A Promised Land

27 ஆகஸ்ட் 2008

மூளை திறம்பட செயல்பட தூக்கம்



மூளை திறம்பட செயல்பட தூக்கம் *

மனித வாழ்க்கைக்கு தூக்கம் எவ்வளவு அவசியம் என்பதை அனைவருமே உணர்வர்.
தூக்கத்தின் முக்கியத்துவம் குறித்து அறியும் அதேவேளையில், அதன் பின்னணியில்
உள்ள அதிசயங்களை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.


ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் இருந்தால் மட்டுமே அடுத்த நாள் நமது மூளையானது
வளைந்து கொடுத்து வேலை செய்யும் திறனைப் பெறும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.


பாலூட்டிகளுக்கும், பறவைகளுக்கும் தூக்கம் என்ற ஓய்வு முக்கியம் என்பதை
தெரிவிக்கும் ஆய்வு, எந்தவொரு உயிரினமும் ஓய்வெடுக்கவில்லை என்ற தகவல் இல்லை என
கூறுகிறது.

டொல்பின் மீன்கள் கூட ஒரு கண்ணை மூடியவாறு, மூளையின் பாதியளவு ஓய்வுடன்
தூங்குவதாகத் தெரிய வந்துள்ளது.

டொல்பின்களைப் பொருத்தவரை எந்தநேரமும் செயல்பட்டுக் கொண்டே இருக்கும் என்ற
போதிலும் தேவையான செயல்பாடு தவிர, சிறிது நேரம் ஓய்வை அனுபவிக்கும் என்றும்
அந்த ஆய்வு கூறுகிறது.

கருத்துகள் இல்லை: