A Promised Land

05 டிசம்பர் 2008

மும்பையில் நடந்த பயங்கர தாக்குதலும் சூடுதணிந்த இலங்கை விவகாரமும்

அண்மைக்காலமாக இலங்கைத்தமிழருக்க ஆதரவாக தமிழக மக்களிடையே பலமுனைகளிலிருந்தும் ஆதரவுக்குரல்கள் என்றுமில்லாதவாறு ஒலித்தன. முதலில் இதை கண்டும் காணாதுபோலிருந்த தமிழக திமுக அரசு தமிழக மக்களின் ஆதரவுகுரல்கள் கண்டும்காணாதிருக்கும் தனது ஆடசிக்கு பாதகமாகிவிடுமோ என்ற அச்சத்தில் சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியது. அனைத்துகட்சி கூட்டம் பிரதமருக்கு தந்தி பதவிவிலகும் எச்சரிக்கை மனிதசங்கிலிப்;போராட்டம் நிதியுதவி நிவாரணப்பொருட்கள்(பழநெடுமாறன் தலமையில முன்னம் சேர்க்கப்பட்ட உணவு மருந்துப் பொருட்கள் இப்போது எங்கிருக்கின்றது என்று தெரியவில்லை?? கருணாநிதி சேகரித்தபொருட்கள் வன்னிக்கும் சென்றுவிட்டது) போன்றவற்றை நாம் இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

தமிழகத்தின் இந்த ஒட்டுமொத்தமான எழுச்சிகண்டு இந்திய மத்தியஅரசும் சற்று ஆடித்தான் போய்விட்டது என்றுகூறினால் அது மிகையாகாது. இதன்காரணமாக இந்திய மத்திய அரசாங்கம் சாட்டுக்கு பல நடவடிக்கைகளை(!!) மேற்கோண்டது.அவை ஆக்கபூர்வமானவைகளாக இல்லாவிட்டாலும் ஏனோதானோ என்று சில நடவடிக்கைகளை? மேற்கொண்டது.

இந்திய அரசியல் வட்டாரத்தில் சற்று சூடுபிடித்த இந்த ஈழத்தமிழர் தொடர்பான பிரச்சினை கடந்த மாதத்தின் இறுதியல் மும்பாயில் நடைபெற்ற கோரத் தாக்குதலைத் தொடர்ந்து கொஞ்சம் அடங்கிப்போனது. 200க்கு மேற்பட்டோரை பலியெடுத்தும் பலநூற்றுகணக்கானோரை காயப்படுத்திய இந்தத் தாக்குதலானது இந்திய மக்களை மட்டுமல்லாது உலகமக்களின் மனங்களையும் தீண்டிவிட்டது என்றுகூறலாம். இதனால் இலங்கைப் பிரச்சனை தொடர்பான விவாதங்கள் இந்தியாவில் சற்று மந்தமடைந்திருக்கிறது. என்றாலும் முதலிலே திட்டமிடப்பட்டிருந்தபடி கருணாநிதியும் தமிழக எம்பிக்களும் மன்மோகனை சந்திக்கும் திட்டம் கைவிடப்படவில்லை. அந்த சந்திப்பும் நடைபெற்று முடிந்திருக்கிறது. முடிவில் மன்மோகன்சிங் அரசும் ஏதோ சாட்டுக்கு (பம்மாத்துக்கு!) பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப முடிவுசெய்திருக்கிறது.

இதற்கிடையில் ஆயுதங்களை கீழேவைத்தால்தான் புலிகளுடன் பேச்சுவார்த்தையென அறிவித்திருக்கும் இலங்கை அரசு இந்தியாவின் கோரிக்கைகளுடன்வரும் பிரணாப்பின் கருத்துக்களை எவ்வளவுதூரம் செவிமடுக்கப்போகிறது என்பது சந்தேகம்தான்.
ஏனைய தூதுவர்களைப்போன்று(வழக்கம்போல) பிரணாப்பும் இலங்கை வந்து அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவிட்டு வெறும் அறிக்கைகளை விடப்போகிறாரோ அல்லது இலங்கைப்பிரச்சனைக்கு ஏதும் காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பாரா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

2 கருத்துகள்:

ஆதிரை சொன்னது…

//முடிவில் மன்மோகன்சிங் அரசும் ஏதோ சாட்டுக்கு (பம்மாத்துக்கு!) பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப முடிவுசெய்திருக்கிறது.

கருணாநிதிதான் சொன்னாரே தவிர புதுடில்லி இப்படிச் சொன்னதா? - இல்லை.

எப்போது வருவார்? - எவருக்கும் தெரியாது.

இதில் மறைந்துள்ள அர்த்தங்கள் புரிய அரசியல் அறிவு தேவையேயில்லை. பாமரருக்கும் தெரியும். அதனால் தான் அவர்கள் தங்கள் காதுகளை அடிக்கடி தடவிக்கொள்கின்றார்கள். யாரும் பூச்சூடக்கூடாதல்லவா?

kuma36 சொன்னது…

http://ckalaikumar.blogspot.com/2008/12/blog-post_12.html