நிறுவனம் தயாரித்து ஆகஸ்ட் 5ம் திகதிமுதல் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சகல தமிழ் மற்றும் சிங்கள அலைவரிசைகளிலும் புதன் மற்று வெள்ளி ஆகிய தினங்களில் மாலை 6.45 மணிக்கு ஒலிபரப்பப்படும் வானொலி நாடகம்தான் “கண்ணகிபுரம்”.


19 முதல் 29 வரையான கிரமங்களில் உள்ள இளையோர்களையும் நகர்புறங்களை அடுத்துள்ள இளையோர்களை இலக்காக கொண்டு தயாரிக்கப்படும் இந்த நாடகம் கற்பனையில் உருவாக்கப்பட்ட கண்ணகிபுரம் என்ற கிராமத்தை மையமாக வைத்தே தயாரிக்கப்படுகின்றது. கண்ணகிபுரம் கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளை சுவாரசியமான முறையில் 15 நிமிடங்களை கொண்ட வானொலி நாடகமாக தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பப்படுகின்றது.
இந்த நாடகத்தொடரை குறிக்கும் விதமாக கண்ணகிபுரம் என்ற இருமொழிப்பாடலொன்றும் வெளியிடப்பட்டிருக்கின்றது. அத்தடன் ஒவ்வொரு நாடகத்தின் இறுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலினை குறுஞ்செய்தியூடாக அனுப்பும் 5 அதிஷ்டசாலிகளுக்கு யா ரிவி நிறுவனம் பெறுமதியான பரிசுகளையும் வழங்கி வருகின்றது.
பாடலினை கேட்க

ஒலிபரப்பாகும் அலைவரிசைகள் : - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய, வர்த்தக சேவைகளிலும் பிராந்திய ஒலிபரப்புச் சேவைகளான சிற்றி எப்.எம்., ரஜரட்ட எப்.எம்., கந்துரட்ட எப்.எம்., வயம்பஹன்ட, கொத்மலை எப்.எம்.,
தென்றல் எப்.எம்., பிறை எப்.எம்., மற்றும் யாழ். எப்.எம்
தென்றலில் மாலை 5.45 மணிக்கு இந்நாடகம் ஒலிபரப்பாகும்
மேலதிக மற்றும் பரிசு விபரங்களுக்கு - இங்கே அழுத்துங்கள்
தயாரிப்பு - Video