A Promised Land

விவசாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவசாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 ஜனவரி 2011

வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் கிழக்கு எதிர்கொள்ளப்போகும் சவால்கள்...

அண்மையில் கிழக்குமாகாணம் பாரியதொரு வெள்ள அனர்த்தத்தை சந்திருந்தது. இன்னமும் பல பிரதேசங்களில் 2 அடிக்கும் அதிகமான நீர் தேங்கிநிற்கின்றது. இதனால் அவ்வப்பிரதேசங்களிலிருந்து வெளியேறி பாடசாலைகளிலும் ஏனைய இடங்களிலும் தங்கியிருப்பவர்கள் தொடர்ந்தும் தமது வீடுகளுக்கு திரும்பமுடியாதிருக்கின்றனர். பல கிராமங்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வெள்ளஅனர்த்தம் கிழக்கு மக்களை இருவகையில் பாதித்திருக்கின்றது அதாவது ஒன்று வெள்ளம் ஏற்பட்டபோது சந்தித்த பாதிப்புக்கள் இரண்டாவது வெள்ளத்திற்கு பின்னர் அம்மக்கள் எதிர்கொள்ளப்போகும் பாதிப்புக்கள்.
வெள்ளம் ஏற்பட்டபோது சந்தித்த பிரச்சனைகளை ஓரளவுக்கு சிறப்பானமுறையிலே அங்குள்ள அரசாங்கபிரிவும் தொண்டர் அமைப்புக்களும் எதிர்கொண்டிருந்தன. இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதிலிருந்து அவர்களுக்கு தேவையான உணவு குடிநீர் போன்றவை வழங்கி அவை ஓரளவுக்கு சிறப்பாக செயற்பட்டன என்றுதான் கூறலாம் ஆனால் அனர்த்தத்திற்கு பின்ன் அம்மக்கள் சந்திக்க இருப்பவைதான் முக்கியமானதாகும். இதில் அம்மக்களுடைய ஜீவனோபாயம், கல்வி சுகாதாரம் போன்றவை மிகமுக்கியமாக இருக்கப்போகின்றது. 

இவ்வனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கூடுதலாக விவசாயத்தினை ஜீவனோபாயமாக கொண்டவர்கள் அத்தோடு மீன்பிடி, கால்நடைவளர்ப்பு, சுயதொழில்கள் என்பனவும் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. பொங்கலோடு வெள்ளாமையினையும் அறுவடையையும் செய்வோம் என்று காத்திருந்த மக்களுக்கு இவ்வனர்த்தம் மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. இடம்பெயர்ந்த முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் வீடுதிரும்பியதும் தங்களுடைய நாளாந்த வாழ்க்கையினை கொண்டுசெல்வதற்கு மிகவும் சிரமங்களை சந்திக்கப்போகின்றார்கள். ஏனென்றால் அம்மக்கள் தங்களுடைய ஜீவனோபாயதொழில்களை நம்பி அன்றன்றாடம வாழ்ந்துகொண்டிருந்த மக்கள். இதனால் இன்னும் ஒரு மூன்றுமாதங்களுக்கு அம்மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படபோகின்றார்கள்.

பொருளாதார ரீதியான பாதிப்பு ஏற்படும்போது அது அப்பிரதேசங்களில் கல்விநிலையில் அது பாரிய தாங்கங்களையும் ஏற்படுத்தும். பாடசாலை சிறார்களினுடைய புத்தகங்கள் சீருடைகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. புதிதாக புத்தகங்கள் அப்பியாசக்கொப்பகளை வாங்கிகொடுப்பதற்கு பெற்றோரிடம் பணமில்லை ஆகவே பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பமுடியாதநிலைதான் பெற்றோருக்கு ஏற்படும் இதன்காரணமாக பிள்ளைகளில் கல்வி ஆர்வம் குறைவதற்கு வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. "பிள்ளைகளின்ட கொப்பிபுத்தகங்கள் எல்லாம் வெள்ளத்தில அடிப்ட்டு போயிட்டுது இனி யுனிசெவ் ஆக்களிட்டத்தான் ஏதாவது கேட்கவேணும்" என்று ஒரு பாடசாலை அதிபருடன் கதைத்தபோது கூறினார். சடுதியான கல்வி வீழ்ச்சியினை தடுப்பதற்காகவே உடனடியாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு இருப்பதாக கல்வி திணைக்கள அதிகாரி ஒருவர் கூறினார். சில பாடசாலைகளில் இரண்டு மூன்று கட்டடங்களை இடம்பெயர்ந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு ஏனைய கட்டடங்களில் பாடசாலையை நடாத்துகின்ற நிலமைதான் தற்போது கிழக்கு மாகாணத்தின் இருக்கின்றது. ஆனாலும் எத்தனை பிள்ளைகள் பாடசாலைகளுக்கு வருவார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

இதேவேளை தேங்கிநிற்கின்ற நீரினுள் கால்நடைகள் இறந்து மிதப்பதினால் நீர் மாசுபட்டு காணப்படுகின்றது பாரிய சுகாதாக பிரச்சனைகளுக்கு அம்மக்கள் முகம்கொடுக்கவேண்டிய நிலைகாணப்படுகின்றது. பலருக்கு கால்களில் புண்கள்கூட ஏற்பட்டிருக்கின்றது
காலில் புண்ஏற்பட்டிருக்கிறது

உற்பத்தி துறையிலே ஐந்தாவது இடத்திலிருந்த கிழக்குமாகாணம் சடுதியாகவீழ்ச்சியினை சந்திக்கப்போகின்றது. பல கட்டுமானப்பணிகள் முற்றாக சேதமாகியிருக்கின்றன. இந்தநேரத்தில்தான் அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவை அப்பிரதேசங்களில் ஏற்பட்டிருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையினை கட்டியெழுப்புவதற்கு அரசா சாற்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பும் அவசியமானதாக இருக்கின்றது. ஆனால் ஏற்கனவே அரசு பல அரசசார்பற்ற நிறுவனங்களுடன் முரண்பட்டு அவற்றை நாட்டைவிட்டே வெளியேற்றியிருக்கின்றது இந்த நிலையில் இங்கு எஞ்சியிருக்கும் ஒரு சில அரசசார்பற்ற நிறுவனங்களினால் ஒரேநேரத்தில் பாதிக்கப்பட்ட எல்லாமக்களுக்கும் உரிய தேவைகளை நிவர்த்திசெய்யமுடியாது என்பது மறுக்கமுடியாத உண்மை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்து கிழக்கு மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கையை கல்வியை மீளக்கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே எல்லோருடைய அவா...