
2009 ம் வருடம் ஆரம்பமாகி இன்று இரண்டாவது நாளாகி விட்டது.
பத்திரிகைகளில் வான்தாக்குதல்கள் பற்றி செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றது. வெற்றியின் பேப்பர் தம்பியும் சலிக்காமல் அவற்றை வாசித்துகொண்டு இருக்கிறார். அதேபோல் இலங்கையின் யுத்த களமுனைகளிலிருந்து வெற்றிச் செய்திகள், சூழுரைப்புக்கள் பலவும் இலங்கை மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மறுமுனையில் அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஜனாதிபதியால் பல அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது (இதுதான் இன்று காலை கண்விழித்தவுடன் நான் வானொலிமூலம் தெரிந்து கொண்ட செய்தி) நீண்ட நாட்களாக பலராலும் எதிர்பார்த்த ஒன்றுதான். மேலும் ஊடகத்துறை அமைச்சை ஜனாதிபதி தானே பொறுப்பேற்றுக்கொண்ட செய்தியும் கிடைத்தது. இது பலாராலும் எதிர்பார்க்காத ஒரு முக்கியமான விடயம் தான்.
இலங்கையை ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் காணப்படுகின்ற ஒரு நாடாக மனித உரிமை அமைப்புகளாலும் பல ஊடக அமைப்புக்களாலும் பட்டியலிட்டுவரும் நிலையில் ஜனாதிபதி ஊடக அமைச்சை பொறுப்பேற்றிருப்பதானது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த மாற்றமானது பலர் மத்தியில் பல எதிர்பார்புக்களை தோற்றுவித்துள்ளது.இனிவரும் காலங்களில் ஜனாதிபதி ஊடகத்துறைக்கு என்ன செய்யப் போகிறார் போன்றவற்றையும் இதனால் ஏற்படப்போகும் அனுகூலங்களை அல்லது பிரதிகூலங்களை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக