A Promised Land

03 டிசம்பர் 2010

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - 03


இரண்டாவது பதிவர் சந்திப்பு நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகப் போகின்றது. இந்த கால எல்லைக்குள் நம்மிடையே குட்டி சந்திப்புகள் அவ்வப்போது நடந்திருந்தாலும் அனைத்துப் பதிவர்களும் சந்திக்கும் பாரிய சந்திப்புகள் ஒன்றும் நடைபெறாதது கவலைக்குரியதே. இக்குறையை ஓரளவுக்காவது நிவர்த்தி செய்யும் பொருட்டு பதிவர் சந்திப்பொன்றை நடாத்த முன்வந்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

பதிவர்கள், புதிய பதிவர்கள், பதிவுலகத்தை உற்றுநோக்குபவர்கள்(வாசகர்கள்) ஆகிய அனைவரும் கலந்து கொள்ளலாம். அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

இலங்கைத் தமிழ்ப்பதிவர் சந்திப்பு

இடம்: கைலாசபதி அரங்கு,
            தேசிய கலை இலக்கியப்பேரவை(ரொக்சி திரையரங்குக்கு எதிரில்),
            காலிவீதி, வெள்ளவத்தை, கொழும்பு –06
காலம்: 19ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, காலை 9.31 மணி

நிகழ்ச்சி நிரல்

  • அறிமுகவுரை
  • பதிவர்கள் அறிமுகம்
  • கலந்துரையாடல் 1 - கூகுல் குழுமத்தை வினைத்திறனுடன் பயன்படுத்தல் மற்றும் ஏனைய தொழிநுட்பப் பிரச்சினைகள் பற்றி ஆராய்தல்.
  • கலந்துரையாடல் 2 - தமிழ் தட்டச்சு கருவிகளும், அவற்றைப் பற்றிய ஆய்வுகளும் கருத்துக்களும்.
  • இடைவேளையில் இன்னிசை.
  • கலந்துரையாடல் 3 - பதிவுலகைத் தாண்டி பதிவர்கள் வழங்ககூடிய பங்களிப்புகளை ஆராய்தல்.
  • கலந்துரையாடல் 4 - பதிவர்களிடையே பதிவுலகம் சார் போட்டித் தன்மையை ஏற்படுத்தலும், அண்மைக்கால பதிவுலகில் உள்ள தொய்வுநிலை பற்றிய கருத்துப் பரிமாற்றமும்.
  • பதிவர்கள் தங்களுக்கிடையேயான கருத்து பரிமாற்றம்.

  • நன்றியுரை.

இதுவரை குழுமத்திலேயோ அல்லது பேஸ்புக்கிலேயோ இயலுமானவரை விரைவாக உறுதிப்படுத்தவும். இம்முறை ஏற்பாட்டுக்குழுவினர் 
நிரூஜாவதீஸ்அனுதினன்வரோஅஷ்வின்பவன்.

பி.கு – வெளியிடங்களிலிருந்து வருவோர் தங்குமிட வசதிகள் தேவைப்படின் பதிவர் அஷ்வினை 13ம் திகதிக்கு முதல் தொடர்புகொண்டால் உரிய வசதிகளைச் செய்து தரமுடியும்.


இது பதிவர்களால் பதிவர்களுக்கு நடாத்தப்படும் சந்திப்பு எனவே சந்திப்புத் தொடர்பான தட்டிகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது, அவற்றை உங்கள் வலைப்பூக்களில் இட்டு சந்திப்புக்கு ஆதரவு வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
தட்டிகளைப்பெற இங்கே சொடுக்குங்கள்

07 செப்டம்பர் 2010

டெங்கு.... Update..

டெங்கு....

இலங்கையில் பல மாதங்களாக அச்சுறுத்தி வரும் டெங்கு காரணமாக இதுவரையிலும் 208 பேர் பலியாகியுள்ளதாகவும் சுமார் 28 500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிததுள்ளது. இலங்கையின் தலைநகரிலேயே டெங்கு காரணமாக அதிகளவானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கம்பஹா யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்ட மக்களும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நோய் மேலும் பரவாமல் இருக்க உங்கள் சூழலை சுத்தமாக வைத்திருந்து நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்துங்கள்... டெங்கு வந்தால் எல்லோருக்கும் சங்குதான்

24 ஆகஸ்ட் 2010

இலங்கையில் 13வது மற்றும் 17வது திருத்த சட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் காணப்படுகின்ற சிக்கல்கள் என்ன?

எங்களுடைய நிறுவனம் தயாரித்து ஒளிபரப்பி வரும் "முக்காலம்" நிகழ்ச்சியில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் பிரஜைகளின் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஸ்ரீ.றங்காஆகியோர் கலந்து கொண்டு இது பற்றி கலந்துரையாடினார்கள். அது தொடர்பான காணொளியை இங்கே இணைத்திருக்கிறேன்

Mukkalam 09 - Effective and Efficient Implementation of State Decisions from Young Asia Television

03 ஜூலை 2010

உங்களுக்கு இலங்கை தமிழர் நாங்கள்தானா கிடைத்தோம் ?

"இலங்கைத்தமிழர்" தமிழ் உணர்வு" இலங்கையில் நடைபெறும் விழாக்களில் கலந்துகொள்ளும் சினிமா துறையினருக்கு தடை" "இலங்கைக்கு சென்றால் தடை" இலங்கை "இலங்கை" இவ்வாறான சொற்களை கேட்டு இணையங்களில் பார்த்து எனக்கு அலுத்துவிட்டதுடன் சம்பந்தப்பட்வர்களின்மீது கோபமும்தான் வருகின்றது. இன்று தமிழ் நாட்டில் அரசியல் செய்யவேண்டும் என்றால் ஏதோ ஒரு வகையில் இலங்கை பிரச்சனையை கையில் எடுக்க வேண்டிய நிலையில் தமிழ் நாட்டின் அரசியல் கலாச்சாரம் மாறிவிட்டதோ என எண்ணத்தோன்றும் அளவிற்கு நிலமை சென்றுவிட்டது.

இந்த எதிர்ப்பு அரசியல் கலாச்சராம் சில ஆண்டுகளுக்கு முன்னமே மிகவும் மும்முரமாக வெளித்தெரிய ஆரம்பித்தது என்றாலும் ஆரம்பம்தொட்டு சிறு சிறு எதிர்ப்புக்கள் இருந்தன ஆனாலும் இவ்வளவு தூரத்திற்கு அவை இருக்கவில்லை. எதிர்ப்புக்களால் மேலும் மேலும் துன்பப்படபோவது இங்கிருக்கும் தமிழ் மக்கள் என்பதை எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டும். வடபகுதியில் எரிக்கும் வெயிலின் மத்தியிலும் கொட்டும் மழையின் வெள்ளத்திலும் பொருளாதார ரீதியாகவும் எல்லா வகையாலும் நாளாந்தம் தங்கள் வாழ்க்கையினை நடத்துவதற்கு அம்மக்கள் படும்பாடு குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து அறிக்கைகளை வெளியிடும் தமிழ் உணர்வாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் எங்கு தெரியப்போகின்றது. இவர்களுடைய ஒரே நோக்கம் இலங்கைத்தமிழரை பயன்படுத்தி சந்தர்ப்ப அரசியல் செய்வதுதான். இந்த எதிர்ப்பரசியலுக்குள் தற்போது தமிழ் சினமாவும் சிக்கியிருப்பது பெரும் வேதனையான விடயம் என்றாலும் தமிழ் சினிமாவில் அரசியல் கலந்திருப்பது சாராதரணமான ஒன்றுதானே.

இவற்றைபற்றி பந்தி பந்தியாக எழுதுவதற்கு எனக்கு உடன்பாடு இல்லை. எனக்குள்ளும் இவர்களின் மேல் இந்த சமூகத்தின்மேல் பல உலக நியதிகளின்மேல் நியாயமான கோபம் இருக்கிறது ஆனாலும் நியாயமான கோபங்களுடன் வாழும் சாமானியன் என்று என்னால் கூறமுடியாமல் இருக்கிறது ஏனென்றால் தொழிலால் நான் ஒரு ஊடகவியலாளன். தமிழ் உணர்வாளர்களின் எதிர்புக்களை இலங்கையில் இருக்கும் பெரும்பாலான தமிழர்கள் விரும்பவில்லை என்பதையும் உங்கள் எதிர்ப்புக்களால் தொடர்ந்தும் பாதிக்கப்படபோவது இலங்கையில் இருக்கும் தமிழர்களாகிய நாங்களே என்பதை எதிர்பாளர்களும் சம்பந்தப்பட்வர்களும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே எனது கோரிக்கை.

05 ஜூன் 2010

பிறந்தநாள் வாழ்த்து -வயசை மட்டும் கேட்காதீங்கப்பா?

ஊடக உலகிலும் பதிவுலகிலும் நன்கு அறியப்பட்ட எல்லோருடனும் இயல்பாகவும் நட்பாகவும் பழகும் அறிவிப்பாளர் பதிவர் நண்பர் லோஷன் அண்ணா அவர்களுக்கு பிறந்தநாள் வாழத்துக்கள்...



எலே இதுக்குப்பிறகும் யாரும் வயசை கேட்பீங்களா?

31 மே 2010

அங்காடித்தெருவும் பதிவுலக விருதுகளும் - சே! வடைபோச்சே


வெளிவந்து பலநாட்களாகியும் எனக்கு பார்ப்பதற்கு நேற்றுவரையும் சந்தர்ப்பம் இல்லாதுபோன திரைப்படம்தான் அங்காடித்தெரு. மிக இயல்பான பல விடயங்களை ஆழமாக கூறும் ஒரு திரைப்படம்தான் இது.பார்த்தவுடன் பிடித்துப்போய்விட்ட நல்ல ஒரு சினிமாவை எங்களுடைய கண்முன்நிறுத்திய பட இயக்குனர் வசந்தபாலனுக்கு பாராட்டுகள்.இப்படத்தில் நடித்த நடிகர்களுடைய இயல்பான நடிப்பு, இசை போன்றவற்றை இரசிக்கலாம். படம்வெளிவந்து இவ்வளவு நாட்களுக்கு பின் அதைப்பற்றி விமர்சனம் எழுதுவது எனக்கு சரியாக படவில்லை. ஆனாலும் எனக்கு வடைபோச்சே...ஏனென்று கேட்கிறீர்களா?
பதிவர் சதீஷ் மற்றும் பலரும் தற்போது இணையத்தில் ஆரம்பித்த முயற்சிதான் திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் - 2010. மிகவும் பாரிய விளம்பரங்களுடன் பதிவர்களால் நடத்தப்பட்டுவரும் இவ்விருது வழங்கும் முயற்சிபாராட்டத்தக்க விடயம்தான். அதில் சிறந்த திரைப்படத்திற்கு வாக்களித்தவிட்டுதான் அங்காடித்தெருவை பார்த்தேன். மனது கனத்துவிட்டது. அட இந்தப்படத்திற்கு வாக்கிளிக்க முடியாமல் போய்விட்டதென்று.ம்...பார்ப்போம் இன்னும் 3வாரங்கள் இருப்பாதாக கூறுகின்றார்கள். நண்பர்கள், ஓட்டுப்போடுபவர்கள் இந்தப்படத்திற்கு எப்படியும் அமோக ஆதரவினை வழங்குவார்கள் என நான் நம்புகின்றேன். உங்களுடைய பொன்னான வாக்குகளையும் நீங்களும் அளிக்கலாம்...நீங்களும் வாக்களிக்க இங்கே கிளிக்குங்கள்