A Promised Land

21 செப்டம்பர் 2008

2009ல் உலகம் அழிவை சந்திக்க போகிறதா????


2009 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் உலகம் மிகப் பெரிய அழிவுகளை சந்திக்க போவதாக பரவலாக தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றது. இவற்றிற்கு காரணம் போரிஸ் கிப்ரியானோவிச் என்ற 12 வயது மாத்திரம் நிரம்பிய ரஸ்யாவை சேர்ந்த சிறுவன் கூறும் தகவல்கள் தான்.
இந்தச் சிறுவனை பற்றிய தகவல்களை கேட்கவே புல்லரிக்கின்றது.1996ல் பிறந்த இவன் எல்லோரையும் போலவே அல்லாமல் பிறந்த பதினைந்தாவது நாளே குப்புறப் படுத்து,நான்கு மாதத்தில் அப்பா என்று அழைக்கும் சிறுவனைக் கண்டால் யாருக்குத் தான் அதிர்ச்சியாய் இருக்காது? ஆறு மாதம் ஆகும்போதே வார்த்தைகள் உச்சரிக்கப் பழகிய் அவன், ஒன்றரை வயதான போது செய்தித் தாள் வாசித்தானாம்! இரண்டு வயதில் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்த்தனர். ஆனால் அவனுடைய
நடவடிக்கைகளும், அறிவும் எல்லோரையும் வியப்பிலாழ்த்தியதுடன் பயத்தையும்
கொடுத்திருக்கிறது.திடீரென எங்கேயோ பார்த்து எதையோ வாசிப்பான், திடீரென அமர்ந்து செவ்வாய் கிரகம் குறித்து விளக்குவான், கேட்டால் நான் அங்கே தான் வாழ்ந்தேன் என்பான் –
என்கிறார் போரீஸின் தாய்.தான் செவ்வாய் கிரகத்தில் வசித்ததாகவும், செவ்வாயில் ஏற்பட்ட ஒரு அணு ஆயுதப் போரினால் செவ்வாய் மாபெரும் அழிவைச் சந்தித்தாதாகவும், இப்போதும் மக்கள் அங்கே தரையின் கீழே வசித்து வருவதாகவும் இவன் சொல்வது ஹாலிவுட் அறிவியல் படங்களை தூக்கிச் சாப்பிடுகிறது.செவ்வாயில் நாங்கள் எல்லாம் கரியமில வாயுவைத் தான் சுவாசிப்போம், இங்கே தான் உயிர் வழியை சுவாசிக்க வேண்டியிருக்கிறது. இது தான் முதுமையைத் தருகிறது என ஒரு பளிச் சுவாரஸ்யத்தையும் சொல்கிறான்.
செவ்வாயிலிருந்து அடிக்கடி பூமிக்கு தான் வந்திருப்பதாகவும், விண்கலத்தை ஓட்டி
வந்ததாகவும், லெமூரியா காலத்தில் தான் வந்த நிகழ்வுகளையும் மணிக்கணக்காய்
பேசுகிறான். யாருமே எனக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை. இதெல்லாம் நானே நேரில்
பார்த்தவை என்கிறான்.
அவனுடைய மூன்றாவது வயதில் கோள்களை பற்றியும், விண்வெளி பற்றியும் கூறிய தகவல்கள் ஏனையோரை வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கும்,அத்தனையும் உண்மையானவையாகவும் இருந்திருக்கின்றன.இதனால் ஆலயத்தில் அவனுக்கு கிறீஸ்தவ முறைப்படி திருமுழுக்கு கொடுத்திருக்கின்றனர் அவனுடைய பெற்றோர்.ஆனால் அதற்கு பின் அவன் வீதிகளில் இறங்கி அழிவு வரப்போகிறது என எச்சரிக்கை செய்ய தொடங்கி இருக்கிறான்.இவனுடைய அதிமேதாவித் தனம் இவனை பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு
அனுப்பியிருக்கிறது. ஆசிரியர்கள் என்ன சொன்னாலும், அது தவறு என மேதாவித்தனமாக
விளக்கிக் கொண்டிருப்பவனை எந்த பள்ளிக்கூடம் தான் ஏற்றுக் கொள்ளும். வேறு
வழியின்றி இப்போது தனியாக படித்து வருகிறானாம்.
உலகில் ஏற்படப் போகும் பேரழிவைக் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அனுப்பப்படும் "இண்டிகோ" சிறுவன் இவன் என நம்புகின்றனர் பலர். இதை வலுப்படுத்துவது போல 2009 லும், 2013 லும் இரண்டு மாபெரும் அழிவுகளை உலகம் சந்திக்கும். தப்பிப் பிழைப்பவர்கள் வெகு சிலரே. துருவ விலகலால் இந்த சிக்கல் உருவாகும் என அவன் அதிர்ச்சிக் கதைகளை சொல்கிறான்.
இவனை பல விஞ்ஞானிகள் கேள்விகளால் குடைந்த போதும் அவனது அலட்சியமான, உறுதியான விளக்கத்தைப் பார்த்து விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர்.(உதாரணத்திற்கு விண்கலத்தின் பாககங்களை குறித்து இவன் கூறும் தகவல்கள் அத்தனையும் உண்மையாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.)ஏனெனில் இவன் பேசுவதெல்லாம் பல ஆண்டுகாலம் விண்வெளி ஆராய்சியில் ஊறித் திளைத்தவர்கள் பேசும் நுட்ப மொழியில்!
நாங்களும் எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என தெரியாது முழிக்க வேண்டி இருக்கிறது.மக்களை பொறுத்தவரை எல்லாவற்றிக்கும் ஒரே ஒரு வழி தான் இருக்கிறது.அதாவது 2009 வரை பொறுத்திருந்து பார்ப்பது தான் அந்த வழி.ஏனென்றால் இதற்கு முன்னும் 2000ம் ஆண்டிலும் உலகம் அழியப் போகிறது என பரவலாக பேசப்பட்டது.
அழிவுகள் என்பது எமக்கு புதுசானவை அல்லவே எனவே பொறுத்திருந்து தான் பார்ப்போமே!!!

என்ன துணிச்சல்

என்ன துணிச்சல் பாருங்கள் இந்தப் பூனைக்கு

20 செப்டம்பர் 2008

வாழ்க்கையின் சக்கரம்

நம்ம வாழ்க்கையின் சக்கரம் இதோ,


எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ தெரியவில்லை.ஆனால் உக்கார்ந்துதான் யோசிப்பாங்கள்.

14 செப்டம்பர் 2008

இலங்கை செஞ்சிலுவை சங்கம் தேசிய மட்டத்தில் பொலன்நறுவையில் நடாத்திய விளையாட்டுப்போட்டியில் யாழ் வீரர்கள் இருவர் தேசிய மட்டச் சாதனைகளை நிலை நாட்டினர்

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த இருவர் தேசிய மட்டச் சாதனைகளை நிகழ்த்தி உள்ளனர்.23 வயதிற்கு உட்பட்ட நீளம் பாய்தலில் அ.அன்ரன் றஜீம்ராஜ் 7.4மீற்றர் தூரம் நீளம் பாயந்து முன்னைய சாதனையான 7.2மீற்றர் என்ற சாதனையை முறியடித்தார். இவர் யாழ்/இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.அத்துடன் இவர் பாடசாலை,பிரதேச மட்ட விளையாட்டு போட்டிகளிலும் பல திறமைகளை வெளிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.இதே வேளை 20 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் செல்வி.ரஜீத்தா 1.56மீற்றர் உயரம் பாயந்து முன்னைய சாதனையான 1.38 மீற்றர் என்ற சாதனையை முறியடித்தார்.இவர் யாழ்/சுண்டிக்குழி பெண்கள் பாடசாலையில் 2009 உயர்தரப் பிரிவில் கல்விக்ற்றுக் கொண்டு இருக்கின்றார்.இவ்விளையாட்டு போட்டிகளில் யாழ் மாவட்டதத்தை சேர்ந்த 50 க்கு மேற்பட்டோரும், இலங்கை முழுவதுமிருந்து சுமார் 1000க்கு மேற்பட்டோரும் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.மேற்படி மாணவர்கள் அடுத்த மாதம் ஹொங்கொங்கில் நடைபெற இருக்கும் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேற்படி மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்ளுகின்றேன்.

13 செப்டம்பர் 2008

வேலை வாய்ப்பை பெற செய்ய வேண்டியவை

1.வேலை கிடைக்கவில்லை என்பதற்காக எல்லா துறைகளிலும் மூக்கை நுழைக்ககதீர்கள்.எந்தத் துறையில் உங்களுக்கு ஆர்வம் அதிகமோ அந்தத் துறைகளில் உள்ள நிறுவனங்களில் மட்டுமே வேலையை தேடுங்கள்.

2.உங்களுக்கு பிடித்த அந்தத் துறையை பற்றி மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்

3.நீங்கள் வேலை தேடுபவராக இருந்தாலும் சரி, சின்ன வேலை பார்த்துக் கொண்டே நல்ல வேலை தேடுபவராக இருந்தாலும் சரி உங்கள் திறமையை வளர்த்துக் கொண்டே இருங்கள்.

4.நீங்கள் எந்தத் துறையில் வேலை தேடுகின்றீர்களோ அந்தத் துறையில் உங்கள் நட்பு வட்டாரத்தை பெருக்கிக் கொள்ளுங்கள்.ஏனென்றால் அவர்கள் மூலம் வேலை வாய்ப்புக்கள் பற்றிய தகவல்கள் ஏராளமாக உங்களுக்கு கிடைக்கும்.

5.எந்தக் கட்டத்திலும் நம்பிக்கையை இழக்கதீர்கள்.ஒரு நேர்முகத் தேர்வில் தோல்வியடைந்தாலும் துவண்டு போகாமல் அடுத்த முயற்சியில் இறங்குங்கள்.உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை வந்தால் தான் மற்றவர்களுக்கு நம்பிக்கை வரும்.

உங்களுக்கு பிடித்த வேலையை பெற மேலே உள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள் உங்களுக்கும் வெற்றி நிர்சயமாக கிடைக்கும்.

11 செப்டம்பர் 2008

மிதிவெடி


இன்று எமது நாட்டில் பல பகுதிகளிலும் மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஒன்று மிதிவெடி. வடக்கின் யாழ் மாவட்டதத்திலும் அதிகளவு உள்ளது.இன்று மிதிவெடிகளால் பாதிக்கப்பட்ட நிறைய பேர் எம்முடன் வாழ்ந்து வருகின்றார்கள்.மிதிவெடிகளை கண்டுபிடித்து எடுத்து அழிப்பதற்கு பல உள்நாட்டு,வெளிநாட்டு நிறுவனங்கள் யாழ் மாவட்டத்தில் செயற்பட்டு கொண்டு இருக்கின்றார்கள்.பெரும்பாலும் கிரமப்புறங்களிலேயே இவை அதிகமாக காணப்படுகின்றது.ஆனால் நானும் ஒரு கிராமத்தை சார்ந்தவன் என்ற வகையில் கிரமப்புற மக்களுக்கு மிதிவெடிகள் பற்றிய விழிப்புணர்வு பெரிதாக இல்லை என்றே கூறலாம். மிதிவெடி பற்றி எவ்வளவு அறிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதற்கு ஒரு சிறிய சம்பவம் ஒன்றை இங்கு பதியலாம் என்று ஒரு ஆவல்.

2007ம் ஆண்டின் முற்பகுதியில் நான் கரிதாஸ் கியூடெக் நிறுவனத்தின் சமாதான நிகழ்ச்சி திட்டத்தில் இணைந்து இருந்தேன்.அக்காலப்பகுதியில் சிறுவர்களுக்கான "மகிழ்களம்" என்ற ஒரு நிகழ்ச்சிச் திட்டத்தை கியூடெக் நிறுவனத்தின் சமாதான பிரிவு வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பாடு செய்திருந்தது.(அந்த கிராமத்தை சூழ மிதிவெடி அகற்றும் பணி நடை பெற்றுக்கொண்டிருந்தது)
இதற்காக நானும் எங்கள் குழுவில் உள்ள ஏனைய பல நண்பர்களும் சென்றிருந்தோம்.அந்தக் கிராமத்தில் ஏறத்தாழ சுமார் 50க்கு மேல் சிறிய பிள்ளைகள் இருப்பதாக கூறினார்கள்.அங்கு காலையில் சென்றபோது 25க்கும் குறைவான சிறுவர்களே வந்திருந்தார்கள்.இதனால் ஏனைய சிறுவர்களையும் நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பதற்காக எம்முள் சிலரை சிறுவர்களுடன் விட்டு விட்டோம்.பின் நாங்கள் சிறு சிறு குழுக்களாகச் சென்று வீட்டில் நிற்கும் சிறுவர்களை நிகழ்வுக்கு அழைத்து வருவதே நமது நோக்கம்.அதன்படி பல குழுக்களாக ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்றோம். நாங்கள் சென்ற இரண்டாவது வீட்டின் முன்பகுதியிலே கோழிக் கூடு ஒன்று அமைந்திருந்தது. அதை பார்த்த எங்களுக்கு ஒரே ஆச்சரியம் ஏனென்றால் அந்த கோழிக் கூடு மிதிவெடிகளை அடையாளப்படுத்தி மிதிவெடி அகற்றும் பணியாளர்களால் நாட்டப்படும் சிவப்பு வெள்ளை நிறத்திலான கோல்களால்/தடிகளால் செய்யப்பட்டிருந்தது.உடனேயே நாங்கள் அந்த வீட்டின் பெரியவரை பார்த்து இது என்னவென்று தெரியுமா என கேட்ட போது அவர் "இதுகள் உங்க எல்லா இடத்திலேயும் அந்த ஆட்கள்(மிதிவெடி அகற்றும் பணியாளர்களால்) நட்டு இருக்கிறார்கள் நாங்கள் அங்கால் பக்கம் போய் வரும்போது எடுத்தவை" என்று கூறிய பதில் எங்களை மேலும் வியப்பில் ஆழ்த்தியது.அவர் மிதிவெடியை பற்றியோ அல்லது அதற்கு பயன்படும் அந்த சிவப்பு வெள்ளை கோல்களை பற்றியோ தெளிவாக அறிந்து இருக்கவில்லை..பின்பு அவருக்கு இதைப்பற்றி சிறிய விளக்கத்தை அளித்து விட்டு ஏனைய சிலவீடுகளுக்கும் சென்றோம்.

பின்னர் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு திரும்பிய பின் இவற்றை பற்றி சிறுவர்களுக்காவது பூரண விளக்கத்தை அளிக்க வேண்டுமென முடிவு செய்தோம்.பின்னர் சிறுவர்களை அமர்த்தி அந்த சிவப்பு வெள்ளை நிற தடியை காட்டி உங்கள் வீட்டில் இதைப்போல் கோல்கள் இருந்தால் கையை உயர்த்துங்கள் என கூறியவுடன் ஏறத்தாழ எல்லா சிறுவர்களுமே கையை உயர்த்தினார்கள்.அத்துடன் சிறுவர்கள் மிதிவெடிகள் பற்றி எதுவுமே அறிந்து இருக்கவில்லை.வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறினால் தானே சிறுவர்கள் அதை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.அங்கே பெரியவர்களுக்கே மிதிவெடி பற்றிய பூரண அறிவு இல்லை எனும் போது சிறுவர்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை. எனவே மிதிவெடி பற்றி,அந்த கோல்களை பற்றி ஓரளவு தெளிவாக சிறுவர்களுக்கு புரியும் வகையில் அந்தவேளையில் எங்களால் விளக்கம் அளிக்க முடிந்தது.மிதிவெடி பற்றிய அறிவை வழங்குவதற்கு பல நிறுவனங்கள் செயற்பட்டு கொண்டுதான் இருக்கின்றார்கள்.ஆனாலும் இவ்வாறு எமக்கு தெரியாமல் மிதிவெடி பற்றிய விழிப்புணர்வு அற்ற மக்களாக எத்தனையோ பல கிராம மக்கள் இன்றும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். இந்த மிதிவெடி தொடர்பாக அறிவை பெறுவதற்கு நிறுவனங்களைத் தேடி ஒரு போதும் மக்கள் வரமாட்டார்கள் மாறாக அந்த மக்களை தேடிச் சென்று தான் விழிப்புணர்வை வழங்க வேண்டும்.ஆனால் நாடு தற்போது இருக்கும் நிலையில் இது எவ்வாறு சாத்தியமாகும் என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியே?????

வானொலியும் நானும்

எனக்கு வானொலி மீது எப்படி ஈர்ப்பு ஏற்பட்டது என்பதை இப்போது நினைத்துப் பார்க்கின்றேன்.எனது நான்காவது வயதிலேயே(1990ம் ஆண்டளவில்) முதன்முதலில் வானொலிப் பெட்டி ஒன்றை எனது தந்தையர் வீட்டிற்கு வாங்கி வந்தார். முதன் முதலில் வானொலியை பார்த்ததும் எனக்கு அதன் மேல் ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதென்று கூறலாம்.
அந்த காலப்பகுதியில் இன்று போல் பல வானொலிகள் இருந்திருக்கவில்லை முதலில் அப்பா கொண்டு வரும் சினிமா பாடல்களை கேட்பேன் பின்பு நான் நினைக்கின்றேன் 1991ன் ஆரம்பத்தில் என்று அப்போது யாழ்ப்பாணத்தில் புலிகளின் குரல் வானொலி இரவு 8 மணி தொடக்கம் 9 மணிவரை ஒலிபரப்பை நடத்தி வந்தது என்று. நான் அடம் பிடித்து நித்திரை கொள்ளாமல் 8 மணிவரை இருந்து புலிகளின் குரல் வானொலியை கேட்பேன் அப்போது எனக்கு வானொலியை எப்படி இயக்குவது என்று கூடத் தெரியாது அம்மா தான் வானொலியை இயக்கி அலைவரிசையையும் பிடித்து விடுகின்றது வழக்கம்.இப்படியாக எனக்குள் இந்த வானொலி துறை மீது ஆர்வம் மெதுவாக புகுந்து கொண்டது.அப்போதே எப்படி வானொலி நிலையத்திலிருந்து ஒலிபரபுகின்றார்கள் என்று தெரிந்து கொள்ள நிறைய ஆர்வம் அப்போது நான் சிறியவன் ஆகையால் என்னால் அதை தெரிந்துகொள்ள முடியவில்லை. இப்படியாக ஒவ்வொரு நாளும் 8 மணி தொடக்கம் 8.30 மணி செய்தி அறிக்கை முடியும் வரை இருந்து வானொலியில் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை கேட்டுவிட்டுத்தான் படுப்பது வழக்கம்.இவ்வாறு இருக்கையில் 1991 நடுப்பகுதியில் ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக வானொலிக்கும் எனக்குமான இடைவெளி அதிகரித்தது.அப்போது வானொலியை இயக்குவதற்க்கு தேவையான பற்றரிகளின் தட்டுப்பாடு மற்றும் அதிகரித்தவிலை காரணமாக என்னால் வானொலியை கேட்க முடியாது போய்விட்டது.
பின்பு 1995 ம் ஆண்டு மீண்டும் வானொலியை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.அப்போது நாங்கள் இடம் பெயர்ந்து பருத்தித்துறையில் இருந்தோம் பாடசாலை விடுமுறைக்காக யாழ்ப்பாணம் மானிப்பாயில் உள்ள எனது பெரிய தாயாரின் வீட்டிற்கு சென்றேன் அங்கு ஒரு வானொலி இருந்தது அதிலே MW அலைவரிசையில் இந்தியாவில் இருந்து ஒலிபரப்பாகும் தூத்துக்குடி வானொலியின் ஒலிபரப்பை இரவில் 8.45 மணி முதல் 9.15 மணிவரை கேட்ப்பேன் அதுவும் சிறிது நாட்கள் மட்டுமே நீடித்தது.
பின் 1996 ம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்த காலம் இலங்கை வானொலியில் அதை நேரடியாக வர்ணனை செய்து கொண்டிருந்தார்கள் எனக்கு அதை எப்படியாவது கேட்கவேண்டும் என்ற ஆசை ஆனால் அந்த நேரத்தில் பற்றரிகளுக்கு கடும் தட்டுப்பாடு அந்த நேரத்தில் பருத்தித்துறை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் குடும்ப அட்டைக்கு இரண்டு பற்றரிகள் வழங்கப்பட்டது ஒருவாறு அடம் பிடித்து எங்கள் ஏனைய உறவினர்கள் இருவருடைய குடும்ப அட்டைகளையும் வாங்கிச் சென்று ஒரு மாதிரியாக பற்றரிகளை வாங்கி வந்து வானொலியில் உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளின் வர்ணனையை கேட்டது இப்போதும் மறக்கமுடியாத சம்பவமாகத்தான் இருக்கிறது.நான் நினைக்கின்றேன் அப்போது மிகவும் வேகமாகவும் தமிழ் உச்சரிப்பு பிழையில்லாமலும் வர்ணனை செய்த ஒரு அறிவிப்பாளர் இருந்தார். எனக்கு சரியாக இன்று அவர் நினைவிற்கு வரவில்லை.அதன் பின்பு மீண்டும் இடப்பெயர்வு. இந்தமுறை வானொலியையும் விட்டுவிட்டுத்தான் ஓடவேண்டிய நிர்ப்பந்தம்.நான் 1996 ம் ஆண்டுக்கு பின்னர் 2001 ம் ஆண்டிலேயே வானொலியை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.அதுவும் வெளிநாட்டிலிருந்து அப்பா வரும் போது அடம் பிடித்து ஒரு வானொலியை வாங்கி கொண்டுவரச் செய்தேன்.அதன் பிறகு தொடர்ச்சியாக வானொலியை கேட்க ஆரம்பித்தேன் பாடசாலை விட்டு வந்ததும் இலங்கை வானொலியின் வர்த்தக சேவையை கேட்பேன் அம்மா வந்து பிரத்தியேக வகுப்புக்குச் செல் என திட்டும் வரையும் கேட்பேன் அப்போதும் அதிகம் இந்திய வானொலிகள் தான் கேட்பது வழக்கம்.ஏனென்றால் இந்தியாவின் பல வானொலி சேவைகள் (ஆல் இந்தியா வானொலி, கொடைக்கானல் வானொலி)போன்றவை எமக்கு தெளிவாக கேட்கும் என்பதாலேயே, அத்துடன் இலங்கையின் தனியார் வானொலிகள் யாழ்ப்பாணத்திற்கு தனது சேவைகளை வழங்கி இருந்திருக்கவில்லை.ஆனாலும் சில காலங்களில்(பனிக் காலங்களில்) சக்தி எவ்.எம் வானொலியை மிகத் தெளிவாக யாழ்ப்பாணத்தில் கேட்க கூடியதாக இருந்தது.அப்போது அவற்றின் நிகழ்ச்சிகள் சிலவற்றை நான் விரும்பி கேட்டிருக்கின்றேன்.2002ம் ஆண்டளவில் சக்தி எவ் எம்மும் பின்னர் சூரியன் எவ் எம்மும் தனது ஒலிபரப்பை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தார்கள்.அதன் பின்னர் இவற்ருடன் எனது வானொலி நேரங்களை செலவு செய்தேன்.2002 ல் க.பொ.த. சாதாரண தரம் படித்துக்கொண்டு இருந்தபோது நானும் ஒரு அறிவிப்பாளனாக வர வேண்டும் வானொலியை பற்றிய மேலதிக தகவல்களை அறிய வேண்டும் என்ற ஆர்வமும் என்னுள் துளிர் விட்டது.யாழ்ப்பாணத்தில் இருந்தால் அறிவிப்பாளன் ஆகுவது வெறும் கனவாக்கிவிடும் என்று நினைத்து கொழும்பு வந்தேன் ஆரம்பத்தில் நான் நினைத்தேன் வெகு இலகுவாக இத்துறைக்குள் நுழைந்து விடலாம் என்று பின்பு தான் தெரிந்தது அது எவ்வளவு முட்டாதள்தனமான எண்ணம் என்று. 2008ன் பிறகு இதுவரை இரண்டு வானொலிகளின் நேர்முக் தேர்வுக்குச் சென்று கற்றுக்கொள்ள வேண்டிய சிலவற்றை கற்றுக்கொண்டு விட்டேன்.வானொலித்துறை/ஒலிபரப்புத்துறை என்பது ஏனைய துறைகளை விட மிகவும் வித்தியாசமானது,எம்மையே அர்ப்ணித்து வேலை செய்ய வேண்டும்,ஒலிபரப்புத்துறைக்குள் நுழைவது என்பது எல்லோருக்கும் அவ்வளவு சுலபமானது இல்லை,கடினமான பல சவால்களையும்,போட்டிகளையும் எதிர் கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதையும் நன்றாக புரிந்து கொண்டேன்.ஆனாலும் வானொலி அறிவிப்பாளன் பணி மீது எனக்கு உள்ள ஆர்வம் காரணமாக இந்தச் சவால்களை எதிர் கொண்டு நிர்ச்சயமாக ஒரு வானொலி அறிவிப்பாளனாக வந்துவிடுவேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை என்னுள் உறுதியாக இருக்கின்றது.அந்த உறுதியான நம்பிக்கையுடன் முயற்சி செய்து கொண்டு இருக்கின்றேன்.