A Promised Land

31 டிசம்பர் 2008

துயரங்களுடன் கடந்து செல்லும் 2008ம் ஆண்டு

கடந்து செல்லும் இந்த 2008ம் ஆண்டானது மிகுந்த சவால்கள் நிறைந்த ஒரு வருடமாகவே முடிவடைகிறது. குறிப்பாக தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசியலுக்கும் ஒரு சவால் நிறைந்த ஆண்டாகவே நிறைவுபெறும் 2008ம் ஆண்டில் இலங்கை அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற நிகழ்வுகளின் தொகுப்பை கீழே காணலாம்.

January

ஜனவரி 1ம் திகதி

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற தியாகராஜா மகேஸ்வரன் பொன்னம்பலவாணேஸ்வரம் ஆலயத்தில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்.

தை 2ம் திகதி
கொழும்பு கொம்பனி வீதி குண்டுவெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன் 20ற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

தை 3ம் திகதி
2002ம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டது.

தை 8ம் திகதி
தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சர் டி.எம். திசாநாயக்க குண்டுத் தாக்குதலின்போது உயிரிழந்தார். ஜனவரி

தை 13ம் திகதி

யசூசி அகாசி இலங்கைக்கு விஜயம் முறிவுற்ற போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து அரசுடன் கலந்துரையாடினார்.

தை 14ம் திகதி
சர்வகட்சி குழுவினால் அரசியல் தீர்வாக 13வது திருத்தச்சட்டம் முன்வைக்கப்பட்டது.

தை 29ம் திகதி
மன்னாரில் பாடசாலை பிள்ளைகளை ஏற்றிச்சென்ற பஸ்பண்டியின் மீது நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 11 சிறுவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

தை 30ம் திகதி 2008
25 ஆண்டுகால இலங்கையின் இன நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தமிழர்களின் இறைமையை ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் அங்கீகரிக்க வேண்டும் என தமிழீழ விடுதலை புலிகள் விடுத்த வேண்டுகோளில் இந்நாட்டு சிறுபான்மை மக்கள் மீது இலங்கை அரசாங்கம் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது என குற்றம் சாட்டியது.

February
மாசி 2ம் திகதி
தம்புள்ள பஸ்தரிப்பு நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

மாசி 3ம் திகதி
கொழும்பு கோட்டை ரயில் நிலையக்குண்டு வெடிப்பில் குறைந்தபட்சம் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மாசி 4ம் திகதி
வெலியோய கொப்பேகடுவ சந்தியில் மக்கள் பிரயாணம் செய்துகொண்டிருந்த பஸ் ஒண்றின் மீது கிளைமோர்; தாக்குதலில்; 13பேர் கொல்லப்பட்டதுடன் 17பேர் காயமடைந்தனர்.

மாசி 26ம் திகதி
நாட்டின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மக்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துவருவதாக ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் மற்றும் இப்பிரதேசங்களில் பணிபுரியும் அரசசார்பற்ற அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன..

March
பங்குனி 6ம் திகதி

தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் கே. சிவநேசன் கிளிநொச்சி மாவட்டத்தின் மாங்குளம் மல்லாவி வீதி கனகராயன் குளம் எனும் இடத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
பங்குனி 11ம் திகதி
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பு மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் 9 உள்ளுராட்சி மன்றங்களில் 8 மன்றங்களில் வெற்றியீட்டியது.

April
சித்திரை 6ம் திகதி

நெடுஞ்சாலைகள் அமைச்சரும் அரசாங்கத்தின் கொரடாவுமான ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே உட்பட 13பேர் கம்பஹா மாவட்டத்தில் வெலிவேரிய பிரதேசத்தில் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

சித்திரை 14ம் திகதி
மன்னார் மாவட்டத்தில் யுத்த நிலை தீவிரமடைந்துவருவதினால் விடுதலைபுலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு மேற்கு பிராந்தியிங்களில் இருந்து 600 மாணவர்கள் உட்பட 25000ற்கும் அதிகமானோர் குடிபெயர்ந்து வரும் ஆபத்தான நிலையை எதிர்நோக்கியிருந்தனர்.

May
வைகாசி 9ம் திகதி
அம்பாறை நகரில் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு பெண்கள் உட்பட 11பேர் கொல்லப்பட்டனர். மேலும் 29பேர் காயமடைந்தனர்.

வைகாசி 11ம் திகதி
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டனி கிழக்கில் இடம்பெற்ற முதலாவது மாகாணசபை தேர்தலில் 37ஆசனங்களில் 20 ஆசனங்களை கைப்பற்றியது.

வைகாசி 13ம் திகதி

EPDP அமைப்பின் ஆலோசகரான மகேஸ்வரி வேலாயுதம் யாழ். கரவெட்டியில் அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

வைகாசி 16ம் திகதி

கிழக்கு மாகாணசபையின் முதலாவது முதலமச்சராக எஸ். சந்திரகாந்தன் நியமனம்.

வைகாசி 26ம் திகதி
தெஹிவயில் ரயில் பெட்டியில் குண்டொன்று வெடித்ததினால் நான்கு பெண்கள் உட்பட 8 பிரயாணிகள் கொல்லப்பட்டனர்.

June
ஆனி 4ம் திகதி தெஹிவளையில் கரையோர ரயில் பாதையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் காயமடைந்தனர்.

ஆனி 6ம் திகதி
பிலியந்தலை பஸ்ஸில் சக்திவாய்ந்த குண்டொன்று வெடித்ததினால் 21பேர் கொல்லப்பட்டதுடன், 40 பேர் காயமடைந்தனர்.

யுத்த செய்திகளை திரட்டி அவற்றை வெளியிடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு ஊடகங்களுக்கு ஒரு வழிகாட்டலை அறிவித்துள்ளது.

ஆனி 18ம் திகதி
பேச்சுவார்த்தைக்கு முன் ஆயுதங்களை கீழே வைக்கவேண்டும் என அரசாங்கத்தின் வேண்டுகோளை விடுதலைபுலிகள் நிராகரிப்பு

July
ஆடி 18ம் திகதி
ஓமந்தைப் பாதை மக்களுக்காக திறக்கப்பட்டது.

ஆடி 21ம் திகதி
SAARC உச்சிமாநாட்டிற்காக ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24ம் திகதிவரை விடுதலைபுலிகள் ஒருதலைபட்சமான யுத்தநிறுத்தத்தை அறிவித்தது.

SAARC 22ம் திகதி
விடுதலைப் புலிகளின் யுத்த நிறுத்தத்தை அரசு நிராகரித்தது.

August
ஆவணி 03ம் திகதி

2மாதங்களாக நடைபெற்றுவரும் ஆகாயதாக்குதலினால் சுமார் 30000பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

Sebtenber
புரட்டாதி 19ம் திகதி
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மீள் குடியேற்றங்கள் ஏறத்தாழ முடிவடையும் நிலையை அடைந்திருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

புரட்டாதி 21ம் திகதி
ஐந்து வருடத்துக்குள் கொழும்பில் தங்கியுள்ள வடபகுதி மக்களுக்கான பதிவு இடம்பெற்றது.

October
ஜப்பசி 5ம் திகதி
கொழும்பில் வாழும் கிழக்கு மக்களுக்கான பதிவு இடம்பெற்றது.

ஜப்பசி 6ம் திகதி

ஐக்கிய தேசிய கட்சியின் வடமத்திய மாகாணசபை எதிர்கட்சி தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 28பேர் பஸ்தரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள ஐக்கியதேசிய கட்சி காரியாலயத்தில் தற்கொலை குண்டுதாரரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

ஜப்பசி 24ம் திகதி 2008
தற்போது நாட்டின் வடபகுதியில் நடைபெற்றுவரும் யுத்தம் தொடர்பாக காயதடைந்தவர்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை அறிவிப்பதை இடைநிறுத்தி வைத்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.

ஜப்பசி 26ம் திகதி
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து இடம்பெயர்ந்து வந்து புத்தளம் மாவட்டத்தில் குடியிருக்கும் மக்கள் பற்றிய விசேட கணக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்பட்டது.

ஜப்பசி 28ம் திகதி
விடுதலைபுலிகள் விமானங்கள் மன்னாலிலும் கொழும்பிலும் குண்டுகளை வீசியது.

மற்றுமொரு விடுதலைபுலிகளின் இலகு விமானமொன்று மன்னாரின் இராணுவ தலைமையகம் அமைந்துள்ள தல்லாடியில் மூன்று குண்டுகளை வீசியது.

ஜப்பசி 30ம் திகதி
பூநகரிக்கு முன்பு மேற்கு கரையோரத்தில் விடுதலைபுலிகளது பலம்வாய்ந்த தளமாக இருந்த நாச்சிகுடாவை இராணுவத்தினர் முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.

November
கார்த்திகை 9ம் திகதி
இலங்கை அரசாங்கத்துடன் யுத்த நிறுத்தம் செய்துகொள்வதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக விடுதலைபுலிகள் அறிவித்தனர்.

கார்த்திகை 15ம் திகதி
வடபகுதியில் உள்ள விடுதலைபுலிகள் கேந்திரநிலையமான பூநகரியை இராணுவம் கைப்பற்றியது.

கார்த்திகை 25ம் திகதி
மாங்குளம் மாவட்டத்தின் மாங்குளம் முல்லைத்தீவு ஏ 34 வீதியில் மாங்குளத்திற்கு வடகிழக்கில் 4 கிலோமீற்றர் தொலைவில் உள்ள விடுதலைபுலிகளின் பிரதான தளமான ஒலுமடுவை இராணுவம் கைப்பற்றியது.

December
மார்கழி.10
ஜனாபதி மஹிந்த ரணில் சந்திப்பு

மார்கழி.26
ஆழிப்பேரலையின் நான்காம் ஆண்டு நிறைவு தினம்.

மார்கழி 28
வத்தளையில் இராணுவ முகாம் மீது தற்கொலைத் தாக்குதல்

2 கருத்துகள்:

kuma36 சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ARV Loshan சொன்னது…

நல்ல தகவல் தொகுப்பு.. பிறந்துள்ள புத்தாண்டில் மேலும் மேலும் எழுத வாழ்த்துக்கள்..