A Promised Land

12 ஜனவரி 2011

பதிவர்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள்

கிழக்குமாகாணத்தில் மழை மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக பதிவர்கள் ஒன்று சேர்ந்து உலர் உணவுப்பொருட்கள் மற்றும் ஏனைய இதர பொருட்களை சேர்த்துக்கொண்டிருக்கின்றோம். தற்போதும் கிழக்கு மாகாணத்திலே தொடர்ந்து மழைபெய்து கொண்டிருக்கிறது. மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் அனேகமாக மக்கள் அனைவரும் முகாம்களிலேயே தஞ்சமடைந்து இருக்கின்றார்கள் என அறியக்கிடைத்தோம். அவர்களுக்கு போதிய உணவுகள் இல்லை, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லை. ஆகவே நாம் எம்மால் ஆன உதவிகளைச் செய்வோம். அதையும் விரைவாகவே செய்வோம்

உங்களால் முடிந்த பொருட்களைத் திரட்டி, இலக்கம் 16, லில்லி அவென்யு, வெள்ளவத்தையில் உள்ள உலக சமுதாய சேவா சங்கத்தின் அலுவலகத்தில் காலை 6.00 மணிமுதல் 12.30 வரையும், மாலை 3.00 மணிமுதல் 7.30 மணிவரையும் உங்களது பொருட்களைக் கையளியுங்கள். நீங்கள் மட்டுமல்ல, உங்களால் முடியுமானவரை உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் கேளுங்கள்.

மட்டக்களப்பில் இருந்து தொடர்ந்து பதிவர் ரமேசும், சந்ருவும் எம்முடன் தொடர்பில் உள்ளனர். எனவே, எம்மால் முடிந்த உதவிகளை இப்போதே செய்வோம். யாழ்ப்பாத்தில் உள்ளவர்கள் பதிவர் கிருத்திகனை தொடர்புகொள்ளவும். 

அத்துடன் இலங்கையிலுள்ள தமிழ் ஊடகங்களும் மக்களுக்கு தேவையான பொருட்களை சேரித்துக்கொண்டிருக்கின்றார்கள் அவர்களிடமும் உதவிகளை பொருட்களை கையளிக்க முடியும் உங்களுக்கு அருகில் உள்ள சேரிப்பு நிலையத்தில் உங்கள் பொருட்களை கையளிக்கலாம்


  • வெற்றி எப் எம் -கையளிக்கக் கூடிய இடங்கள்.. 


       1. கொழும்பு ஹவலொக் டவுன்
       மயூராபதி அம்மன் கோவில்

      2. IDM CITY CAMPUS 3
      இல.16,42வது ஒழுங்கை, வெள்ளவத்தை

     3. IDM CITY CAMPUS 3
     இல.79, பொன் ஜீன் வீதி, கொட்டாஞ்சேனை



  • சக்தி எப் எம் - 114310656 இந்த தொலைபேசி இலக்கதில் எந்தெந்த பிரதேசங்களில் பொருட்களை கையளிக்கமுடியும் என்கின்ற மேலதிக தகவல்களை பெறமுடியும்
நாம் எம்மால் ஆன உதவிகளைச் செய்வோம். அதையும் விரைவாகவே செய்வோம்     

10 கருத்துகள்:

ARV Loshan சொன்னது…

நல்ல விஷயம். இது உடனே செய்ய வேண்டிய விஷயம்.
யார் செய்கிறோம் என்பதல்ல அவர்களுக்கு உதவிகள் போய்ச் சேரவேண்டும் என்பதே முக்கியமானது.

ARV Loshan சொன்னது…

நல்ல விஷயம். இது உடனே செய்ய வேண்டிய விஷயம்.
யார் செய்கிறோம் என்பதல்ல அவர்களுக்கு உதவிகள் போய்ச் சேரவேண்டும் என்பதே முக்கியமானது.

Kiruthigan சொன்னது…

முடிந்த உதவிகளை செய்வோம்..

Jana சொன்னது…

வரவேற்கப்படவேண்டிய விடயம். யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பொருட்சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றார்கள். இன்றும் நாளையும் பொருட்களை அவர்களிடமும் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் ஒப்படைக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷஹன்ஷா சொன்னது…

முடிந்தவரை உதவ தயாராக உள்ளேன்....

Bavan சொன்னது…

கட்டாயம் உதவி செய்வோம்.

தர்ஷன் சொன்னது…

நல்ல விடயம்
இயன்றதை இங்கிருந்தே நண்பர்களை திரட்டி செய்ய முயல்கிறேன்.

கார்த்தி சொன்னது…

இயன்றவரை உதவுவோம்!

S.T.Seelan (S.Thanigaseelan) சொன்னது…

நல்ல முயற்சி பாராட்டுகள். என்னால் ஆன முயற்சிகளை ரமேஸ் உடன் சேர்ந்து செய்யத்தயாராக உள்ளோம்....http://vellisaram.blogspot.com/

சீலன்....

பெயரில்லா சொன்னது…

INSERT