A Promised Land

05 நவம்பர் 2009

தீமிதிப்பு - உடப்பு


கொழும்பிலிருந்து சுமார் 280 கிலோமீற்றர் தூரத்தில் வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு கடற்கரை கிராமம்தான் உடப்பு. அடிப்படையில் தமிழ் கிராமமான இதில் ஏறத்தாள 10 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 25000க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றார்கள்.

இவர்களுடைய மூதாதையர்கள் இந்தியாவில் ஆட்சிசெய்த மொலாய சக்கரவர்த்தியின் கொடூர ஆட்சிக்கு பயந்து இராமேஸ்வரத்திலிருந்து தாதன் என்பவனுடைய தலைமையில் இலங்கையின் மன்னாருக்கு வந்து அங்கிருந்து புத்தளம் ஊடாக உடப்பில் குடியேறியவர்கள் என்று கூறப்படுகின்றது.

கடற்தொழிலே இவர்களுடைய ஜீவனோபாய தொழிலாக அன்றுதொட்டு இன்றுவரை இருந்து
வருகின்றது. விவசாயத்தை சிறியளவாக செய்தாலும் புகையிலை பயிரிடுவதையும் இவர்கள் தங்களுடைய சிறு தொழிலாக செய்து வந்தார்கள். காலப்போக்கில் புகையிலைத்தொழில் மருகிப்போய் இப்போது கடற்தொழிலை மட்டுமே மேற்கொண்டு வருகின்றார்கள். இங்கிருப்பவர்களில் கூடுதலானோர் இந்துமதத்தை சேர்ந்தவர்களாகவும் அவர்களுடைய குல தெய்வமாக திரௌபதை அம்மனும் காணப்படுகின்றது.

இவர்களுடைய மூதாதையர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தபோது கொண்டுவந்த திரௌபதி அம்மனுடைய சிலையை கொண்டு இவ்வூரிலே திரௌபதி அம்மன் ஆலையத்தை நிறுவியிருக்கின்றார்கள். திரௌபதி அம்மனுக்காக ஆடிமாதத்தில் இவர்கள் கொண்டாடும் தீமிதிப்பு விழாவானது இவர்கள் கடைப்பிடிக்கும் விழாக்களில் முக்கியமானது. அத்தோடு இத்தீமிதிப்பு விழாவானது இலங்கையிலே அதிக பக்தர்கள் தீமிதிக்கும் விழாவாக காணப்படுகின்றது.

இவ்விழா அடிப்படையில் மஹாபாரத கதையினை கொண்டதாக காணப்படுகின்றது. திரௌபதாதேவி 5 கணவன்களை மணம் முடிக்கும்போது அவளுக்கு அங்கு ஒரு கெட்டபெயர் ஒன்று உருவாகும். இந்த கெட்டபெயர் வராதபடிக்கு தருமன் ஒரு வருடத்தோடு நாரத மஹாமுனிவர் கூறியபடி ஒருத்தனோடு ஒருத்தி வாழ்ந்து கற்புள்ளவள் என்று உலகத்திற்கு காட்டி அந்த கற்பை நிரூபித்து அடுத்தவனோடு வாழவேண்டும். இதன் நிமித்தமாகத்தான் அடுத்தவனோடு வாழவேண்டும் என்பதற்காக தீயில் இறங்கி தான் கற்புள்ளவள் என்றுகாட்டி அதை நிரூபித்து காட்டுவதுதான் இந்த தீமிதிப்பு என்று கூறப்படுகின்றது.

உடப்பில் தற்போது வாழுபவர்களின் மூதாதையர் இத்தீமிதிப்பு திருவிழாவினை ஒரு விதமான முரட்டு பக்தியியுடனேயே கொண்டாடியதாகவும் தற்போது அந்த முரட்டுப்பக்தி சற்று குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார். இத்தீமிதிப்பில் 5 வயது சிறுவர்கள் முதல் வயதானவர்களை பங்குளொள்ளுவது விசேடம்.

இத்திருவிழா நடக்கும் ஏககாலத்தில்தான் கதிர்காம திருவிழா நடைபெறுவதால் இவ்விழாவிழா இலகுவாக மக்களிடத்தில் இருந்து மறைந்து போகின்றது. நீங்களும் சந்தர்ப்பம் கிடைத்தால் மறக்காமல் சென்று இவ்விழாவினை பாருங்கள்.





படங்கள் : www.udappu.blogspot.com

கருத்துகள் இல்லை: