்கியமான ஒன்றாகிவிட்டது. மனிதர்களுக்கு என்று கூறுவதைவிட பெண்களுக்கு என்று கூறுவது

சாலச்சிறந்தது. இன்று மேக்கப் இல்லாமல் பெண்கள் வீதியில் நடமாடுவது என்பது சாத்தியம் இல்லாததொன்று எனக்கூறலாம். அதுவும் மனிதர்களுடைய வாழிக்கையுடன் ஒன்றித்துவிட்டதாக மாறியுள்ளது. இந்த அழகு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் கூடுதலாக இந்தியாவிலேயே காணப்படுகின்றது. இங்கே அதிகமான நுகர்வு காணப்படுவதே இதற்கான காரணமாகும். ஆனால் இந்த அழகுசாதனப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் முறையைக்கேட்டால் மிகவும் கொடுமையாக இருக்கிறது. பரிசோதனை எனும் பெயரில் பல உயிர்களைக் கொன்று உருவாக்கப்படும் அழகுசாதனங்களை நாம் பயன்படுத்துகின்றோம் எனும்போது வேதனையாகத்தான் இருக்கிறது.

புதிதாக ஒரு அழகுசாதனப்பொருளை உற்பத்தி செய்து முதலில் இதை குரங்குகளுக்கு

பரிசோதித்து பார்ப்பதேயாகும். உதாரணத்திற்கு கண் மை அல்லது Eye liner இல் கலக்கப்படும் இரசாயனப் பதார்த்தத்தை முதலில் குரங்குளிலேயே பரிசோதிக்கப்படுகிறது. இவற்றின் கண்களுக்குள் ஊசிளின் மூலமே செலுத்தப்படுகின்றன. குரங்ககள் கண்களை கசக்கிவிடக்கூடாது என்பதற்காக மருந்தை செலுத்தும் முன்பே அவற்றின் கை, கால்கள் கட்டப்படுகின்றன. ஆகவே மருந்தின் வீரியத்தை தாங்கமுடியாமல் அவை வீரிட்டு அழுகின்றன. 12 அல்லது 24 மணிநேரத்தின் பின்னர் மீண்டும் அவற்றை பரிசோதிக்கப்படுகின்றது. அப்போது கண்கள் சீழ் பிடித்து இருக்கும். அல்லது கண்கள் குருடாகியிருக்கும். அந்தளவிற்கு வீரியமான மருந்துகளாக அவை காணப்படுகின்றன.

இந்த முறையானது 1927ம் ஆண்டே முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இதை LD 50 Test என்றே அழைக்கப்பட்டது. அதாவது இரசாயனப் பொருட்களின் விஷத்தன்மையை பரிசோதிப்பது என்பதேயாகும். இதன்போது 50 வீதமானவை இறந்துவிட்டன. பின்னர் இரண்டாம் கட்டமாக 1938ம் ஆண்டளவிலே ஆரம்பிக்கப்பட்டது.

இதுபற்றி The American Association for Laboratory Animal Science பின்வருமாறு கூறுகின்றது.
Every year millions of Animals are maimed, Blinded, Scalded, Force-fed Chemical, Genetically mutated and Killed in tha name of Science by private institutions, household products, Cosmetic Companies, government agencies, educational institutions, and Scientific Centers.


மிருகங்களுக்கு பரிசோதிக்கப்பட்டு விற்பனையாகும் பொருட்களுக்கு எதிர்ப்புக்கள் கிளம்பியதால் தற்போது “மிருகங்களில் பரிசோதிக்கப்படாதது” என லேபிள் பொறித்து பல நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்திகளை விற்பனை செய்கின்றன.
மற்றும் ஒரு புறத்தில் மருந்து வகைகளின் தயாரிப்புக்கும் இவ்வாறே பல மிருகங்களை மனிதன் பயன்படுத்தி வருகின்றான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Every year Approximately 17 - 22 Million Animals are used in Research

1 கருத்து:

kuma36 சொன்னது…

//யிர்களைக் கொன்று உருவாக்கப்படும் அழகுசாதனங்களை நாம் பயன்படுத்துகின்றோம் எனும்போது வேதனையாகத்தான் இருக்கிறது. //