A Promised Land

இடி அமீன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இடி அமீன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 அக்டோபர் 2014

ஒரு மனிதனின் நடத்தையில் செல்வாக்கு செலுத்துபவை

உகண்டாவை ஆட்சி செய்த இடி அமீனைப் பற்றி பிரபு சங்கர் எழுதிய புத்தகத்தை 3வது முறையாகவும் வாசித்து முடித்திருக்கின்றேன். இதற்கு காரணம் சாதரணமாக இருந்த ஒருவன் பின்னர் இராணுவ வீரனாகி இராணுவ கொமாண்டர் ஆகி பின்பு உகண்டாவினுடைய தலையெழுத்தையே மாற்றியிருக்கின்றான் என்றால் அது எப்படி சாத்தியம் என்ற தேடல்தான் மட்டுமல்லாது அவனுடைய கொடூர செயல்களுக்கு பின்னால் இருந்த காரணிகளை ஆராய வேண்டும் என்ற ஆவலும்தான்.


ஒருவனுடைய குணவியல்புகளை தீர்மானிப்பதில் அவனது குடும்பம் அவனது குல கோத்திரம் மற்றும் அவன்சார்ந்த இனக்குழுவினரது வாழ்க்கைமுறை மற்றும் அவர்களுடைய கலை கலாச்சாரம் இவை எல்லாமே அடங்குகின்றது. இடி அமீன் ஒரு மோசமான மனித மாமிசம் சாப்பிடும் சர்வதிகாரியாக பல அட்டூழியங்களை செய்த ஒரு கொடுங்கோலனாக இருப்பதற்கு காரணமும் அவனுடைய இனக்குழுவின் வாழ்க்கை முறையே என்பது புலனாகின்றது. அவனுடைய இனக்குழுவில் இரத்தம் குடிப்பது கொலை செய்வது போன்றவை பெரிய வியமாக காணப்படவே இல்லை. சிறுவயதுமுதலே அவற்றை நேரிலே கண்டுவந்திருந்த அவனுக்கு உகண்டாவின் ஆட்சியினை கைப்பற்றியவுடன் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள எவ்வளவு கொடூரமான செயல்களை செய்யமுடியுமோ அவ்வளவையும் செய்வதற்கு இலகுவாக முடிந்தது. அவன் மனித மாமிசம் உண்டதற்குகூட அவர்களது இனக்குழுவில் நடைமுறையில் இருந்து மூட நம்பிக்கையே இதற்கு காரணமாக இருந்திருக்கின்றது.


ஒரு மனிதனுடைய நடத்தையில் அவனைச் சார்ந்த சமூகம் பாரிய செல்வாக்கை செலுத்துகின்றது என்பதுதான் உண்மை. சமூகம் என்னும் போது அவனுடைய குடும்பமும் அடக்கம்.