A Promised Land

14 டிசம்பர் 2009

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் சங்கடங்களும்

சரத்பொன்சேகாவின் அரசியல் பிரவேசத்தில் ஏற்கனவே சூடுபிடித்துள்ள இலங்கையின் அரசியல்களம் எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தல்
என அறிவித்தபின் மேலும் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் சிறுபான்மையினரான தமிழ் மக்கள் மத்தியில் அல்லது அவர்கள் சார்பான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மத்தியிலும் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பான நிலமை இன்னும் தெளிவில்லாமல்தான் இருக்கின்றது. ஏனென்றால் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும்தான் முதல் காரணம். தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு இரு வேட்பாளர்களும் இதுவரையும் தவறிவிட்டனர் என்றனர் என்றே கூறவேண்டும்.

சரத் பொன்சேகா இல்லாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சிக்குதான் எங்களுடைய வாக்கை அளித்திருப்போம் என்று கூறுவோரும் இருக்கின்றார்கள். ஆனாலும் இரு வேட்பாளர்களும் தமிழ் மக்கள் மத்தியில் அவ்வளவான நல்ல கருத்து இல்லையென்றுதான் கூறவேண்டும். தற்போதைய நிலையில் இரு வேட்பாளர்களும் தமிழ் மக்களுடைய வாக்கினை குறிவைத்து தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். இதனுடைய ஒரு கட்டம்தான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினுடைய யாழ் விஜயம்.

மறுபுறத்தில் சுதந்திர கட்சியினரும் தங்களுது பிரச்சாரங்களினையும் ஆரம்பித்திருக்கின்றார்கள். யுத்த வெற்றியினையே சிங்கள மக்களிடையே நடக்கும் பிரச்சாரங்களின்போது இரு தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றார்கள்.
உண்மையிலே தமிழ் மக்களுடைய நிலையோ யாருக்கு வாக்களிப்பது என்று வரும்போது இத்தேர்தலில் சங்கடமான நிலைதான். பொது வேட்பாளர் சரத் பொன்சேகா இனவாத கருத்தினை கொண்டவர் என்ற நிலைப்பாடு காணப்படுகின்றது. அத்தோடு யாழ் மக்களுக்கு அவரைப்பற்றி ஓரளவுக்கு தெரியும்; ஏனென்றால் யாழின் கட்டளை தளபதியாக இவர் இருந்தவர்.இவரின் காலப்பகுதியில்தான் யாழில் சர்ச்சைக்குரிய விடயங்கள் பல உலக அளவில் பேசப்பட்டன. ஆனாலும் தற்போது தனது இராணுவ சீருடையினை கழைந்து அரசியிலில் நுழைந்து ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதால் தனக்கு தமிழ் மக்களின் ஆதரவு இருக்கும் என்றும் நம்புகின்றார். அத்தோடு தமிழ் மக்களின் ஆதரவை பெறுவதற்கு இவர் முகாம் மக்கள் தொடர்பாகவும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

மறுபுறத்தில் சுதந்திர கட்சியின் ஆட்சியில்தான் தமிழர்கள் அதிகமான கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்தது என்ற கருத்தும் காணப்படுகின்றது. ஆனாலும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி தனது ஆதரவினை சுதந்திர கட்சிக்கும் வேட்பாளரான மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கியிருக்கின்றது. ஆனாலும் சரத்பொன்சேகாவால தம்முடைய் வாக்குவங்கி உடையலாம் என்று சுதந்திரக்கட்சியின் கருதுகின்றார்கள். இதனாலேயே சரத் பொன்சேகாவிற்கு எதிரான கருத்துக்களையும் சரத் தமிழ் மக்களுக்கு எதிரானவர் என்ற கருத்தினையும் மக்கள் மத்தியில் பகிரங்கமாக சுதந்திரகட்சியின் பிரச்சார கூட்டங்களில் கூறிவருகின்றனர்.
தமிழ் கூட்டமைப்போ இது தொடர்பாக எந்த முடிவினையும் இதுவரைக்கு தெரிவிக்கவில்லை. சரத்பொன்சேகா இல்லாமல் வேறு ஒருவர் வேட்பாளராக நின்றிருந்தால் கூட்டமைப்பு தன்னுடைய ஆதரவினை ஐதேகவிற்கே வழங்கியிருக்கும் ஆனால் தற்போது அது முடியாத காரியம். மக்களுடைய முடிவு தெரியாமல் யாருக்கும் ஆதரவளக்கவில்லை தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்த பிற்பாடுடு அறிவிக்கின்றோம் எனமட்டுமே தற்போதைக்கு கூட்டமைப்பினரால் கூறமுடியும்.

தற்போது போட்டியிடும் பிரதான இருதரப்பினர்களிடம் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் காணப்படுகின்றது. அதேபோல சர்வதேச சமூகத்துக்கும்கூட இருக்கத்தான் செய்கின்றது. இந்த தேர்தலில் இந்தியாவும் மறைமுகமாக தற்போதைய ஜனாதிபதியே அடுத்த ஜனாதிபதியாகவும் வரவிரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எப்படி இருந்தாலும் தமிழ் மக்களுடைய வாக்குகள் யாருக்கு என்பதை இன்னமும் சரியாக கணிப்பதற்கு சற்று சிக்கல் நிலையே காணப்படுகின்றது. யுத்தம் இலங்கையில் முடிவுற்ற நிலையிலே தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இரண்டாவது பதிவர் சந்திப்பு எனது பார்வை

கொழும்பு தமிழ் சங்கத்தில்இடம்பெற்ற 1வது பதிவர் சந்திப்புக்கு செல்லாததனால் எனக்கு இதுதான் முதலாவது பதிவர் சந்திப்பாக அமைந்தது. உண்மையிலே இந்த சந்திப்பானது மிகவும் ஒரு ஆக்கபூர்வமான சந்திப்பாகவே அமைந்ததென்று கூறலாம் எனென்றால் அங்கு கதைக்கப்பட்ட விடயங்கள்.
முதலில் கலந்துரையாடப்பட்ட பதிவு எழுதுதல் என்பது பற்றிய கலந்துரையாடல்கூட பதிவுகள் எப்படியிருக்கவேண்டும் தனித்துவங்கள் விருப்பங்கள்போன்றவற்றினை ஆழமாக அலசியிருந்தது. தூங்கியவர்களை எழுப்புவதுபோல அப்பப்போ புல்லட் அடித்த லூட்டிகளுக்கும் அளவில்லை. அதற்கு பிறகு பதிவர் லோஷன் தனது கருத்துக்களையும் தெரிவித்திருந்தார்.
அதேபோலத்தான் பெண்களும் வலையுலகமும் அனானிகள் போன்ற தலைப்புக்களை விவாதிக்கவும் பல தகவல்களை அவற்றின்மூலம் பெறவும் கூடியதாக இருந்தது.
அதேபோல மது தனது பாணியில் கூகிளில் ஆரம்பித்திருக்கும் இலங்கை தமிழ் பதிவர்கள் என்கின்ற குழுமத்தினை எவ்வாறு உபயோகப்படுத்துவது போன்ற பல தொழில்நுட்ப விடயங்களை கூறியது மிகவும் பயனுள்ளதாவே அமைந்திருந்தது. அதேபோல் மாதத்திற்கு ஒருமுறை குழுமத்திலே குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றுகூடி கதைப்பது என்ற கருத்து மிகவும் வரவேற்கப்படக்கூடிய ஒன்று.
இறுதியாக ஏற்பாட்டுகுழுவினர் ஏற்பாடு செய்திருந்த இருவிளையாட்டுகளில் நாம் பங்குபற்றினோம் ஓன்றில்கூட வெற்றிபெற முடியவில்லை.
ஆகமொத்தத்தில் இரண்டாவது பதிவர் சந்திப்பானது மிகவும் ஒரு காத்திரமான சந்திப்பாகவும் அதேவேளையில் வெற்றிகரமான சந்திப்பாகவே நிறைவு பெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்டு பல பதிவர்களுடன் அளவளவான ஒரு அருமையான சந்தர்ப்பமும் எனக்கு கிடைத்ததென்றுதான் நான்கூறவேண்டும்.
அடுத்த சந்திப்பு எப்போது?

11 டிசம்பர் 2009

இங்கையும் வேட்டைக்காரனா (என்ன கொடுமை இது....)

இது எனக்கு வந்த பேஸ்புக் மெசேஜ்


வேட்டைக்காரன் படத்தை ஓட்டுவதற்கு பயபுள்ளைங்க ரொம்ப றிஸ்க் எடுக்கீனம்போல
படத்தை சொடுக்கி பெருசாக பார்க்கலாம்

05 நவம்பர் 2009

கண்ணகிபுரம் எங்கே இருக்கின்றது உங்களுக்கு தெரியுமா..."

யா ரிவி
நிறுவனம் தயாரித்து ஆகஸ்ட் 5ம் திகதிமுதல் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சகல தமிழ் மற்றும் சிங்கள அலைவரிசைகளிலும் புதன் மற்று வெள்ளி ஆகிய தினங்களில் மாலை 6.45 மணிக்கு ஒலிபரப்பப்படும் வானொலி நாடகம்தான் “கண்ணகிபுரம்”.


19 முதல் 29 வரையான கிரமங்களில் உள்ள இளையோர்களையும் நகர்புறங்களை அடுத்துள்ள இளையோர்களை இலக்காக கொண்டு தயாரிக்கப்படும் இந்த நாடகம் கற்பனையில் உருவாக்கப்பட்ட கண்ணகிபுரம் என்ற கிராமத்தை மையமாக வைத்தே தயாரிக்கப்படுகின்றது. கண்ணகிபுரம் கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளை சுவாரசியமான முறையில் 15 நிமிடங்களை கொண்ட வானொலி நாடகமாக தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பப்படுகின்றது.

இந்த நாடகத்தொடரை குறிக்கும் விதமாக கண்ணகிபுரம் என்ற இருமொழிப்பாடலொன்றும் வெளியிடப்பட்டிருக்கின்றது. அத்தடன் ஒவ்வொரு நாடகத்தின் இறுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலினை குறுஞ்செய்தியூடாக அனுப்பும் 5 அதிஷ்டசாலிகளுக்கு யா ரிவி நிறுவனம் பெறுமதியான பரிசுகளையும் வழங்கி வருகின்றது.
பாடலினை கேட்க

ஒலிபரப்பாகும் அலைவரிசைகள் : - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய, வர்த்தக சேவைகளிலும் பிராந்திய ஒலிபரப்புச் சேவைகளான சிற்றி எப்.எம்., ரஜரட்ட எப்.எம்., கந்துரட்ட எப்.எம்., வயம்பஹன்ட, கொத்மலை எப்.எம்.,
தென்றல் எப்.எம்., பிறை எப்.எம்., மற்றும் யாழ். எப்.எம்

தென்றலில் மாலை 5.45 மணிக்கு இந்நாடகம் ஒலிபரப்பாகும்

மேலதிக மற்றும் பரிசு விபரங்களுக்கு -
இங்கே அழுத்துங்கள்

தயாரிப்பு - Video


தீமிதிப்பு - உடப்பு


கொழும்பிலிருந்து சுமார் 280 கிலோமீற்றர் தூரத்தில் வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு கடற்கரை கிராமம்தான் உடப்பு. அடிப்படையில் தமிழ் கிராமமான இதில் ஏறத்தாள 10 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 25000க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றார்கள்.

இவர்களுடைய மூதாதையர்கள் இந்தியாவில் ஆட்சிசெய்த மொலாய சக்கரவர்த்தியின் கொடூர ஆட்சிக்கு பயந்து இராமேஸ்வரத்திலிருந்து தாதன் என்பவனுடைய தலைமையில் இலங்கையின் மன்னாருக்கு வந்து அங்கிருந்து புத்தளம் ஊடாக உடப்பில் குடியேறியவர்கள் என்று கூறப்படுகின்றது.

கடற்தொழிலே இவர்களுடைய ஜீவனோபாய தொழிலாக அன்றுதொட்டு இன்றுவரை இருந்து
வருகின்றது. விவசாயத்தை சிறியளவாக செய்தாலும் புகையிலை பயிரிடுவதையும் இவர்கள் தங்களுடைய சிறு தொழிலாக செய்து வந்தார்கள். காலப்போக்கில் புகையிலைத்தொழில் மருகிப்போய் இப்போது கடற்தொழிலை மட்டுமே மேற்கொண்டு வருகின்றார்கள். இங்கிருப்பவர்களில் கூடுதலானோர் இந்துமதத்தை சேர்ந்தவர்களாகவும் அவர்களுடைய குல தெய்வமாக திரௌபதை அம்மனும் காணப்படுகின்றது.

இவர்களுடைய மூதாதையர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தபோது கொண்டுவந்த திரௌபதி அம்மனுடைய சிலையை கொண்டு இவ்வூரிலே திரௌபதி அம்மன் ஆலையத்தை நிறுவியிருக்கின்றார்கள். திரௌபதி அம்மனுக்காக ஆடிமாதத்தில் இவர்கள் கொண்டாடும் தீமிதிப்பு விழாவானது இவர்கள் கடைப்பிடிக்கும் விழாக்களில் முக்கியமானது. அத்தோடு இத்தீமிதிப்பு விழாவானது இலங்கையிலே அதிக பக்தர்கள் தீமிதிக்கும் விழாவாக காணப்படுகின்றது.

இவ்விழா அடிப்படையில் மஹாபாரத கதையினை கொண்டதாக காணப்படுகின்றது. திரௌபதாதேவி 5 கணவன்களை மணம் முடிக்கும்போது அவளுக்கு அங்கு ஒரு கெட்டபெயர் ஒன்று உருவாகும். இந்த கெட்டபெயர் வராதபடிக்கு தருமன் ஒரு வருடத்தோடு நாரத மஹாமுனிவர் கூறியபடி ஒருத்தனோடு ஒருத்தி வாழ்ந்து கற்புள்ளவள் என்று உலகத்திற்கு காட்டி அந்த கற்பை நிரூபித்து அடுத்தவனோடு வாழவேண்டும். இதன் நிமித்தமாகத்தான் அடுத்தவனோடு வாழவேண்டும் என்பதற்காக தீயில் இறங்கி தான் கற்புள்ளவள் என்றுகாட்டி அதை நிரூபித்து காட்டுவதுதான் இந்த தீமிதிப்பு என்று கூறப்படுகின்றது.

உடப்பில் தற்போது வாழுபவர்களின் மூதாதையர் இத்தீமிதிப்பு திருவிழாவினை ஒரு விதமான முரட்டு பக்தியியுடனேயே கொண்டாடியதாகவும் தற்போது அந்த முரட்டுப்பக்தி சற்று குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார். இத்தீமிதிப்பில் 5 வயது சிறுவர்கள் முதல் வயதானவர்களை பங்குளொள்ளுவது விசேடம்.

இத்திருவிழா நடக்கும் ஏககாலத்தில்தான் கதிர்காம திருவிழா நடைபெறுவதால் இவ்விழாவிழா இலகுவாக மக்களிடத்தில் இருந்து மறைந்து போகின்றது. நீங்களும் சந்தர்ப்பம் கிடைத்தால் மறக்காமல் சென்று இவ்விழாவினை பாருங்கள்.





படங்கள் : www.udappu.blogspot.com

12 மார்ச் 2009

பேய்க்கதைகள் (நாங்களும் சொல்லுவோமல்லே) -1

எல்லாருடைய மாடும் ஓடுதெண்டு கந்தையருடைய பேத்த கண்டும் ஓடிச்சுதாம்" இது எங்கட ஊரில நான் கேள்விப்பட்ட பழமொழி. அதே போலத்தான் தற்போது வலைப்பதிவுகளில் பிரபல்யமான ஆவிகதைகளை பற்றி நானும் எழுதலாமென யோசித்தேன்.
முதலிலேயே சொல்லுறன் எனக்கு இந்த ஆவி பேய் பிசாசு முனி .................[வேற ஏதும் இருந்தால் இடைவெளியில போட்டுக் கொள்ளுங்க]போன்றவற்றில் நம்பிக்கையில்லை. நாங்க சிங்கமெல்லே நள்ளிரவு 12 மணிக்கும் சுடலையை கடந்து செல்லுவோமெல்லோ. வேணுமெண்டால் என்னைப்பார்த்துதான் இவைகளை பயப்பட வேண்டும். இங்கே நான்கூறப்போகும் சம்பவங்கள் எனது நண்பர்களுக்கு நிகழ்ந்தவையாக அவர்கள் எனக்கு கூறிய உண்மைச் சம்பவங்கள்.

எனது நண்பர் ஒருவர் மலையகத்தில் தோட்டப் பாடசாலையொன்றில் ஆசிரியராக வேலைபார்த்து வந்தார். வார இறுதி நாட்களில் கொழும்புக்கு வந்து விடுவார். இப்படித்தான் ஒருநாள் கொழும்பில் நின்றபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இவரோடு பாடசாலையில் கடமையாற்றும் இன்னொரு ஆசிரியருடைய தம்பி திடீரென்று விபத்தொன்றில் இறந்து விட்டதாக அந்த தொலைபேசி அழைப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தெரிவிக்கப்பட்ட சனிக்கிழமை மாலை 3 மணியளவில் இருக்கும். இவரும் அந்த ஆசிரியரின் தம்பியின் மரணவீட்டில் கலந்து கொள்வதற்கென அவசரம் அவசரமாக புறப்பட்டார்.

அந்த ஆசிரியருடைய வீடு மலையகத்தில் உள்ள நகரிலிருந்து சுமார் 6 கிலோமீற்றர் உள்ளாக மலையில் இருந்தது. நண்பர் நகரத்தை மாலை ஏழு மணியளவில் சென்றடைந்துள்ளார். நகரத்திலிருந்து மரண வீட்டுக்கு செல்வதற்கு ஒரேயொரு பேரூந்து மாத்திரமே இருந்தது. அதுவும் வேறு ஒருபாதையால் செல்லும். குறிப்பிட்ட ஒரு இடத்தில் இறங்கி ஏறத்தாள இரண்டு கிலோமீற்றர் தூரம் நடந்தே செல்லவேண்டும். நண்பரும் சரியென பேரூந்தில் ஏறி அமர்ந்து விட்டார். சுமார் 7.30 மணியளவில் குறிப்பிட்ட அந்த இடத்தில் நடத்துனரால் குறிப்பிட்ட வழியை காண்பித்து நண்பரை இறக்pவிட்டார்களாம். சரியான இருட்டு ஒருபுறம் மெதுவாக மழையும் தூறிக்கொண்டிருந்தது. நண்பருக்கும் புது அனுபவம். தட்டுத் தடுமாறி ஒற்றையடிப்பாதையால் நடந்து சென்று கொண்டிருக்கிறார். பாதையங்கும் சனநடமாட்டம் இல்லாமல் காரிருள் சூழ்ந்து கிடந்தது. நண்பருக்கும் ஒரு சிறு பயம் மனதுக்குள் இருந்தது. வழியிலே பேச்சுக்கு யாரும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என எண்ணிக் கொண்டு நடந்து கொண்டிருந்தார். ஒரு அரைக் கிலோமீற்றர் சென்றிருப்பார் பாதையாரத்தில் அரிக்கன் லாம்புடன் உடலெல்லாம் போர்த்திய படி ஒரு மனிதர் நிண்டுகொண்டிருந்தார். நண்பரும் அவரை அணுகி மரணவீட்டுக் சென்று கொண்டிருப்பதாகவும் பாதை சரிவர தெரியவில்லையெனவும் உங்களுக்கு தெரிந்தால் சரியாக கூறும்படி கேட்டிருக்கின்றார். அதற்கு அந்த மனிதர் எனக்கு நன்றாக தெரியும் நான்போகும் பாதையில் தான் அந்த மரணவீடு இருக்கிறது என்றும் தன்னுடன் வரும்படியும் கூறியிருக்கிறார். நண்பருக்கும் நல்லதாக போய்விட்டது என்று எண்ணி அவரை பின்தொடர்ந்து சென்றிகொண்டிருக்கிறார்.

ஒரு பதினைந்து நிமிட நடைக்கு பின்னர் பதையிலிருந்து சற்று தூரத்தில் வெளிச்சம் தெரிந்த வீட்டை காட்டிய அந்த மனிதர் அதுதான் குறிப்பிட்ட ஆசிரியரின் வீடு எனவும் அங்கேதான் நீங்கள் செல்லவேண்டும் னெ கூறிசென்றுவிட்டார். நண்பரும் அவருக்கு நன்றிகூறி அந்த
மரணவீட்டை சென்று அடைந்தார். அங்கே இவருடைய சக ஆசிரியரை கண்டு துக்கம் விசாரித்துவிட்டு கதிரையில் அமர்ந்த போது மரண வீட்டுகாக அச்சடிக்கப்பட்ட துண்டுபிரசுரம் ஒன்றை ஒருவர் இவருக்கு கொடுத்துள்ளார். அதை வாங்கிப் பார்த்த நண்பர் அப்படியே உறைந்து விட்டாராம். அந்த துண்டுபிரசுரத்தில் இருந்த மரணமான ஆசிரியரின் தம்பியின் புகைப்படமும் இவரை ஒற்றையடிபாதையினால் கூட்டிவந்த மனிதருடைய படமும் ஒன்றாக இருந்ததே நண்பருடைய அதிர்ச்சிக்கு காரணமாகும். நண்பர் சத்தம் போடாமல் சக ஆசிரியரின் காதில் மெதுவாக இதை சொல்லியிருக்கிறார். அவம் சற்று நேரம் அதிச்சியடைந்து பின்னர் நிதானமடைந்தாராம். இறந்தவனுடன் பதினைந்து நிமிடம் நடந்து வந்ததை நினைக்கும் போது ஒரு திரில் அனுபவமாக இருக்கிறது என கதைக்கும்போது நண்பர் இப்போதும் எமக்கு கூறுவார்.