A Promised Land

Train லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Train லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 அக்டோபர் 2014

யாழ்தேவி... ஒரு உணர்வுபூர்வமான உறவுப்பாலம்



ஒரு நாட்டின் போக்குவரத்து என்பது அந்த நாட்டின் அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானதொன்றாகும். எந்தவொரு நாட்டில் போக்குவரத்து மேம்பட்டு காணப்படுகின்றது அந்த நாடு அபிவிருத்தி அடைந்த நாடாகவோ அல்லது அபிவிருத்தியினை வேகமாக எட்டுவதற்கு பயணித்துக் கொண்டிருக்கும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகவே கருதமுடியும். 

இலங்கையில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான உறவுப்பாலமாக இருப்பது என்னவென்று கேட்டால் ஒன்று ஏ9 பிரதான வீதி மற்றையது யாழ்தேவி புகையிரதம். இந்த இரண்டு போக்குவரத்து சேவையிலும் புகையிர சேவையானது மிகவும் புகழ்வாய்ந்தது. வடற்கிற்கும் தெற்குக்கும் இடையிலான உண்மையான உறவுப்பாலம் எதுவென கேட்டால் யாழ்தேவி புகையிரதத்தினைத்தான பலரும் கூறுவார்கள். உண்மையும் அதுதான். 

1956ம் ஆண்டு வடக்கிற்கான பயணத்தினை ஆரம்பித்த யாழ்தேவி 1990களில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் காரணமாக வவுனியாவரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் 2009 யுத்தம் முடிவுற்றதன் பின்னர் சிறிது சிறிதாக பளை வரை பயணித்த புகையிரத சேவை இன்று முதல் 13.10.2014 யாழ்ப்பாணம்வரை தனது சேவையினை 14 ஆண்டுகளிற்கு பின்னர் ஆரம்பிக்கின்றது. இந்திய அரசின் நிதியுதவியிலேயே இந்த புகையிரதசேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தியோக பூர்வமாக யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத சேவையினை இன்று ஆரம்பித்து வைக்க இருக்கின்றார். 

90களின் பிற்பகுதியில் பிறந்த யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த பலரும் இன்றைக்கு பிற்பாடு புகையிரதத்தினை நேரில் பார்க்கும் வாய்ப்பினைப் பெறப்போகின்றார்கள். அது ஒரு உணர்வு பூர்வமான தருணமாக இருக்கப் போகின்றது. அத்தோடு வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான பிரயாணங்களை இது மேலும் இலகுபடுத்தப் போகின்றது. 

யாழ்ப்பாணத்திற்கு புகையிரதசேவை வருவதானது யாழ்ப்பாணத்திற்கு சாதகமான பல விடயங்களையும் பாதகமான பல விடயங்களையும் கொண்டுவரப் போகின்றது. இவற்றையெல்லாம் தாண்டி 2 தசாப்தங்களுக்கு மேலானா வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலாக ஒரு இடைவெளியினை இது இல்லாமல் செய்யப்போகின்றது என்பது முற்றிலும் உண்மை.